Thursday, March 14, 2024

ஞானத்தேடல் - Ep 132 - தவறை உணர்தல் - (Gnanathedal)


 தவறை உணர்தல்


வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்

    பெருந்துயரிடும்பையில் பிறந்து,

கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு

     அவர்த்தரும் கலவியேகருதி,

ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்

    உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்

    நாராயணா வென்னும் நாமம்.


தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,

பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,

கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா.,

அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால்,

என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்,

குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா.,

அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,

நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்,

தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்

ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


தந்தைதாய் மக்களே சுற்றமென்

   றுற்றுவர் பற்றி நின்ற

பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ

   பழியெனக் கருதி னாயேல்

அந்தமா யாதியாய் ஆதிக்கும்

   ஆதியாய் ஆய னாய

மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா

   வல்லையாய் மருவு நெஞ்சே


சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்

நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது

தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்

பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே

- திருமந்திரம்


Thursday, March 07, 2024

ஞானத்தேடல் - Ep 131 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாழை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  வாழை 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

..............


வாழை


இருகயல் உண்கண் இளையவளை வேந்தன்

தருகென்றால் தன்னையரும் நேரார் - செருவறைந்து

பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால்

வாழைக்காய் உப்புறைத்தல் இல்.

- பழமொழி நானூறு 338


சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய

அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து,

மயங்கு துயர் உற்ற மையல் வேழம்

உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,

ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்

மா மலைநாடன் கேண்மை

காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.

- குறுந்தொகை 308


அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்

கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்

கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,

கடுங் கண் கேழல் உழுத பூழி,

நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்  

உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை

முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்

மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,

மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி

வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,          

சாந்த விறகின் உவித்த புன்கம்

கூதளம் கவினிய குளவி முன்றில்,

செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்

ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,

நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,            

வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!

கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,

பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர், நாளும்  

ஈயா மன்னர் நாண,

வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.

- புறநானூறு 168


மகளிர் கூந்தலின் மயிர்முடிப்பு வாழைப்பூவினது தோற்றம்போலப் பொலிந்து காணப்படுவதை,

வாழைப் பூ எனப் பொலிந்த ஓதி - சிறுபாணாற்றுப்படை


வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல்

மகளிர் ஓதி அன்ன பூவொடு துயல்வரும் - நற்றிணை 225


பரிசிலர்க்கு வரையாது வழங்கிய வெளிமான் இறந்துபட்டான். அவன் பிரிவினை ஆற்றாது அழும் மகளிர்தம் வளைகள் வாழைப்பூப்போலச் சிதறிவிழுந்ததை,

வாழைப் பூவின் வளை முறி சிதற - புறநானூறு 237



புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை

முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்

குலைவாய் தோயும் கொழு மடல் வாழை

அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்

செம் முக மந்தி ஆரும் நாட!

- நற்றிணை 355


படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்

கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை

ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்

மெல் விரல் மோசை போல, காந்தள்

வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப

- நற்றிணை 188


குவி முகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த                                     

ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு – அகம். 134


சிலம்பில் போகிய செம் முக வாழை

அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,

பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்

நல் வரை நாடனொடு அருவி ஆடியும்

அகநானூறு 302


தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம்,    

வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்,    

கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் 

குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம்,   

திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும்,  360

தீம் பல் தாரம் முனையின், சேம்பின்  

முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர். பகற் பெயல்

- பெரும்பாணாற்றுப்படை

Thursday, February 29, 2024

ஞானத்தேடல் - Ep 130 - இருபா இருபது - (Gnanathedal)


 இருபா இருபது


மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களையும் குறிக்கும். இந்நூல்கள் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவன.


உந்தி களிறு உயர்போதம் சித்தியார்

பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட்

பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு

உண்மைநெறி சங்கற்ப முற்று


சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.


திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்

திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்

சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்

சிவஞான சித்தியார் - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்

இருபா இருபது - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்

உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்

சிவப்பிரகாசம் - உமாபதி சிவாசாரியார்

திருவருட்பயன் - உமாபதி சிவாசாரியார்

வினாவெண்பா - உமாபதி சிவாசாரியார்

போற்றிப்பஃறொடை - உமாபதி சிவாசாரியார்

கொடிப்பாட்டு - உமாபதி சிவாசாரியார்

நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்

உண்மைநெறி விளக்கம் - உமாபதி சிவாசாரியார்

சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்


கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி

மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் - வெண்ணெய் நல்லூர்

மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை

கைகண்டார் உள்ளத்துக் கண்


இந்நூலின் முதற் செய்யுள் கடவுள் வணக்கமாக அமைந்துள்ளது. கடவுளே குருவாக வந்து அருள்புரிதலினாலும், குரு கடவுளுக்குச் சமமானதாலும், ஆசிரியர் அருள்நந்தி சிவாச்சாரியார், தமது குருவாகின மெய்கண்டதேவரையே கடவுளாகவைத்துப் போற்றித் துதித்துள்ளார்.


'சிவபெருமானே தன்னுடைய நெற்றிக் கண்ணையும். திருநீலகண்டத்தினையும் மறைத்து, திருவெண்ணெய் நல்லூரில் மெய்கண்டதேவர் என்னும் பெயரும் திருவுரு வமும் கொண்டு எழுந்தருளிப் போந்து, உலக மக்களின் மலமாசுகளைப் போக்கியருள்கின்றார். அவரை ஒருமுறை சென்று பொருந்தி நினைத்துத் தொழுபவர்கள், உயிருக்குயிராக உள்ள சிவபெருமானைத் தம்முடைய உள்ளத்தின் கண் தெளிவுறக் கண்டறியும் பேறு பெற்றவர்கள் ஆவர் என்பது இம்முதற்பாடலின் கருத்து. இதனால் சிவபெரு மானே மெய்கண்ட தேவராக எழுந்தருளித் தமக்கு அருள் யூரிந்தனர் என ஆசிரியர் புகழ்ந்து துதிக்கின்றார்


கண் அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என

வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ!

காரா கிரகக் கலி ஆழ்வேனை நின்

பேரா இன்பத்து இருத்திய பெரும!

வினவல் ஆனாது உடையேன் எனது உளம்

நீங்கா நிலை ஊங்கும் உளையால்

அறிவின்மை மலம் பிரிவு இன்மை எனின்

ஓராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல்

திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய்

சுத்தன் அமலன் சோதி நாயகன்

முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா

வேறுநின்று உணர்த்தின் வியாபகம் இன்றாய்ப்

வேறும் இன்றாகும் எமக்கு எம் பெரும!

இருநிலம் தீநீர் இயமானன் கால் எனும்

பெருநிலைத் தாண்டவம் பெருமாற்கு இலாதலின்

வேறோ உடனோ விளம்பல் வேண்டும்

சீறி அருளல் சிறுமை உடைத்தால்.

அறியாது கூறினை அபக்குவ பக்குவக்

குறிபார்த்து அருளினம் குருமுதலாய் எனின்

அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும்

பக்குவம் வேண்டில் பயன் இலை நின்னால்

பக்குவம் அதனால் பயன்நீ வரினே

நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ

தன் ஒப்பார் இலி என்பதும் தகுமே

மும்மலம் சடம் அணு மூப்பு இளமையில் நீ

நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ

உணர்வு எழும் நீக்கத்தை ஓதியது எனினே

இணை இலி ஆயினை என்பதை அறியேன்

யானே நீக்கினும் தானே நீங்கினும்

கோனே வேண்டா கூறல் வேண்டும்

"காண்பார் யார்கொல் காட்டாக்கால்" எனும்

மாண்பு உரை உணர்ந்திலை மன்ற பாண்டியன்

கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞானத்தின்

"ஆட்பால் அவர்க்கு அருள்" என்பதை அறியே


இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி

இயமான னாயெறியுங் காற்று மாகி

அருநிலைய திங்களாய் ஞாயி றாகி

ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்


ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே?

    அடங்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே?

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே?

    உகுகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே?

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே?

    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே?

காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே?

    காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே?


ஆட்பா லவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்

கேட்பான் புகில் அளவில்லை; கிளக்கவேண்டா;

கோட்பா லனவும் விளையும் குறுகாமை எந்தை

தாட்பால்வணங்கித் தலை நின்று இவைகேட்கத் தக்கார்


Monday, February 26, 2024

ஞானத்தேடல் - Ep 129 - சகுனம் - 2 - (Gnanathedal)


 சகுனம் - 2


சகுனம் அல்லது நிமித்தம் தமிழர் வாழ்வில் கலந்த ஒன்று அவற்றை பற்றி இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பது  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  


Sagunam (Signs/Omen) - 2


Watching for signs/omen has been a part of Tamil culture. There are a lot of literary references about these. Let's explore those in this episode


References


சகுனம்

சொல்லரியகருடன்வா னரமரவ மூஞ்சூறு

சூகரங் கீரி கலைமான்

றுய்யபா ரத்வாச மட்டையெலி புன்கூகை

சொற்பெருக மருவு மாந்தை

வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்

விளங்குமிரு நா வுடும்பு

மிகவுரைசெ யிவையெலாம் வலமிருந் திடமாகில்

வெற்றியுண் டதிக நலமாம்

ஒல்லையின் வழிப்பயண மாகுமவர் தலைதாக்க

லொருதுடை யிருத்தல் பற்ற

லொருதும்ம லாணையிட லிருமல்போ கேலென்ன

வுபசுருதி சொல்லியவை யெலாம்

அல்லறரு நல்லவல வென்பர்முதி யோர்பரவு

மமலனே யருமை மதவே

ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள

ரறப்பளீ சுர தேவனே. 62


இதுவுமது


நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை

நாலி சிச்சிலி யோந்திதான்

நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி

நாடரிய சுரபி மறையோர்

வரியுழுவை முயலிவை யனைத்தும்வல மாயிடின்

வழிப்பயண மாகை நன்றா

மற்றுமிவை யன்றியே குதிரையனு மானித்தல்

வாய்ச்சொல் வாவா வென்றிடல்

தருவளை தொனித்திடுதல் கொம்புகிடு முடியரசர்

தப்பட்டை யொலிவல் வேட்டுத்

தணிமணி முழுக்கொழுத லிவையெலா மூர்வழி

தனக்கே நன்மை யென்பர்

அருணகிர ணோதயத் தருணபா னுவையனைய

வண்ணலே யருமை மதவே

ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள

ரறப்பளீ சுர தேவனே. 63


இதுவுமது


தலைவிரித் தெதிர்வருத லொற்றைப் பிராமணன்

றவசி சன்னாசி தட்டான்

றனமிலா வெறுமார்பி மூக்கறைபுல் விறகுதலை

தட்டைமுடி மொட்டைத் தலை

கலன்கழி மடைந்தையர் குசலக்கலஞ் செக்கான்

கதித்ததில் தைல மிவைகள்

காணவெதிர் வரவொணா நீர்க்குட மெருக்கூடை

கனிபுலா லுபய மறையோர்

நலமிகு சுமங்கலை கிழங்கு சூதகமங்கை

நாளும் வண்ணா னழுக்கும்

நசைபெருகு பாற்கலச மணிவளையன் மலரிலைக

னாடியெதிர் வர நன்மையாம்

அலைகொண்ட கங்கைபுனை வேணியாய் பரசணியு

மண்ணலே யருமை மதவே

ளனுதினமு மன தினினை தருசதுர கிரிவள

ரறப்பளீ சுர தேவனே. 64


துடிநூல்


சீருடனே துடிக்கிலுச்சி யிடரேநீங்கும்

     சிறந்தவுச்சிவலந்துடிக்கி லச்சஞ்சொல்லும்

பேருடனேவுச்சியிடம் பெருமையாகும்

    பின்றலையே துடிக்கிற் சத்துருக்களுண்டாம்

சார்புடனேதலையடங்கற் றுடிக்குமாகின்

    றலைவனாற்பெருமை சம்பத்துமுண்டாம்

நேருடனேநெற்றியிடத் துடிக்குமாகின்

    நேர்வார்த்தைசம்பத்து நிறையவாமே


‘நலம் துடிக்கின்றதோ? நான் செய் தீவினைச்

சலம் துடித்து, இன்னமும் தருவது உண்மையோ?-

பொலந் துடி மருங்குலாய்!-புருவம், கண், முதல்

வலம் துடிக்கின்றில; வருவது ஓர்கிலேன்.


‘முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்,

துனி அறு புருவமும், தோளும், நாட்டமும்,

இனியன துடித்தன; ஈண்டும், ஆண்டு என்

நனி துடிக்கின்றன; ஆய்ந்து நல்குவாய்


‘மறந்தனென்; இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்:

அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்,

பிறந்த பார் முழுவதும் தம்பியே பெறத்

துறந்து, கான் புகுந்த நாள், வலம் துடித்ததே


‘நஞ்சு அனையான், வனத்து இழைக்க நண்ணிய

வஞ்சனை நாள், வலம் துடித்த; வாய்மையால்

எஞ்சல; ஈண்டு தாம் இடம் துடிக்குமால்;

“அஞ்சல்” என்று இரங்குவாய்! அடுப்பது யாது?’ என்றாள்


உள்ளகம் நறுந்தா துறைப்பமீ தழிந்து

கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக்

கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்

உண்ணிறை கரந்தகத் தொளித்துநீ ருகுத்தன

எண்ணுமுறை இடத்தினும் வலத்தினுந் துடித்தன

விண்ணவர் கோமான் விழவுநா ளகத்தென் 

- சிலப்பதிகாரம்


Thursday, February 15, 2024

ஞானத்தேடல் - Ep 128 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குல்லை, பிடவம், சிறுமாரோடம் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்


குல்லை


கஞ்சங்குல்லைப்பூ, கஞ்சாங்கோரை, மலைப்பச்சை, புனத்துளசி, நாய்த்துளசி, திருநீற்றுப்பச்சை


குல்லைக்கண்ணி வடுகர் முனையது

வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,

வழிபடல் சூழ்ந்திசின், அவருடைய நாட்டே!

- மாமூலனார்


குல்லை குளவி கூதளம் குவளை 

இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் - நற்றிணை


முடித்த குல்லை இலை உடை நறும் பூ - திரு 201


மெல் இணர்க் கொன்றையும், மென்மலர்க் காயாவும்,

புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,

குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்

கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்

பல்லான் பொதுவர் கதழ்விடை கோட்காண்பார்

முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன

பல்லர், பெருமழைக்கண்ணர், மடம் சேர்ந்த

சொல்லர், சுடரும் கனங்குழைக் காதினர்,

நல்லவர் கொண்டார் மிசை,

- கலித்தொகை 103


இச்செடிகள் மலிந்த காடாக வளர்ந்து இருக்கும் என்பதைப் "குல்லையம்புறவு என்றார் நத்தத்தனார்

குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த - சிறுபானாற்றுப்படை 29


குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் – பொருநராற்றுப்படை 234


பிடவம்


அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன

செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்

நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்

பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்

வள மலை நாடன் நெருநல் நம்மொடு     

கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ,

சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது

அல்லல் அன்று அது காதல் அம் தோழி!

தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா

வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி    10

கண்டும், கழல் தொடி வலித்த என்

பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!           

- நற்றிணை 25


இலை இல பிடவம் 


இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,

புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,

பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்

பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,

கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து

- நற்றிணை 242


‘பிடா’ என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரம், சங்க இலக்கியத்தில் பிடவு மற்றும் பிடவம் என்று வேறு சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


வள மழை பொழிந்த வால் நிறக் களரி,

உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்

தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,

வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்

கை மாண் தோணி கடுப்ப, பையென,  

மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்

- அகநானூறு 344


பிடவூர் என்பது சங்க கால ஊர்களில் ஒன்று. 


தித்தன்

செல்லா நல் இசை உறந்தைக் குணாது,

நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர்     

அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், 

புறநானூறு 395


அம்மானே ஆகமச் சீலர்க்கு அருள் நல்கும்

பெம்மானே பேரருளாளன் பிடவூரன்

தம்மானே தண்டமிழ் நூல் புலவாணர்க்கு ஓர்

அம்மானை பரவையுண் மண்டலி அம்மானே

சுந்தரர் தேவாரம் 


சிறுமாரோடம்


இதனைச் செங்கருங்காலிப் பூ என நச்சினார்க்கினியர் உரை கூறுவார். இது நறு மோரோடம், பசுமோரோடம், சிறுமாரோடம் என்ற பெயர்களால் வழங்கப்படும். 


உலகம் படைத்த காலை தலைவ!

மறந்தனர் கொல்லோ சிறந்திசி னோரே

முதிரா வேனில் எதிரிய அதிரல்

பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்

நறுமோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய

செப்பிடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்

அணிநிறங் கொண்ட மணிமருள் ஐம்பால்

தாழ் நறுங்கதுப்பில் பையென முழங்கும்

அரும்பெறற் பெரும் பயம் கொள்ளாது

பிரிந்துறை மரபின் பொருள் படைத்தோரே-நற். 337


எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தென,

பசுமோரோடமோடு ஆம்பல் ஒல்லா                             

என்ற ஐங்குறுநூற்றுப் பாடலும் குறிப்பிடுகின்றன.


கோடம்பாக்கம் புரசவாக்கம், பனம்பாக்கம், அரசம்பாக்கம்


கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி 

சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்

காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது

ஈரிரவும் தூங்காது என் கண்

Saturday, February 10, 2024

ஞானத்தேடல் - Ep 127 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - முல்லை - 2 - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,


முல்லை


புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

வால் இழை மகளிர் நால்வர் கூடி,

கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி  

பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்,

- அகநானூறு 86


யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப, நெல்லொடு,

நாழி கொண்ட, நறுவீ முல்லை

அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,                          

பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப 

- முல்லைப்பாட்டு

 

அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை

நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த

மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர்

கோலங் கொடியிடையார் தாங்கொள்ள மேலோர்நாள்

- சிலப்பதிகாரம்


செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து,                                                 

அவ்இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,

இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,

நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது,

- நெடுநல்வாடை

 

தருமணல் தாழப் பெய்து இல்பூவ லூட்டி 

எருமைப் பெடையோ டெமரீங் கயரும்

பெருமணம். (கலி: 114 : 12-14)


கற்பு முல்லை 


முல்லை சான்ற கற்பின்

மெல்லியல் குறுமகள் உறைவுஇன் ஊரே.

- அகநா


நறுமணம்  மிக்க முல்லை மலர் ஒத்த, கற்பில் சிறந்த, மென்மைத்தன்மை வாய்ந்த என் தலைவி இருக்கும் இனிய ஊர் இதுவே. – தலைவன்.


குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்

மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்

- சிறுபாண்


கற்பு என்பது தலைவன் தலைவி இருவர்க்கும் கற்பிக்கப்பட்ட நெறி அல்லது ஒழுக்கமாகும். இதனால் அன்பின் ஐந்திணைகளுள் முல்லைத் திணை யைச் சார்ந்த பாடல்கள் கற்பு என்பதற்கு விளக்கமாக அமையக் கூடியவையே ஆகும்.


அதற்கு 'கல்வி' என்ற பொருளைப் பழங்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழங்கினர்.


கற்பெனப்படுவது சொல் திறம்பாமை

நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

- கொன்றை வேந்தன்


இயல்பு வெற்றி


போட்டியிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாட்டையும் வெற்றி எனலாம். இவ்வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். 


அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை இப்பகுதியிலுள்ள துறைகள் காட்டுகின்றன. அரச முல்லை, பார்ப்பன முல்லை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, ஏறுஆண் முல்லை, வல்லஆண் முல்லை, காவல் முல்லை, பேர்ஆண் முல்லை, மற முல்லை, குடை முல்லை ஆகிய துறைகள் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.


ஒரு நாட்டு வழக்குப் பாடல். 

'பச்சைத் தண்ணியிலே பல்லைக் கழுவு; முல்லைக் காற்றிலே முகத்தைக் கழுவு' - இந்த நாட்டு வழக்கு, முகத்தை முல்லை மணம் கமழும் தென்றலாலே கழுவிக் கொள்ளச் சொல்கின்றது. காற்றாலே கழுவுவதாம்.


திருமுல்லை வாயில், முல்லையூர், முல்லைக்காடு, முல்லைப்பாடி.


முல்லைப்பாட்டு நூல் எழுந்தது போன்று முல்லைப் பெயர் கொண்ட புலவர் பட்டியலும் உண்டு;


அள்ளூர் நன்முல்லையார்

காவல் முல்லைப் பூதனார்


தவளம் – வெண்ணிறமுல்லை

தளவம் – செம்முல்லை


முல்லை - முனைவர் வி.சி. சசிவல்லி (தமிழ்நாட்டில் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி வி.சி.சசிவல்லி).


Tuesday, February 06, 2024

ஞானத்தேடல் - Ep 126 - நட்பின் இலக்கணம் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் - (Gnanathedal)

 

நட்பின் இலக்கணம் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன்


காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே,

மாநிறைவு இல்லதும், பன்நாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,

வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,

கோடி யாத்து, நாடுபெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம்போலத்,

தானும் உண்ணான், உலகமும் கெடுமே

- புறநானூறு (184)


வரி எப்படி வசூலிக்க வேண்டும் என்ற முறையை மிக அழகாக அனைவரும் புரியும் வண்ணம் எளிமையாக இந்த பாடலில் விளக்கப்பட்டுள்ளது.


பாடலின் விளக்கம்: விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்.


அறந்துஞ்சும் உறந்தை 


அன்னச்சேவலே! குமரித்துறையில் அயிரைமீனை விழுங்கிவிட்டு வடமலைக்குப் பறந்து செல்லும்போது, இடையில் உறையூருக்குச் சென்று, "பிசிராந்தையார் வளர்ப்புப் பறவை நான் (பிசிராந்தை அடியுறை) என்று சொன்னால் அரசன் கோப்பெருஞ்சோழன் உன் பேடைப்பறவை அணிந்துகொள்ள அணிகலன்கள் தருவான்" என்று ஒரு பாடலில் இவர் குறிப்பிட்ட உவமை கோப்பெருஞ்சோழன் மீது இவர் கொண்டிருந்த பற்றியும் நாட்டின் வளத்தையும் அழகாக விளக்குகிறது.


யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்காகியர் என வினவுதிராயின்,

மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்

யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்

அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

- புறநானூறு (191)


நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,

எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;

அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்

தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,

இசைமரபு ஆக, நட்புக் கந்தாக,

இனையதோர் காலை ஈங்கு வருதல்;

‘வருவன்’ என்ற கோனது பெருமையும்,

அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,

வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே;

அதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்

சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை

அன்னோனை இழந்தஇவ் வுலகம்

என்னா வதுகொல்? அளியது தானே!

- புறநானூறு (217)

என்று வியந்து வியந்து பாடி உருகினார்.. தானும் வடகிருந்து உயிர் துறக்க முடிவு செய்தார்.


உடனே மன்னன் தடுத்து, “உமக்கு இன்னும் மகப்பேறு இல்லை. மகப்பேறு இல்லாத மாந்தர்கள் வானவர் தம் உலகு புகப்பெறார். ஆகையால் மகன் பிறந்த பிறகு வந்து அரசனது நடுகல் இடம் கொடுக்க, வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பது வரலாறு.


சங்க கால புலவர்களின் வாழ்க்கை நமக்கு மொழியை மட்டும் புகட்ட வில்லை. மொழியோடு காலத்தால் அழியாத பல உண்மைகளையும் மனிதன் வாழும் நெறிகளையும், உயர்ந்த ஞானத்தையும் நமக்கு வழங்குகின்றன