Wednesday, December 20, 2023

ஞானத்தேடல் - Ep120 - திருமழிசை ஆழ்வார் - (Gnanathedal)


 திருமழிசை ஆழ்வார்  


திருமழிசையாழ்வார் தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சுதர்சன சக்கரத்தின் அம்சமாகத் திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர்


தந்தை : பார்க்கவ முனிவர்


தாய் : கனகாங்கி


திருவாளன், பங்கயச்செல்வி வளர்த்தவர்கள்




பொய்கையாழ்வார் (காஞ்சிபுரம் அருகில் திருவெக்கா) - பாஞ்சஜன்ய அம்சம்


பூதத்தாழ்வார் (கடல்மல்லை - கௌமோதகி கதை அம்சம்)


பேயாழ்வார் (திருமயிலை - நந்தகம் அம்சம்)


வேறு பெயர்கள்


பக்திசாரர்


உறையில் இடாதவர் - வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது)


குடமூக்கிற் பகவர் - என யாப்பருங்கல விருத்திகாரர் குறிப்பது இவரையே என்றும் சொல்லப்படுகிறது.


திருமழிசையார்


திருமழிசைபிரான்


திருவெஃகா திருத்தல பெருமாளுக்கு பல ஆண்டுகள் தொண்டாற்றி வந்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டியின் விருப்பப்படி அவளுக்கு இளமை வரம் கொடுத்தார்


கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய

செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்




கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய

செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய்படுத்துக் கொள்.


"ஓர் இரவு இருக்கை" என்று அழைக்கப்பட்டு இன்று மருவி "ஓரிக்கை"


நான்முகன் திருவந்தாதி


நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்

தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் - யான்முகமாய்

அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,

சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து


தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்

ஆருமறியார் அவன்பெருமை ஓரும்

பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்

அருள்முடிவ தாழியான் பால்


இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்

நின்றாக நின்னருளென் பாலதே - நன்றாக

நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே

நீயென்னை யன்றி யிலை


திருவேங்கடம் பற்றி நிறைய பாடல்கள் உள்ளது


இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்

இனியறிந்தேன் எம்பெருமான் உன்னை - இனியறிந்தேன்

காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை

நாரணன்நீ நன்கறிந்தேன் நான்


திருச்சந்த விருத்தம்


பூநிலாய வைந்துமாய்ப்

      புனற்கண்நின்ற நான்குமாய்,

தீநிலாய மூன்றுமாய்ச்

      சிறந்தகா லிரண்டுமாய்,

மீநிலாய தொன்றுமாகி

      வேறுவேறு தன்மையாய்,

நீநிலாய வண்ணநின்னை

      யார்நினைக்க வல்லரே


சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,

அவையும் நீயே, அடு போர் அண்ணால்

அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;

முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்

ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே;

இரண்டின் உணரும் வளியும் நீயே;

மூன்றின் உணரும் தீயும் நீயே;

நான்கின் உணரும் நீரும் நீயே;

ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே

அதனால், நின்மருங்கின்று மூவேழ் உலகமும்

மூலமும் அறனும் முதன்மையில் இகந்த

காலமும் விசும்பும் காற்றொடு கனலும்

- பரிபாடல் (நல்லெழுதியார்)


பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடையிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

- மாணிக்கவாசகர் (போற்றித் திருஅகவல்)


தன்னுளேதி ரைத்தெழும்

      தரங்கவெண்த டங்கடல்

தன்னுளேதி ரைத்தெழுந்

      தடங்குகின்ற தன்மைபோல்,

நின்னுளேபி றந்திறந்து

      நிற்பவும் திரிபவும்,

நின்னுளேய டங்குகின்ற

      நீர்மைநின்கண் நின்றதே


குலங்களாய வீரிரண்டி

      லொன்றிலும்பி றந்திலேன்,

நலங்களாய நற்கலைகள்

      நாவிலும்ந வின்றிலேன்,

புலன்களைந்தும் வென்றிலேன்பொ

      றியிலேன்பு னித,நின்

இலங்குபாத மன்றிமற்றொர்

      பற்றிலேனெம் மீசனே


ஆறுமாறு மாறுமாயொ

      ரைந்துமைந்து மைந்துமாய்,

ஏறுசீரி ரண்டுமூன்று

      மேழுமாறு மெட்டுமாய்,

வேறுவேறு ஞானமாகி

      மெய்யினொடு பொய்யுமாய்,

ஊறொடோ சை யாயவைந்து

      மாய ஆய மாயனே


ஆழ்வார்கள் திருவடிகள் சரணம்


Friday, December 15, 2023

ஞானத்தேடல் - Ep119 - நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை - (Gnanathedal)


நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை


வைணவர்களின் தமிழ் மறை


நான்கு வேதங்களின் சாரம்


12 ஆழ்வார்கள்


24 பிரபந்தங்கள்


நூலாக தொகுத்தவர் நாதமுனிகள் (தனி கதை)


முதலாழ்வார்கள் அயோநிஜர்கள்


பொய்கையாழ்வார் (காஞ்சிபுரம் அருகில் திருவெக்கா) - பாஞ்சஜன்ய அம்சம்


பூதத்தாழ்வார் (கடல்மல்லை - கௌமோதகி கதை அம்சம்)


பேயாழ்வார் (திருமயிலை - நந்தகம் அம்சம்)


பொய்கையாழ்வார்


வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று


ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,

ஈரடியும் காணலா மென்னெஞ்சே - ஓரடியில்

தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,

மாயவனை யேமனத்து வை


பூதத்தாழ்வார்


அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியா - நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்


மாலே. நெடியானே. கண்ணனே, விண்ணவர்க்கு

மேலா. வியந்துழாய்க் கண்ணியனே - மேலால்

விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்

அளவன்றால் யானுடைய அன்பு


பேயாழ்வார்


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,

என்னாழி வண்ணன்பால் இன்று


சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்

தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த

வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,

தேனமரும் பூமேல் திரு



ஈரத்தமிழ்


மொழியால் பக்தி பக்தியால் மொழி வளர்ந்தது


ஆழ்வார்கள் திருவடிகள் சரணம்

Sunday, December 10, 2023

ஞானத்தேடல் - Ep118 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கரந்தை, குளவி, கூதளம் - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  கரந்தை, குளவி, கூதளம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்


எண்ணும்‌ எழுத்தும்‌ எழுத்திற்‌ கனிந்த இயலிசையும்‌ 

பண்ணும்‌ பரதமும்‌ பாவகை யாவும்‌ படைத்தளித்தெம்‌ 

கண்ணும்‌ மனமும்‌ கருத்தும்‌ இனிக்கக்‌ கரந்தையினில்‌ 

நண்ணும்‌ மலரடி நாவார வாழ்த்துதும்‌ நற்றமிழே !

- கரந்தைக்‌ கோவை (தமிழ்‌ வாழ்த்து)


கரந்தைத் தமிழ்ச் சங்கம் 

தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியான கருந்தட்டைகுடியில் 1911ல் நிறுவப்பட்டது.

தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தனாரின் நீராரும் கடலுடுத்த பாடலை பாட வேண்டும் என்ற கோரிக்கை 1913 ஆம் ஆண்டு  ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 1914 முதல் கரந்தை தமிழ் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிவந்தனர். அதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு அரசு அப்பாடலை தம்ழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.


வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்


ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்

சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்

தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்

அனைக்கு உரி மரபினது கரந்தை

- தொல்காப்பியம் பொருளதிகாரம் 6


நெற்பயிர் அறுவடைக்கு பிறகு வயல்களிலும் முளைத்து கிடக்கும். நல்ல மணம் கொண்ட சிறு செடியினம்.

காய்த்த கரந்தை மா கொடி விளை வயல் – பதி 40/5

கரந்தை அம் செறுவில் துணை துறந்து களவன் - ஐங் 26

கரந்தை அம் செறுவின் வெண்_குருகு ஓப்பும் - அகம் 226


நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை - புறநானூறு 261


இது கொடிப் பூ மான்மடிக் காம்பு ஆவூர் மூலங்கிழார்

நறும் பூங் கரந்தை” என்றமைந்த தொடர் இதன் மணத்தைச் சொல்லுகின்றது.  . 


அம்பு கொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின்

செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி

வரிவண்டு ஆர்ப்பச் சூட்டி


செம் பூ கரந்தை புனைந்த கண்ணி – அகம் 269/11


வாந்தி யரோசகத்தை மாற்றும் பசிகொடுக்கும் 

சாய்ந்த விந்து வைக்கட்டுந் தப்பாதே- ஏந்தழகைத்

தண்டா துறச்சோர்க்குஞ் சாந்த பரிமளத்தைத்

தண்டாச் சிவகரந்தை என்று அகத்தியர் இதன் சிறப்பை பாராட்டுகிறார்.


கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு

வெட்டை தனியுமதி மேகம்போந்- திட்டச்

சொறிசிரங்கு வன்கரப்பான் றேற்றாது நாளும்

மறிமலமுந் தானிறங்கு மால்"


குளவி


நாறுஇதழ்க் குளவியொடு கூதளம் குழைய என்று புறப்பாடல் (380:7) சுட்டுகிறது.


கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக்

குளவி மேய்ந்த மந்தி துணையொடு

வரைமிசை உகளும் நாட! நீ வரின்,

கல் அகத்தது எம் ஊரே;

அம்பல் சேரி அலர் ஆங்கட்டே

ஐங்குறுநூறு 279


குல்லை,குளவி, கூதளம், குவளை,        

இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் 

என்ற பாடல் (நற்றிணை, 376:5-6) உணர்த்துகிறது. 


அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு

வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்

என்று திருமுருகாற்றுப்படை (வரிகள்: 191-192) சுட்டுகின்றது.


நீர்இழி மருங்கின் ஆர்இடத்து அமன்ற

குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி

அசையா நாற்றம் அசை வளி பகர

என்று அகம் (272:7- 9) பாடுகிறது.


எருதுப்போர்

இனத்தில் தீர்த்த துளங்குஇமில் நல்லேறு

மலைத்தலை வந்த மரைஆன் கதழ்விடை

மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக்

கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப

வள்இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய

நல்ஏறு பொரூஉம் கல்என் கம்பலை

என்று மலைபடுகடாம் (வரிகள் : 330-335) நயம்படக் காட்டுகிறது.


கூதளம்


கூதளி / வெண்டாளி / தாளிக்கொடி


கார் எதிர் தண் புனம் காணின் கை வளை

நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த

வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர்

ஆர் கழல்பு உகுவ போல

சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/4-8


ஆதாளியை ஒன்று அறியேனை அறத்

தீதாளியை ஆண்டது செப்புமதோ

கூதாள கிராத குலிக்கிறைவா

வேதாள கணம் புகழ் வேலவனே


வாழி! கரந்தைத்‌ தமிழ்ச்சங்கம்‌ வண்ணமுற 

வாழி! அதன்‌ வாய்மைச்‌ சிறப்புரைக்கும்‌ கோவையொடு 

வாழி! தமிழ்நாடு வான்புலவர்‌ வாழ்தமிழர்‌ 

வாழி! தமிழ்‌ பாடும்‌ வாய்‌.


ஞானத்தேடல் - Ep 117 - திருப்புகழ் சுப்பிரமணிய பிள்ளை (Gnanathedal)


 திருப்புகழ் சுப்பிரமணிய பிள்ளை


பூவரு மம னயிற்கரச் செவ்வேள் பொன்னடி யேநினைந் துருகித்

தரவரு மருண கிரிப்பெருங் கவிஞன் சாற்றிய திருப்புகழ் பலவும்

மேவரு நிலையை யுணர்ந்தவ னருளே மெய்த்துணை யாக்கொடுதேடி

யாவரும் பெறச்செய் சுப்பிரமணிய வேந்தல்சீ ரியம்புறற்பாற்றோ


வடக்குப்பட்டு தணிகாசலம் சுப்பிரமணிய பிள்ளை என்னும் வ.த. சுப்பிரமணிய பிள்ளை, செங்கல்பட்டில், 1846 டிசம்பர் 11ம் நாளன்று தணிகாசலம் பிள்ளை-இலக்குமியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.


வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர் களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர்.


வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை

மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே...


பொருள்:


வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே....


திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,


“எம் அருணகிரிநாதன் ஓதும்

   பதினாராயிரந் திருப்புக ழுமுதமே”

-வரகவி மார்க்க சகாய தேவர்


தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின.....


(1) 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன.

(2) 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன.

(3) அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன.

(4) 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன.

(5) 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.


உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது "என் சரித்திரம்" நூலில் பதிவுசெய்துள்ளார்.


அருணகிரிநாதர் இயற்றி அருளியுள்ள திருப்புகழ் பாடல்களின் எண்ணிக்கை 16000 என வரகவி மார்க்க சகாய தேவர் தனது பாடலில்,


"எம் அருணகிரி நாதர் ஓது பதினாயிரத் திருப்புகழழ் அமுதுமே" என்ற வாக்கால் கூறியுள்ளார்.


ஆனால் வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் விடா முயற்சியால் 1324 பாடல்கள் மட்டுமே சேகரிக்க முடிந்தது.


திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார்.


1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார்.


வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.


- இவரது மறைவிற்குப் பின் இவரது மகன்களான வ.சு. சண்முகம் பிள்ளை மற்றும் வ.சு. செங்கல்வராய பிள்ளை இருவரும் இணைந்து திருப்புகழ்ப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர்.

- அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் ஸ்ரீ செங்கல்வராயன், பணியை முன்னெடுத்துச் சென்று மேலும் பல பாடல்களைப் பெற்று, கந்தர் அநுபூதி, அலங்காரம், வகுப்பு உள்ளிட்ட திருப்புகழ்ப் பாடல்களின் தொகுப்பை வெளியிட்டார். செங்கல்வராயன் திருப்புகழ் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்து, “அருணகிரிநாதர் வரலாறு, நூல் ஆராய்ச்சியும்” என்ற தலைசிறந்த படைப்பை வெளியிட்டார். 

- இவருடைய வாழ்க்கை வரலாற்றை 121 பாடல்களாக 'திருப்புகழ் சுப்பிரமணிய நாயனார்’ என்ற தலைப்பில் வரகவி தென்னுர் சொக்கலிங்க பிள்ளை பாடியுள்ளார்.

- வ.சு. செங்கல்வராய பிள்ளையும் தந்தையின் மறைவுக்குப் பின் அவரது வாழ்க்கை வரலாற்றை, 'வ. சுப்பிரமணிய பிள்ளை சரித்திரம்’ என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்திருக்கிறார்.


நூல்கள்


எழுதியவை


- பிரச்னோத்திர காண்ட வசனம்

- கோகர்ணபுராண சாரம்

- சுந்தர விளக்கம் (1904)

- சிவஸ்தல மஞ்சரி (1905)


பதிப்பித்தவை


- திருப்புகழ் (இருபதிப்புகள்)

- திருவாரூர் புராணம்

- வேதாரண்ய புராணம்

- மானாமதுரை ஸ்தல புராணம்

- திருநீடூர் தல புராணம்

- நாமக்கல் செங்கழுநீர் விநாயகர் நவரத்தின மாலை

- திரு உத்தரகோச மங்கை மங்களேஸ்வரி பிள்ளைத்தமிழ்


மதுரை திருப்புகழ் சாமி ஐயர் என்று அழைக்கப்படும் இசைக்கலைஞர் லோகநாத ஐயர்

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள்

திருமுருக கிருபானந்த வாரியார்

திருப்புகழ் மணி என்று அழைக்கப்படும் ஸ்ரீ டி. எம். கிருஷ்ணசுவாமி ஐயர்.


மண்ணாசை என்கின்ற மாயையில் வீழ்ந்து மதிமயங்கி

எண்ணாது உனை மறந்தேயிருதேன் இனியாகிலும் என்

அண்ணா உன்றன் பொன்னடிக் கமலம் வந்தடையும் வண்ணம்

தண்ணார் அருள்புரியாய் தணிகாசல சண்முகனே.


Saturday, November 25, 2023

ஞானத்தேடல் - Ep 116 - நடராஜப் பத்து (Gnanathedal)


 நடராஜப் பத்து - சிறுமணவூர் முனிசாமி முதலியார்


நடராஜப் பத்து.


மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ

மறைநான்கின் அடிமுடியும் நீ

மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ

மண்டலமிரண்டேழு நீ

பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ

பிறவும் நீ யொருவ நீயே

பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ

பெற்றதாய் தந்தை நீயே

பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ

போதிக்க வந்த குரு நீ

புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ

யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ

எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே

என் குறைகள் யார்க்குரைப்பேன்?

ஈசனே சிவகாமி நேசனே!

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (1)


மானாட மழுவாட மதியாட புனலாட

மங்கை சிவகாமி யாட

மாலாட நூலாட மறையாட திறையாட

மறைதந்த பிரமனாட

கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட

குஞ்சர முகத்தனாட

குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட

குழந்தை முருகேசனாட

ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி

அட்ட பாலகருமாட

நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட

நாட்டியப் பெண்களாட

வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை

விரைந்தோடி ஆடி வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (2)


கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு

கனவென்ற வாழ்வை நம்பி

காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே

கட்டுண்டு நித்த நித்தம்

உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி

ஓயாமலிரவு பகலும்

உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது

ஒருபயனுமடைந்திலேனை

தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்

தாவரம் பின்னலிட்டு

தாயென்று சேயென்று நீயென்று நானென்று

தமியேனை இவ்வண்ணமாய்

இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது

இருப்பதுனக்கழகாகுமா?

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (3)


பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம்

தம்பனம் வசியமல்ல

பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச

மதுவல்ல சாலமல்ல

அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல

ஆகாய குளிகையல்ல

அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல

அறியமோகனமுமல்ல

கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி

கொங்கணர் புலிப்பாணியும்

கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம்

கூறிடும் வயித்தியமுமல்ல

என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க

ஏது புகல வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (4)


நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்

நின்செவியில் மந்தமுண்டோ!

நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்

நோக்காத தந்தையுண்டோ!

சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்

தளராத நெஞ்சமுண்டோ!

தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ

தந்தை நீ மலடுதானோ!

விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே

வினையொன்றும் அறிகிலேனே

வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே

வேடிக்கை இதுவல்லவோ

இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு

இனியுன்னை விடுவதில்லை

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (5)


வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்

வாஞ்சையில்லாத போதிலும்

வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்

வஞ்சமே செய்தபோதிலும்

மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும்

மூர்க்கனே முகடாகினும்

மோசமே செய்யினும் தேசமே தவறினும்

முழு காமியே ஆயினும்

பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ

பார்த்தவர்கள் சொல்லுவார்கள்

பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ

பாலன் எனைக் காக்கொணாதோ

எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ

என் குறைகள் தீர்த்தல் பெரிதோ

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (6)


அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ

அறிவிலாததற்கழுவனோ

அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ

ஆசை மூன்றுக்கழுவனோ

முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ

என் மூட உறவுக்கழுவனோ

முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ

முத்தி வருமென்றுணர்வனோ

தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ

தவமென்ன எனுறழுவனோ

தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ

தரித்திர தசைக்கழுவனோ

இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ

எல்லாமுரைக்க வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (7)


காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ

கன்னியர்கள் பழிகொண்டனோ

கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ

கிளைவழியில் முள்ளிட்டனோ

தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ

தந்தபொருளிலை யென்றனோ

தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ

தவசிகளை ஏசினேனோ

வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ

வாணவரைப் பழித்திட்டனோ

வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ

வந்தபின் என் செய்தனோ

ஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ

எல்லாமும் பொறுத்தருளுவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (8)


தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன

தன்பிறவியுறவு கோடி

தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன

தாரணியையாண்டுமென்ன

சேயர்கள் இருந்தென்ன குருவாய இருந்தென்ன

சீடர்கள் இருந்துமென்ன

சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்

செய்தென்ன நதிகளெல்லாம்

ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை

ஒன்றை கண்டு தடுக்க

உதவுமோ இதுவெல்லாம் சந்தையுறவு என்று தான்

உந்தனிருபாதம் பிடித்தேன்

யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்

கண்பார்வையது போதுமே

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (9)


இன்னமும் சொல்லவோ உன்மனம் கல்லோ

இரும்போ பெரும்பாறையோ

இருசெவியும் மந்தமோ கேளாத அந்தமோ

இது உனக்கழகு தானோ

என்னென்ன மோகமோ இதுஎன்ன கோபமோ

இதுவோ உன்செய்கை தானோ

இருபிள்ளைதாபமோ யார்மீது கோபமோ

ஆனாலும் நான் விடுவனோ

உன்னை விட்டெங்கெங்கு சென்றாலும் விழலாவனே நான்

உனையடுத்துங் கெடுவனோ

ஓஹோவிது உன்குற்றம் என்குற்றம் என்றும் இல்லை

உற்றுபார் மாபெற்ற ஐயா

என் குற்றமாயினும் உன் குற்றமாயினும்

இனியருள் அளிக்க வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (10)


சனி, ரகு, கேது, புதன், சுக்ரன், செவ்வாய்,

குரு, சந்திரன் சூர்யன் இவரை,

சற்று எனகுள்ளக்கி, ராசி பனிரண்டையும்,

சமமாய் நிறுத்தியுடனே,

பணியோத நக்ஷத்ரங்கள் இருபத்தி எழும்

பக்குவ படுத்தி பின்னால்,

பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்

வெட்டி பலரையும் அதட்டி என் முன்,

கனி போலவே பேசி கேடு நினைவு

நினைக்கின்ற கசடர்களையும் கசக்கி,

கத நின் தொண்டராம் தொண்டர்க்கு

தொண்டர்கள் தொழுத நாகி,

இனியவள மருவு சிறு வனவை முனி

சாமி எனை ஆள்வதினி யுன் கடன் காண். (11)

ஞானத்தேடல் - Ep115 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருந்தி, அதிரல், சண்பகம் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  ஆவிரை, சூரல், பூளை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்


செருந்தி


ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,

பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,

மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,

ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,

ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு,

தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப்,

போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற,

– கலித்தொகை


எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ - ஐங்குறுநூறு 


இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம்

கரும்பின் அலமரும் கழனி ஊரன்

பொருந்தும் மலரன்ன என் கண் அழப்

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே - ஐங்குறுநூறு 18



அதிரல்


அதிரல் பரந்த அந்தண் பாதிரி - அகம் 99


உலகம் படைத்த காலை தலைவ!

மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே

முதிரா வேனில் எதிரிய அதிரல்,

பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,

நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய  5

செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,

அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால்

தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்

அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,

பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே.

- நற்றிணை 337


மொட்டின் வடிவம் கூர்மையாகவும் நீட்சியுடையதாகவும் இருக்கும்

இதனைப் `புனலிக்கொடி’ என்று நச்சினாரிக்கினியரும், காட்டுமல்லிகை என்று அரும்பதவுரையாசிரியரும், மோசிமல்லிகை, என்று அடியார்க்கு நல்லாரும் குறிக்கின்றனர்.

புனலிக்கொடி, புனலிப் பூ, புனலி , புனலி (புனல் + இ), மென்கொடி’, ‘பைங்கொடி, மோசி மல்லிகையும்.


முதிரா வேனில் எதிரிய அதிரல் – நற் 337/3


குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் – புறம் 269/1

“பார்வல் வெருகின் கூர்எயிற் றன்ன

 வரிமென் முகைய நுண்கொடி அதிரல்;”⁠-அகநா. 391 : 1-2


.... கோங்கின்

 எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல்

 பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கி

 காண் யானை கவளங் கொள்ளும்

 அஞ்சுவரு நெறியிடைத் தமியர் செல்மார்

 கெஞ்சுண் மொழிப மன்னே-தோழி”⁠-அகநா. 157 


அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் - பரி 20/81


சண்பகம்


செம்போத்து, செம்பகம் அல்லது செங்காகம், குக்கில். குயில் 


பைந் தினை உணங்கல் செம் பூழ் கவரும்

வன்புல நாடன் தரீஇய, வலன் ஏர்பு

அம் கண் இரு விசும்பு அதிர, ஏறொடு

பெயல் தொடங்கின்றே வானம்;

காண்குவம்; வம்மோ, பூங் கணோயே!

ஐங்குறுநூறு 469


கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,

முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி     

பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப,

கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்

சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,

அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,

அகநானூறு 63


தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம்

குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து,

குக்கில் புறத்த; சிரல் வாய - செங் கண் மால்

தப்பியார் அட்ட களத்து - களவழி நாற்பது 5


பெருந்தண் சண்பகம். 

 

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு - திரு 27

பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர் - கலி 150/21

அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த

பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர்

பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் – கலி 150/20-22


தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை 

ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற

சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே

காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.


‘களிப்புறு நறுமணமரம்’


வண்டுணா செண்பகம் ;


வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம் - பரிபாடல் 


பன்னிய பாரம் பார்ம கட் கொழியப்

பாரத மாபெரும் போரில்,

மன்னர்கள் மடிய மணி நெடுந் திண்டேர்

மைத்துனர்க் குய்த்தமா மாயன்,

துன்னுமா தவியும் சுர புனைப் பொழிலும்

சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்,

தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும்

திருக்கண்ணங் குடியுள்நின் றானே.

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி - பாசுரம் 1756


கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்

களித்திசை பாடும் குயிலே”

என்று ஆண்டாள் (நாச்சியார் திருமொழி).

Tuesday, November 14, 2023

ஞானத்தேடல் - Ep114 - கம்பரின் சமயோசிதம் - (Gnanathedal)


 கம்பரின் சமயோசிதம்


கரைக்கு வடக்கிருக்கும் காளிகாள் அம்மைக்கு

அரைத்து வழிசாந்தைத் தொட்டப்பேய் உரைத்தும்

மறைக்க வறியாத வன்பேயைக்

குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு.


இட்டடி நோவ எடுத்தடிகொப்பளிக்க

வட்டில் சுமந்து மருங்கசையக்-கொட்டிக்

கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்

வழங்கோசை வையம் பெறும்.


உருகி உடல்உருகி உள்ளீரல் பற்றி

எரிவ தவியாதென் செய்வேன்- வரியரவ

நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்

நெஞ்சிலே யிட்ட நெருப்பு.

ஞானத்தேடல் - Ep113 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - போங்கம், திலகம், பாதிரி - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  போங்கம், திலகம், பாதிரி


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,


போங்கம்

நிவந்து சேர் போங்கி - பரிபாடல் திரட்டு


திலகம்


மஞ்சாடி மரம் / திலகமரம் 


நிறுத்தல் அளவை - ‘மஞ்சாடி’.  இது மஞ்சாடி மரத்தின் விதை. இரண்டு குன்றி மணி எடை கொண்டது.


நாகம் திலகம் நறும் காழ் ஆரம் - மலை 520


‘மரவமும், நாகமும், திலகமும், மருதமும்’ என்று கூறப்படுகிறது. 


திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - திரு 24

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - நற் 62


நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே

கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண் - பரி 11/99


பாதிரி


“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”   

- நாலடியார் (139)


சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்

சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல

குலாமாலை வேல் கண்ணாய் கூறு உவமை நாடில்

பலா, மாவைப் பாதிரியைப் பார்

- ஔவையார்


“கோசிக ஆடை பூத்தன பாதிரி”  (சீவக சிந்தாமணி, 1650)       


அத்த பாதிரி துய் தலை புது வீ - அகம் 191

கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ - அகம் 261


ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய

துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி

வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி,

புது மலர் தெருவுதொறு நுவலும் 

நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே!

(நற்றிணை 118)


“முதிரா வேனில்எதிரிய அதிரல்

பராஅரைப் பாதிரி குறுமயிர் மாமலர்” (நற்றிணை, 337:3-4)            


“வேனிற் பாதிரி கூன்மலர்ரன்ன

மயிர் ஏர்பு ஒழுகிய அம்கலுழ் மாமை”  (குறுந்தொகை, 147:1-2)              


……………………………….. வேனில்

பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி

வள் இதழ் மா மலர் வயிற்று_இடை வகுத்ததன்

உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை – பெரும் 4-6

பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய 


பாதிரி


பாதிரிமரவேர் 

பாதிரியின் வேர்க்குணந்தான் பார்க்கில்மது மேகம்போம் 

ஒதுகரப் பான்உழலை யோடிவிடும் - மாதேகேள் 

கண்ணெரிவு காதெரிவு கையெரிவு காலெரிவும் 

நிண்ணயமாய்ப் போகு நிசம் 


பாதிரிப்பூ 

பித்த சுரந்தணியும் பெண்வசியம் உண்டாகும் 

முற்றிய தோர் வெட்டை முடியுங்காண் - மெத்தவுமே 

மாதுரியம் நிங்கா வசன மடவனமே 

பாதிரியின் பூவையுண்டு பார் 


பாடலிபுத்திரம் / திருப்பாதிரிப்புலியூர் 


நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ 

ஒன்று தெளிய நசையினம் மொழிமோ

வெண்கோட் டியானை சோணை படியும்

பொன்மலி பாடலி பெறீஇயர்

யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. 

குறுந்தொகை (படுமரத்து மோசிகீரனார்)


பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

சீர் மிகு பாடலிக் குழீஇ கங்கை

நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ


அகநானூறு 265 (மாமூலனார்)


நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்     

தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித்

- அகநானூறு 251 (மாமூலனார்)


பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி 

மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு

வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்

கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார் 


இன்ன தன்மையில் இவர்சிவ 

    நெறியினை யெய்தி

மன்னு பேரருள் பெற்றிடர்

   நீங்கிய வண்ணம்

பன்னு தொன்மையிற் பாடலி

   புத்திர நகரில்

புன்மை யேபுரி அமணர்தாம்

    கேட்டது பொறாராய்


கெடிலக்கரை நாகரிகம்‌ - பேராசிரியர்‌ புலவர்‌ சுந்தர சண்முகனார்‌ 


பாதிரிப்பட்டி (கரூர் மாவட்டம்)


மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு

கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி

நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்

பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் - பெரியாழ்வார் திருமொழி (பூச் சூட்டல்)


அதிரல் பரந்த அந்தண் பாதிரி - அகம் 99

ஞானத்தேடல் - Ep112 - சங்ககால பறவை மனிதன் ஆய்எயினன் - (Gnanathedal)

 

சங்ககால பறவை மனிதன் ஆய்எயினன்


Sálim Moizuddin Abdul Ali (12 November 1896 – 20 June 1987) was an Indian ornithologist and naturalist. Sometimes referred to as the "Birdman of India", Salim Ali was the first Indian to conduct systematic bird surveys across India and wrote several bird books that popularized ornithology in India. Along with Sidney Dillon Ripley he wrote the landmark ten volume Handbook of the Birds of India and Pakistan


வரலாறு எழுதிய முதல் தமிழன் பரணர்.


சங்கத் தமிழ் இலக்கியத்தில் கபிலரும் பரணரும் இரட்டைப் புலவர்கள் போலக் கருதப்படுகிறார்கள்.


பரணர் கூறும் எல்லா செய்திகளும் நற் செய்திகள் என்று கூறமுடியாது, ஆனால் உண்மைச் செய்திகள் என்பதில் ஐயமில்லை. பொய் அடிமை இல்லாத புலவர் வரிசையில் முன்னிலையில் நிற்பவர்.


அன்றும் பாடுநர்க்கு அரியை; இன்றும்

பரணன் பாடினன் மற்கொல், மற்றுநீ

முரண்மிகு கோவலூர் நூறிநின்

அரண்அடு திகிரி ஏந்திய தோளே 

- புறநானூறு - 99


புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்

வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து

ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,

பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய,

- அகநானூறு 142


கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்

நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென,

காணிய செல்லாக் கூகை நாணி,

கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை 10

- அகநானூறு 148


பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது


அரசன் ஆய்எயினன் சிறந்த குதிரைவீரன். தேர்வீரன் ஞிமிலியைத் தாக்கினான். போர்க்களத்திலையே எயினன் மாண்டுபோனான்.


எயினன் பறவைகளைப் பாதுகாத்து வந்தவன்.


அவன் மாண்டுகிடப்பதைப் பிணம் தின்னும் கூகை கண்ணால்கூடக் காண விரும்பவில்லை. எனவே இனி எல்லாப் பகலிலும் வெளியில் வருவதில்லை என்று முடிவு எடுத்துக்கொண்டது.


பார்வைக் கூர்மையான கூகையின் கண்கள் பகலில் கூசும். இரவில் நன்றாகத் தெரியும். அதனால் அது பகலில் வெளிவருவதில்லை. இதனைப் புலவர் இவ்வாறு கூறுகிறார். இதனைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்


தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.


பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்

இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று

தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்

(தண்டியலங்காரம் 56)


ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை

அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ,

முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,

ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று

ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு

வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு

விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,

பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்

காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,

எக்கர் இட்ட குப்பை வெண் மணல்

வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்

ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,

நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,

ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய

பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்

கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்

மகர நெற்றி வான் தோய் புரிசைச்

சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்

புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்

- அகநானூறு 181



யாம இரவின் நெடுங் கடை நின்று,

தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்

நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு

அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்

வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,

அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,

இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு

நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,

ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, ''புள் ஒருங்கு

அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று

ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,

நிழல் செய்து உழறல் காணேன், யான்''

- அகநானூறு 208


நான்கு பெரிய போர்களைப் பாடலில் வருணிக்கிறார்: வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கூடற் பறந்தலை ,பாழிப் பறந்தலை ஆகிய போர்க் கள நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறார்.


ஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் தின்றதற்காக ஒரு பெண்ணுக்கு, நன்னன் என்பவன் மரண தண்டனை விதித்தது


ஆதிமந்தி—ஆட்டநத்தி


அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட் காதல்கதைகளைத் தெரிந்தோருக்கு ஆதிமந்தி-ஆட்டநத்தி காதல் கதை தெரியாது. 


கடையெழு வள்ளல்களில் ஒருவன். மயிலுக்குப் பட்டுப் போர்வை அளித்த சிறப்பால் பாவலர் பாடும் புகழை உடையவன்.


ஆவியர் குடிக்கு மன்னன். ‘வையாவிக்கோப் பெரும்பேகன்’ என்ற பெரும் பெயர் பெற்றவன். அத்தகையவன் ஒழுக்கத்துக்கும், பண்பாட்டுக்கும் முரணான செயலில் இறங்கியிருந்தான்.


“முரணில் பொதியின் முதற் புத்தேள் வாழி! பரண கபிலரும் வாழி ! – நக்கீரர்.


என்று அகத்தியரோடு அவரும் போற்றாப்படுகிறார். தெய்வப் புலவன் பரணன் வாழ்க !

ஞானத்தேடல் - Ep 111 - உலகநீதி (Gnanathedal)


 உலக நீதி - ஆசிரியர்: உலகநாதர்


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்

வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே. #1


நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்

நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்

அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்

மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #2


மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்

மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்

தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்

தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்

சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்

சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்

வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #3


குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்

கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்

கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்

கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்

கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்

மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #4


வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்

மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்

வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்

தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்

தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #5


வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்

மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்

வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்

சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்

திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே. #6


கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்

கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்

பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்

பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்

இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்

எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்

குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்

குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே. #7


சேராத இடம் தனிலே சேர வேண்டாம்

செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்

ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்

உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்

பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்

வாராரும் குறவருடை வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #8


மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்

மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்

கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்

காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்

புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்

புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #9


மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்

திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்

தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்

குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்

குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே. #10


அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்

அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்

தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி

சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி

வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி

மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி

இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை

ஏதெது செய்வானோ ஏமன்றானே. #11


கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்

கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்

தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்

துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்

வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்

மாறான குறவருடை வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #12


ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி

அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி

ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்

உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி

காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்

கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு

போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்

பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே.

Saturday, October 14, 2023

ஞானத்தேடல் - Ep 110 - நரி விருத்தம் (Gnanathedal)


 திருத்தக்க தேவர் அருளிய நரி விருத்தம்


அரிய யற்கரி யானை யயர்த்துபோய்

நரிவி ருத்தம தாகுவர் நாடரே

- அப்பர் தேவாரம் (5.100.7)


கூட்டினார்கிளி யின்விருத்த முரைத்ததோரெலி யின்றொழிற்

பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு மெக்கர்தங்களைப் பல்லறம்

- சம்பந்தர்தம் தேவாரம் ஆலவாய் பதிகம்(3.39.5)


'கிளிவிருத்தம்' 'எலிவிருத்தம்' என்பன சமணசமய நூற்கள் என குறிக்கின்றது.


'வீரசோழியத்தின்' உரை ஆசியர் 'பெருந்தேவனார்' இம்மூன்று விருத்தங்களுடன் 'குண்டலகேசி விருத்தம்' என்பன 'விருத்தங்கள்' என குறித்துள்ளார். 


இ·து ஓர் நீதிக்கதைகளை புகல் நூல் மட்டும் அல்லாது நீதி உரைக்கும் நூலாகவும் காண்கின்றது.


கரியொரு திங்க ளாறு கானவன் மூன்று நாளாம்

இருதலைப் புற்றி னாக மின்றுணு மிரையா மென்று

விரிதலை வேடன் கையில் விற்குதை நரம்பைக் கவ்வி

நரியினார் பட்ட பாடு நாளைநாம் படுவோ மன்றே

- விவேக சிந்தாமணி


முதல் 9 பாடல்களில் (2-10) காணும் ஓர் நரிபற்றிய கதை வருமாறு.


ஓர் வேடன் தன் புலத்தினை விளைவை மேய வந்த யானையைக் கொல்லுவதற்கு பாம்பு வாழும் ஓர் புற்றின் மேலிருந்து கைவில் கொண்டு கணை எய்ய, பாம்பு அவனைத் தீண்ட, அவன் கீழே வீழ்ந்த உடன், தன் கை வாளால் பாம்பினைத் துணிக்க, அப்பக்கம் வந்த நரி ஒன்று இறந்து பட்ட 3 உடல்களைக் கண்டு, மகிழ்ந்து, இவை 6 திங்கள் 7 நாட்கள் 1 நாள் என இரை ஆகும் எனக் கணக்கிட்டுக் கொண்டே, இப்பெரு தொகுதியாலும் ஆசை அறாமல், விடமேறி இறந்த வேடன் கையில் பூட்டி இருந்தபடியே உள்ள வில்/கணையிலிருக்கும் ஒன்றினுக்கு ஆசைப்பட்டு, அதனைக் கவ்வ, கணை தெறித்து தொண்டையில் அகப்பட்டு அதுவும் இறந்தது. ஆக 'பேராசை கொள்ளல்' எனும் கருத்து பஞ்சதந்திரக்கதைபோல் காண்கின்றது.


குடற்படு முடையைக் கண்டு குறுநரி தின்று மான்தேர்

கடற்படை யியக்கங் கண்டே கள்ளத்தாற் கிடப்ப யாரும்

திடற்பகை இன்மையாலே செவிகொய்வான் வால்கொய்வானாய்

உடல்புறம் போர்த்த புன்தோல் உரித்திட்டங் கொருவன் கொன்றான்  (11)


அஞ்சு மின்னதி லோபமில் லோர்களுஞ்

செஞ்சு டர்நெடு வேற்றிரி யோதனன்

பஞ்ச வர்க்குமண் பாகங் கொடாமலே

துஞ்சி னான்கிளை தன்னொடு மென்பவே (22)


குட்ட நீர்த்துறைப் போம்வழிக் கூனியை

ஒட்ட லன்புன லுய்த்தவக் காகுத்தன்

திட்டை வேண்டிய தேர்ச்சியில் வாணிகன்

பட்ட தெய்துவ பற்றுளத் தார்களே (23)

ஞானத்தேடல் - Ep109 - நோய் தீர்க்கும் பாடல்கள் - 2 - (Gnanathedal)

 

நோய் தீர்க்கும் பாடல்கள் - 2


ஒருவர் நோய்வாய்ப்  படும்போது இறை நம்பிக்கை தோன்றும். அப்படி அருணகிரிநாதர் பாடிய திருத்தணிகை  திருப்புகழ் . இதை பாராயணம் செய்யும் பக்தர்கள் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை அதைப்பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Songs that cure illness - 1


When one gets sick, they turn to God for getting their illness cured. Likewise, Arunagirinathar sang Thiruppugazh praising Lord Murugan of Thiruthanigai malai. It is believed that those who sing this get their illness cured. Let's explore about  it in this episode


References

திருப்புகழ் 243


தனதன தான தனதன தான

     தனதன தான ...... தனதான


......... பாடல் .........


இருமலு ரோக முயலகன் வாத

     மெரிகுண நாசி ...... விடமேநீ


ரிழிவுவி டாத தலைவலி சோகை

     யெழுகள மாலை ...... யிவையோடே


பெருவயி றீளை யெரிகுலை சூலை

     பெருவலி வேறு ...... முளநோய்கள்


பிறவிகள் தோறு மெனைநலி யாத

     படியுன தாள்கள் ...... அருள்வாயே


வருமொரு கோடி யசுரர்ப தாதி

     மடியஅ நேக ...... இசைபாடி


வருமொரு கால வயிரவ ராட

     வடிசுடர் வேலை ...... விடுவோனே


தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி

     தருதிரு மாதின் ...... மணவாளா


சலமிடை பூவி னடுவினில் வீறு

     தணிமலை மேவு ...... பெருமாளே.

ஞானத்தேடல் - Ep 108 - அனுபவ ஞானம் - 7 - (Gnanathedal)

 

அனுபவ ஞானம் 


மங்குல் அம்பதினாயிரம் யோசனை

  மயில்கண்டு நடமாடும்

தங்கும் ஆதவ னூறாயிரம் யோசனை

  தாமரை முகம் விள்ளும்

திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனையுறச்

  சிறந்திடும் அரக்காம்பல்

எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர்

  இதயம் விட்டு அகலாரே

தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது

பாம்புக்கு பால்வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா

வேம்புக்கு தேன்வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா

தாம்பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார்.

தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்தபேரை

மீளவே கொடுக்கினாலே வெய்துறக் கொட்டலேபோல்

ஏளனம் பேசித் தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும்

கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்றமாமே.

Thursday, September 21, 2023

ஞானத்தேடல் - Ep107 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம் - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குருகிலை, மருதம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,


குருகிலை


‘குருகிலை’ என்பதற்கு ‘முருக்கிலை’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். 


அஞ்சனம் காயா மலர குருகிலை

ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொள்”

தண்கழற் கோடல் துடுப்(பு) ஈனக் காதலர்

வந்தார் திகழ்நின் தோள்.


- திணைமொழி ஐம்பது (21)


அருவி அதிரக் குருகிலை பூப்பத்

தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற

வரிவளைத் தோளி! வருவார் நமர்கொல்

பெரிய மலர்ந்த(து)இக் கார்.

- திணைமொழி ஐம்பது (30)


முருகியம்போல் வானம் முழங்கி இரங்க

குருகிலை பூத்தன கானம்.... ....”

கார் நாற்பது 27


குருகிலை என்பது ஒரு மரத்தின் இலை போலும்


இது முல்லை நிலத்தது .

இது கார் காலத்தில் பூப்பது

இவ்விலை மகளிர் முறுவல் போன்று வெண்ணிறமானது.


மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்

நெய்யால் தளிக்கும் நிமிர்சுடர் - பெய்ய

முழங்கத் தளிர்க்கும் குருகிலை நட்டார்

வழங்கத் தளிர்க்குமாம் மேல்.

- நான்மணிக்கடிகை



மருதம்


கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். (மருது பாண்டியர்கள்)

Pride of India (இந்தியாவின் பெருமை)

சிங்களத்திலும் இதை ‘மருது’ என்றே அழைக்கின்றனர்.


Queen’s Flower (அரசிக்கு உகந்த பூ)

உழவர்க்கு நிழல்


………………………..ஓங்கிய

பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல,

மருதமர நிழல், எருதொடு வதியும்

அகநானூறு (37)


நாகதெய்வக் கோயில்

மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது.


பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பலிபெறு வியன்களம் 

- பெரும்பாணாற்றுப்படை 232


மருத மாலை


பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் - திருமுருகாற்றுப்படை 28


“பழனப் பல் புள் இரிய, கழனி

வாங்குசினை மருதத் தூங்குதுணர் உதிரும்”

- நற்றிணை வரிகள் (350:2-3)


சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர்.


திருமருதமுன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் - பரிபாடல் 7-83

தீம்புனல் வையைத் திருமருத முன்றுறை ஆல் - பரிபாடல் 22-45

திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை - கலித்தொகை


வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,

திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில் - அகநானூறு 36


மருதூா்கள்


மூன்று முக்கிய திருத்தலங்களில் தலமரமாகவும் போற்றப்படுகிறது.


தலைமருது - வட மருதூா் என்று வழங்கப்படுகிற ஸ்ரீ சைலம்

இடைமருது - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர்

கடைமருது - திருநெல்வேலி பொருநைக் கரையின் திருப்புடை மருதூா்


மருத மரங்கள் நிறைந்த பகுதி மருதூா் ஆனது.


10) மதுரை


மருத மரம் அதிகமாக இருந்ததால் மருதை என்ற பெயர் பிற்காலத்தில் மதுரையானது.


செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்

துறையணிந் தன்றவ ரூரே – குறுந்தொகை 50


மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்

மணல் மலி பெருந் துறைத்….. - பதிற்றுப்பத்து - 23


…………… காவிரிப்

பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த

ஏந்து கோட்டு யானைச் சேந்தன்தந்தை

குறுந்தொகை 258


11) மருத்துவ மரம்


ஓதமெனு நீரிழிவை யோட்டும் பிரமேகங்

காதமென வோடக் கடத்துங்காண் - போத

மயக்க மொடுதாக மாறாச் சுரத்தின்

தயக்கமறுக் கும்மருதஞ் சாற்று

- பதார்த்த குண சிந்தாமணி


12) மருதமலை


கச்சியப்பர் பேரூர்ப் புராணத்திலும் "மருதமலை" பற்றி பாடியுள்ளார். (அபயப்படலம், மருதவரைப்படலம்)


முருக னென்னு மொய்கொண் மொய்ம்பினான்

உருகு மன்பர்க் குதவி செய்யவே

பெருகு காமர்ப் பிறங்க லாயினான்

அருகின் வேலு மருத மாயதே.


மருத வண்டு மலர்ப்பொ த்ம்பரின்

மருதம் பாட வாய்ந்த வேள்வரை

மருத நின்ற மறுவில் காடிசியான்

மருத வோங்அ லென்ன மன்னுமே.


பாம்பாட்டிச் சித்தர்


கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே

விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே

கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார்

கூத்தாடிக்கூத் தாடியேநீ யாடாய் பாம்பே


மருதையாறு, மருதப்பண்


குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்

நறும்பூங் கண்ணி குறவர் சூடக்

கானவர் மருதம் பாட அகவர்

நீனிற முல்லைப் ப·றிணை நுவலக்

– பொருநராற்றுப்படை  (218-221)