Friday, April 26, 2024

ஞானத்தேடல் - Ep 138 - சேந்தனார் திருப்பல்லாண்டு - (Gnanathedal)


 சேந்தனார் திருப்பல்லாண்டு


மத்தளை தயிருண் டானும் மலர்மிசை மன்னினானும்

நித்தமும் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்தி

செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட

கைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டுளானே.

-தனிப்பாடல்


செம்பொன் அம்பலத்து வேந்தன் தனக்கு ..... ஆகியதே என வரும் கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தால் (தி.11 ப.33 பா.26) நாம் அறியலாம்.


வரையேற விட்டமுதம் சேந்தனிட உண்டனை


என்னும் சிவஞான சுவாமிகளின் பாடலால் அறியலாம்.


"சேந்தா தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக"


திருவிடைக்கழி - சேந்தன்மங்கலம். இவ்வூர் திருவிடைக்கழிக்கு அருகில் இன்றும் இப்பெயருடன் இருக்கின்றது.


இவ்வூரில் இருந்த சேந்தனார் வழிபட்ட திருக்கோயில் அண்மைக் காலத்தில் அழிந்துவிட்டது. அங்குக் கிடைத்த சிவலிங்கத் திருவுருவத்தை மட்டிலும் அவ்வூரின் அருகில் உள்ள விசலூரில், சிறுகோயில் எடுத்து எழுந்தருளச் செய்துள்ளனர்.


திருப்பல்லாண்டு


மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்

வஞ்சகர் போயகலப்

பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து

புவனியெல் லாம்விளங்க

அன்ன நடைமட வாள்உமை கோன்அடி

யோமுக் கருள்புரிந்து

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்

பல்லாண்டு கூறுதுமே. (1)


மிண்டு மனத்தவர் போமின்கள்

மெய்யடியார்கள் விரைந்து வம்மின்

கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்

செய்மின் குழாம்புகுந்

தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்

ஆனந்த வெள்ளப்பொருள்

பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே

பல்லாண்டு கூறுதுமே (2)


நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட

நிகரிலா வண்ணங்களும்

சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந்

திறங்களு மேசிந்தித்

தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும்

அமிர்தினுக் காலநிழற்

பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (3)


சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த

தூய்மனத் தொண்டருள்ளீர்

சில்லாண் டிற்சிதை யும்சில தேவர்

சிறுநெறி சேராமே

வில்லாண்டகன கத்திரள் மேரு

விடங்கன் விடைப்பாகன்

பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (4)


புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட்

டின்னம் புகலரிதாய்

இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக்

கென்செய வல்லம்என்றும்

கரந்துங் கரவாத கற்பக னாகிக்

கரையில் கருணைக்கடல்

பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே

பல்லாண்டு கூறுதுமே (5)


சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால்

எங்குந் திசைதிசையன

கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா

மாய்நின்று கூத்தாடும்

ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை

அப்பனை ஒப்பமரர்

பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (6)


சீரும் திருவும் பொலியச் சிவலோக

நாயகன் சேவடிக்கீழ்

ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற

தார்பெறு வார்உலகில்

ஊரும் உலகும் கழற உழறி

உமைமண வாளனுக்காட்

பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்

பல்லாண்டு கூறுதுமே (7)


சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங்

கொங்கையிற் செங்குங்குமம்

போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று

புண்ணியர் போற்றிசைப்ப

மாலும் அயனும் அறியா நெறிதந்து

வந்தென் மனத்தகத்தே

பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (8)


பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்

பாற்கடல் ஈந்தபிரான்

மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்

மன்னிய தில்லைதன்னுள்

ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்

பலமே இடமாகப்

பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (9)


தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ்

வண்டத் தொடுமுடனே

பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும்

போனக மும் அருளிச்

சோதி மணிமுடித் தாமமும் நாமமும்

தொண்டர்க்கு நாயகமும்

பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (10)


குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி

எங்கும் குழாம்பெருகி

விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி

மிகுதிரு வாரூரின்

மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்

மணஞ்செய் குடிப்பிறந்த

பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே

பல்லாண்டு கூறுதுமே (11)


ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்

அணியுடை ஆதிரைநாள்

நாரா யணனொடு நான்முகன் அங்கி

இரவியும் இந்திரனும்

தேரார் வீதியில் தேவர் குழாங்கள்

திசையனைத்தும் நிறைந்து

பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்

பல்லாண்டு கூறுதுமே (12)


எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு

தாம்மெம் பிரான்என் றென்று

சிந்தை செய்யும் சிவன் சீரடியார்

அடிநாய் செப்புரை

அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்

தாண்டுகொண் டாருயிர்மேற்

பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று

பல்லாண்டு கூறுதுமே (13)

Monday, April 22, 2024

ஞானத்தேடல் - Ep 137 - கொடிக்கவி - (Gnanathedal)


 கொடிக்கவி


மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களையும் குறிக்கும். இந்நூல்கள் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவன.


உந்தி களிறு உயர்போதம் சித்தியார்

பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட்

பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு

உண்மைநெறி சங்கற்ப முற்று


சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.


திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்

திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்

சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்

சிவஞான சித்தியார் - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்

இருபா இருபது - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்

உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்

சிவப்பிரகாசம் - உமாபதி சிவாசாரியார்

திருவருட்பயன் - உமாபதி சிவாசாரியார்

வினாவெண்பா - உமாபதி சிவாசாரியார்

போற்றிப்பஃறொடை - உமாபதி சிவாசாரியார்

கொடிப்பாட்டு - உமாபதி சிவாசாரியார்

நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்

உண்மைநெறி விளக்கம் - உமாபதி சிவாசாரியார்

சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்


கொடிக்கவி


ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்

றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்

தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே

குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே.



பொருளாம் பொருளேது போதேது கண்ணே

திருளாம் வெளியே திரவே - தருளாளா

நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்

கோபுர வாசற் கொடி.


வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்

தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப்

பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே

குறிக்குமரு ணல்கக் கொடி.


அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்

பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்

பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்

கூசாமற் காட்டாக் கொடி.


அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்

கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை

மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்

கூறாமல் கூறக் கொடி.


ஞானத்தேடல் - Ep 136 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தாழை, தளவம், தாமரை - (Gnanathedal)


குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  தாழை, தளவம், தாமரை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்.  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

தாழை, தளவம், முள் தாள் தாமரை


தாழை


மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம்,

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா, 

கடல் பெரிது, மண் நீரும் ஆகாது அதன் அருகே 

சிறு ஊறல் உண் நீரும் ஆகிவிடும்.


தெங்கின் இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு — புறநானூறு 29

கோள் தெங்கின் குலை வாழை — பொருநராற்றுப்படை 

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த — பெரும்பாணாற்றுப்படை 


தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின் (நன்னூல் 187) 


நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கொல் எனவேண்டா – நின்று

தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்.

மூதுரை, ஔவையார்


வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி

வேய்முற்றி முத்துதிரும் வெற்ப அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழம்.

- பழமொழி நானூறு


தளவம்


பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம் முகை,

ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப,

ஐங்குறுநூறு 447


புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை

நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,

காடே கம்மென்றன்றே; அவல

அகநானூறு 23


பிடவம் மலர, தளவம் நனைய

கார்கவின் கொண்ட கானம் காணின்

ஐங்குறுநூறு 499


தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை

முகைதலைத் திறந்த நாற்றம் புதல்மிசை

பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல

வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று

காரிது பருவம் ஆயின்

வாரா ரோநம் காத லோரே.

- குறுந்தொகை 382


தாமரை


செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி

பாதம் போற்றும் வாதவூர் அன்ப

பா எனப்படுவது உன் பாட்டு

பூ எனப்படுவது பொறிவாழ் பூவே

- நால்வர் நான்மணிமாலை


நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்.

- மூதுரை, ஔவையார்


மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்

இதழகத் தனைய தெருவம் இதழகத்

தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்

தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்

தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர்

பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த

நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப

ஏம வின்றுயில் எழுதல் அல்லதை

வாழிய வஞ்சியும் கோழியும் போலக்

கோழியின் எழாதெம் பேரூர் துயிலே.

- பரிபாடல் திரட்டு 8


பொய்கை. போர்க்களம் புறவிதழ் புலவு வாட்படை புல்லிதழ்

ஐய கொல்களி றகவித ழரச ரல்லிதன் மக்களா

மையில் கொட்டையம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையாற்

பையவுண்டபின் கொட்டைமேற் பவுத்திரத் தும்பி பறந்ததே'

- சீவக சிந்தாமணி


முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக்

கள்கமழ்நெய்தல் ஊதி, எல்படக்

கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்

அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்கும்

- திருமுருகாற்றுப்படை


மன்உயிர் அறியாத் துன்அரும் பொதியில்

சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,

வேனிலானே தண்ணியள்; பனியே,

வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,

அலங்கு வெயிற் பொதிந்த தாமரை

உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே

- குறுந்தொகை 376- (படுமரத்து மோசிக்கொற்றனார்)


Biophysics and Physiology of Temperature Regulation in Thermogenic Flowers

Thermoregulating lotus flowers – Nature 1996


விளக்கின்அன்ன சுடர்விடு தாமரை - நற்றிணை 310

சுடர்ப் பூந்தாமரை - அகநானூறு 6

எரி அகைந்தன்ன தாமரை - அகநானூறு 106


வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்

கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்

- நற்றிணை 290


தண் தாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகரா மண்டூகம்

வண்டோ கானத்திடை இருந்தும் வந்து கமலமது உண்ணும்

பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரைக்

கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே

- விவேகசிந்தாமணி


Sunday, April 07, 2024

ஞானத்தேடல் - Ep 135 - சித்திரக்கவி - மாலைமாற்று - (Gnanathedal)


 சித்திரக்கவி - மாலைமாற்று

சீகாழி – திருமாலைமாற்று

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

– திருஞானசம்பந்தர்

---------------------------------------------------------

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா (1)

யாம் ஆமா - நீ ஆம் ஆம் - மாயாழீ - காமா- காண் - நாகா
காணாகாமா - காழீயா - மாமாயாநீ - மா - மாயா
---------------------------------------------------------

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா (2)

யாகா - யாழீ - காயா - காதா - யார் ஆர் - ஆ - தாய் ஆயாய் -
ஆயா - தார் - ஆர் ஆயா - தாக ஆயா - காழீயா - கா யா
---------------------------------------------------------

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா (3)

தாவா - மூவா -  தாசா -  காழீநாதா - நீ -  யாமா -  மா
மா - யா நீ - தானாழி - காசா - தா - வா - மூ - வாதா
---------------------------------------------------------

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ (4)

நீவா - வாயா - கா - யாழீ - காவா - வான்நோவாராமே
மேரா - வான் - நோவாவா - காழீயா - காயா - வாவா நீ
---------------------------------------------------------

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா (5)

யா - காலா -  மேயா - காழீ யா -  மேதாவீ - தாய் ஆவி
வீயாதா -  வீதாம் -  மே - யாழீ - யாம் - மேல் - ஆகு - ஆயா
---------------------------------------------------------

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே (6)

மேலேபோகாமே - தேழீ - காலாலே - கால் ஆனாயே
ஏல் - நால் - ஆக - ஆல் - ஏலா - காழீதே - மேகா - போலேமே
---------------------------------------------------------

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ (7)

நீயா - மாநீ - ஏயா - மாதா - ஏழீ - காநீதானே
நே - தாநீ - காழிவேதா - மாயாயேநீ - மாய் - ஆநீ
---------------------------------------------------------

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே (8)

நேணவராவிழயாசைழியே (நே, அணவர், ஆ, விழ, யா, ஆசை, இழியே) - வேகதளேரியளாயுழிகா (வேக(ம்) அதரி ஏரி, அளாய உழி, கா)
காழியு(ள்)ளாய்! - அரிளேதகவே (அரு, இளவு, ஏது, அகவே) - ஏழிசை இராவணனே
---------------------------------------------------------

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

காலே - மேலே - காண்  நீ - காழீ - காலே மாலே - மே பூ
பூ - மேல் ஏ(ய்) - - மாலே - காழீ! காண் - காலே மேலே கா.
---------------------------------------------------------

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

வேரியும் - ஏண் - நவ- காழியொயே - ஏனை -  நீள்நேம் - அடு - அள் - ஓகரது ஏ
தேரகளோடு - அமணே - நினை - ஏய் - ஒழி - காவணமே - உரிவே
---------------------------------------------------------

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

நேர் - அகழ் ஆம் - இதய ஆசு - அழி - தாய் ஏல் நன் நீயே - ஏல் + ந + அன் -ஆய் உழிகா
காழியுளானின் - நினையே - நினையே - தாழ்(வு) - இசையா - தமிழாகரனே

Sunday, March 31, 2024

ஞானத்தேடல் - Ep 134 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - நெய்தல் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  நெய்தல்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

......

காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,


நெய்தல்


வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79 (52)

காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் – குறி 84 (66)


நெய்தல்மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர். குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது. 


1. நீள்நறு நெய்தல் – நீண்ட வாசனையுடைய நெய்தற்பூ. இதன் காம்பு நீண்டது. இது சுனைகளிலும், குளங்களிலும் பூக்கும் (வரி 79). 


2. மணிக்குலைக் கள் கமழ் நெய்தல் – இது குறுகிய காம்பினை உடையது. இது வயல்களில் பூக்கும் (வரி 84).


கவிஞர் இளஞ்சேரன் (இலக்கியம் ஒரு பூக்காடு)


ஆம்பல் – செவ்வாம்பல் / செவ்வல்லி / அரக்காம்பல் ; வெள்ளாம்பல் / அல்லி

குவளை – செங்குவளை ; கருங்குவளை

நெய்தல் – நீலநிறம் / வெளிர் நீலம்

காவி – நீலநிறம் 


நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்

மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய

செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/13-15


மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் - ஐங்குறுநூறு

மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி – பட்டினப்பாலை


வைகறை மலரும் நெய்தல் போல – ஐங் 188/3

நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக – நற் 187/1


“முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக்

கள்கமழ்நெய்தல் ஊதி, எல்படக்

கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்

அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்கும்”

- திருமுருகாற்றுப்படை


பாசடை கலித்த கணை கால் நெய்தல்

விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும் – அகம் 70


அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்

நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401


சிறு பாசடைய நெய்தல் – நற் 27/11,12


பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி

உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது

நெய்தல் பாசடை புரையும் அம் செவி

பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென

அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – நற் 47/1-6


ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்

ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,

புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்

பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,

படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!         

இன்னாது அம்ம, இவ் உலகம்;

இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.

- புறநானூறு 194


ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் 

விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா

பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்

கருமங்கள் வேறு படும்

- நாலடியார் (கூடா நட்பு)


அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவார் உறவு 

- மூதுரை 17


முருகன் தீம்புனல் அலைவாய் – - தொல். களவு.-சூ. 23 ந: பையுண்மாலை.


“வரைவயிறு கிழித்த நிழல்திகழ் நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்' என்பது ஒரு பழம்பாட்டு.


கழனி உழவர் கலி சிறந்து எடுத்த

கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை

அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்

திரு மணி விளக்கின் அலைவாய்ச்   

- அகநானூறு 266


பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.

பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.


நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட

அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;      

அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,

'பிறர்' எனக் குணம் கொல்லாது,

ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும், மூன்றும், 

உடையை ஆகி, இல்லோர் கையற,

நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்

வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்

நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,

கடு வளி தொகுப்ப ஈண்டிய    

வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!

புறநானூறு 55


தாழ்நீர் = ஆழமான நீர். 18. புணரி = அலைகடல்

Friday, March 22, 2024

ஞானத்தேடல் - Ep 133 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வள்ளி - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  வள்ளி 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

..............


வள்ளி


வள்ளி நுண்ணிடை - அகநானூறு 286

வள்ளிமருங்குல் - புறநானூறு 316


ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதல்அரிந் தற்று


பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,

பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்!

வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத

கானம் கடந்து சென்றார்?

ஐந்திணை ஐம்பது

 


உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே

இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே

மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே

நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து

திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே

- புறநானூறு 109



வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை,

வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க;

மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ,

காஞ்சி நீழல், தமர் வளம் பாடி,

ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த

வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்

தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர!

- அகநானூறு 286

 


பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக்

கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா,

ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்

பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி!

- கலித்தொகை 41


கருளுடை வள்ளி இடை தொடுபு இழைத்த உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடக் கமழ் தார் - பரிபாடல் 21



அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி

நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே! - பரிபாடல் 14


எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களின் முதிர்வாய் வள்ளியங்காடு - முல்லைப்பாட்டு 101,

பாசிலை வாடா வள்ளியங்காடு இறந்தோரே – குறுந்தொகை 216

மலர்ந்த வள்ளியங்கானம் கிழவோன் - ஐங்குறுநூறு 250


மாவள்ளிக் கிழங்கு / மாவலிக் கிழங்கு / மாகாளிக்கிழங்கு

நாட்டில் விளைந்தால் நன்னாரி, மலையில் விளைந்தால் மாகாளி

செவ்வள்ளி அல்லது இராசவள்ளி

மரவள்ளி / ஆள்வள்ளி

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

வெற்றிலை வள்ளிக் கிழங்கு

ஆனைவள்ளி / நீர்வள்ளிக் கிழங்கு



கொடிநிலை, கந்தழி, வள்ளி, என்ற

வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே


 

கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து

காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர்


காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து

காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.



வள்ளிமலை – 11 திருப்புகழ்


வள்ளியூர் – 1 திருப்புகழ்


வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ

வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே


வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு

வள்ளிமண வாளப் ...... பெருமாளே.


----


கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப


கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச


அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல்


அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே


சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே


வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே


வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.


- திருப்புகழ்


'வள்ளிச் சன்மார்க்கம்' என்பது யாரொருவர் தன்னை இழந்து ('யான் எனது'

என்பன அற்று) தலைவனை நாடுகிறாரோ அவரை இறைவன் தானே நாடிவந்து


அருள் புரிவார் என்பதாகும். இந்த 'வள்ளிச் சன்மார்க்க' நெறியை முருகன்


சிவபெருமானுக்கு உபதேசித்தார்.

 


யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.


Thursday, March 14, 2024

ஞானத்தேடல் - Ep 132 - தவறை உணர்தல் - (Gnanathedal)


 தவறை உணர்தல்


வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்

    பெருந்துயரிடும்பையில் பிறந்து,

கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு

     அவர்த்தரும் கலவியேகருதி,

ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்

    உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்

    நாராயணா வென்னும் நாமம்.


தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,

பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,

கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா.,

அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால்,

என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்,

குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா.,

அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,

நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்,

தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்

ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


தந்தைதாய் மக்களே சுற்றமென்

   றுற்றுவர் பற்றி நின்ற

பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ

   பழியெனக் கருதி னாயேல்

அந்தமா யாதியாய் ஆதிக்கும்

   ஆதியாய் ஆய னாய

மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா

   வல்லையாய் மருவு நெஞ்சே


சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்

நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது

தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்

பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே

- திருமந்திரம்


Thursday, March 07, 2024

ஞானத்தேடல் - Ep 131 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாழை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  வாழை 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

..............


வாழை


இருகயல் உண்கண் இளையவளை வேந்தன்

தருகென்றால் தன்னையரும் நேரார் - செருவறைந்து

பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால்

வாழைக்காய் உப்புறைத்தல் இல்.

- பழமொழி நானூறு 338


சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய

அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து,

மயங்கு துயர் உற்ற மையல் வேழம்

உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,

ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்

மா மலைநாடன் கேண்மை

காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.

- குறுந்தொகை 308


அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்

கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்

கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,

கடுங் கண் கேழல் உழுத பூழி,

நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்  

உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை

முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்

மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,

மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி

வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,          

சாந்த விறகின் உவித்த புன்கம்

கூதளம் கவினிய குளவி முன்றில்,

செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்

ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,

நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,            

வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!

கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,

பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர், நாளும்  

ஈயா மன்னர் நாண,

வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.

- புறநானூறு 168


மகளிர் கூந்தலின் மயிர்முடிப்பு வாழைப்பூவினது தோற்றம்போலப் பொலிந்து காணப்படுவதை,

வாழைப் பூ எனப் பொலிந்த ஓதி - சிறுபாணாற்றுப்படை


வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல்

மகளிர் ஓதி அன்ன பூவொடு துயல்வரும் - நற்றிணை 225


பரிசிலர்க்கு வரையாது வழங்கிய வெளிமான் இறந்துபட்டான். அவன் பிரிவினை ஆற்றாது அழும் மகளிர்தம் வளைகள் வாழைப்பூப்போலச் சிதறிவிழுந்ததை,

வாழைப் பூவின் வளை முறி சிதற - புறநானூறு 237



புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை

முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்

குலைவாய் தோயும் கொழு மடல் வாழை

அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்

செம் முக மந்தி ஆரும் நாட!

- நற்றிணை 355


படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்

கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை

ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்

மெல் விரல் மோசை போல, காந்தள்

வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப

- நற்றிணை 188


குவி முகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த                                     

ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு – அகம். 134


சிலம்பில் போகிய செம் முக வாழை

அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,

பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்

நல் வரை நாடனொடு அருவி ஆடியும்

அகநானூறு 302


தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம்,    

வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்,    

கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் 

குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம்,   

திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும்,  360

தீம் பல் தாரம் முனையின், சேம்பின்  

முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர். பகற் பெயல்

- பெரும்பாணாற்றுப்படை

Thursday, February 29, 2024

ஞானத்தேடல் - Ep 130 - இருபா இருபது - (Gnanathedal)


 இருபா இருபது


மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களையும் குறிக்கும். இந்நூல்கள் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவன.


உந்தி களிறு உயர்போதம் சித்தியார்

பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட்

பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு

உண்மைநெறி சங்கற்ப முற்று


சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.


திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்

திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்

சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்

சிவஞான சித்தியார் - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்

இருபா இருபது - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்

உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்

சிவப்பிரகாசம் - உமாபதி சிவாசாரியார்

திருவருட்பயன் - உமாபதி சிவாசாரியார்

வினாவெண்பா - உமாபதி சிவாசாரியார்

போற்றிப்பஃறொடை - உமாபதி சிவாசாரியார்

கொடிப்பாட்டு - உமாபதி சிவாசாரியார்

நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்

உண்மைநெறி விளக்கம் - உமாபதி சிவாசாரியார்

சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்


கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி

மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் - வெண்ணெய் நல்லூர்

மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை

கைகண்டார் உள்ளத்துக் கண்


இந்நூலின் முதற் செய்யுள் கடவுள் வணக்கமாக அமைந்துள்ளது. கடவுளே குருவாக வந்து அருள்புரிதலினாலும், குரு கடவுளுக்குச் சமமானதாலும், ஆசிரியர் அருள்நந்தி சிவாச்சாரியார், தமது குருவாகின மெய்கண்டதேவரையே கடவுளாகவைத்துப் போற்றித் துதித்துள்ளார்.


'சிவபெருமானே தன்னுடைய நெற்றிக் கண்ணையும். திருநீலகண்டத்தினையும் மறைத்து, திருவெண்ணெய் நல்லூரில் மெய்கண்டதேவர் என்னும் பெயரும் திருவுரு வமும் கொண்டு எழுந்தருளிப் போந்து, உலக மக்களின் மலமாசுகளைப் போக்கியருள்கின்றார். அவரை ஒருமுறை சென்று பொருந்தி நினைத்துத் தொழுபவர்கள், உயிருக்குயிராக உள்ள சிவபெருமானைத் தம்முடைய உள்ளத்தின் கண் தெளிவுறக் கண்டறியும் பேறு பெற்றவர்கள் ஆவர் என்பது இம்முதற்பாடலின் கருத்து. இதனால் சிவபெரு மானே மெய்கண்ட தேவராக எழுந்தருளித் தமக்கு அருள் யூரிந்தனர் என ஆசிரியர் புகழ்ந்து துதிக்கின்றார்


கண் அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என

வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ!

காரா கிரகக் கலி ஆழ்வேனை நின்

பேரா இன்பத்து இருத்திய பெரும!

வினவல் ஆனாது உடையேன் எனது உளம்

நீங்கா நிலை ஊங்கும் உளையால்

அறிவின்மை மலம் பிரிவு இன்மை எனின்

ஓராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல்

திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய்

சுத்தன் அமலன் சோதி நாயகன்

முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா

வேறுநின்று உணர்த்தின் வியாபகம் இன்றாய்ப்

வேறும் இன்றாகும் எமக்கு எம் பெரும!

இருநிலம் தீநீர் இயமானன் கால் எனும்

பெருநிலைத் தாண்டவம் பெருமாற்கு இலாதலின்

வேறோ உடனோ விளம்பல் வேண்டும்

சீறி அருளல் சிறுமை உடைத்தால்.

அறியாது கூறினை அபக்குவ பக்குவக்

குறிபார்த்து அருளினம் குருமுதலாய் எனின்

அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும்

பக்குவம் வேண்டில் பயன் இலை நின்னால்

பக்குவம் அதனால் பயன்நீ வரினே

நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ

தன் ஒப்பார் இலி என்பதும் தகுமே

மும்மலம் சடம் அணு மூப்பு இளமையில் நீ

நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ

உணர்வு எழும் நீக்கத்தை ஓதியது எனினே

இணை இலி ஆயினை என்பதை அறியேன்

யானே நீக்கினும் தானே நீங்கினும்

கோனே வேண்டா கூறல் வேண்டும்

"காண்பார் யார்கொல் காட்டாக்கால்" எனும்

மாண்பு உரை உணர்ந்திலை மன்ற பாண்டியன்

கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞானத்தின்

"ஆட்பால் அவர்க்கு அருள்" என்பதை அறியே


இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி

இயமான னாயெறியுங் காற்று மாகி

அருநிலைய திங்களாய் ஞாயி றாகி

ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்


ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே?

    அடங்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே?

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே?

    உகுகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே?

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே?

    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே?

காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே?

    காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே?


ஆட்பா லவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்

கேட்பான் புகில் அளவில்லை; கிளக்கவேண்டா;

கோட்பா லனவும் விளையும் குறுகாமை எந்தை

தாட்பால்வணங்கித் தலை நின்று இவைகேட்கத் தக்கார்


Monday, February 26, 2024

ஞானத்தேடல் - Ep 129 - சகுனம் - 2 - (Gnanathedal)


 சகுனம் - 2


சகுனம் அல்லது நிமித்தம் தமிழர் வாழ்வில் கலந்த ஒன்று அவற்றை பற்றி இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பது  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  


Sagunam (Signs/Omen) - 2


Watching for signs/omen has been a part of Tamil culture. There are a lot of literary references about these. Let's explore those in this episode


References


சகுனம்

சொல்லரியகருடன்வா னரமரவ மூஞ்சூறு

சூகரங் கீரி கலைமான்

றுய்யபா ரத்வாச மட்டையெலி புன்கூகை

சொற்பெருக மருவு மாந்தை

வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்

விளங்குமிரு நா வுடும்பு

மிகவுரைசெ யிவையெலாம் வலமிருந் திடமாகில்

வெற்றியுண் டதிக நலமாம்

ஒல்லையின் வழிப்பயண மாகுமவர் தலைதாக்க

லொருதுடை யிருத்தல் பற்ற

லொருதும்ம லாணையிட லிருமல்போ கேலென்ன

வுபசுருதி சொல்லியவை யெலாம்

அல்லறரு நல்லவல வென்பர்முதி யோர்பரவு

மமலனே யருமை மதவே

ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள

ரறப்பளீ சுர தேவனே. 62


இதுவுமது


நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை

நாலி சிச்சிலி யோந்திதான்

நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி

நாடரிய சுரபி மறையோர்

வரியுழுவை முயலிவை யனைத்தும்வல மாயிடின்

வழிப்பயண மாகை நன்றா

மற்றுமிவை யன்றியே குதிரையனு மானித்தல்

வாய்ச்சொல் வாவா வென்றிடல்

தருவளை தொனித்திடுதல் கொம்புகிடு முடியரசர்

தப்பட்டை யொலிவல் வேட்டுத்

தணிமணி முழுக்கொழுத லிவையெலா மூர்வழி

தனக்கே நன்மை யென்பர்

அருணகிர ணோதயத் தருணபா னுவையனைய

வண்ணலே யருமை மதவே

ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள

ரறப்பளீ சுர தேவனே. 63


இதுவுமது


தலைவிரித் தெதிர்வருத லொற்றைப் பிராமணன்

றவசி சன்னாசி தட்டான்

றனமிலா வெறுமார்பி மூக்கறைபுல் விறகுதலை

தட்டைமுடி மொட்டைத் தலை

கலன்கழி மடைந்தையர் குசலக்கலஞ் செக்கான்

கதித்ததில் தைல மிவைகள்

காணவெதிர் வரவொணா நீர்க்குட மெருக்கூடை

கனிபுலா லுபய மறையோர்

நலமிகு சுமங்கலை கிழங்கு சூதகமங்கை

நாளும் வண்ணா னழுக்கும்

நசைபெருகு பாற்கலச மணிவளையன் மலரிலைக

னாடியெதிர் வர நன்மையாம்

அலைகொண்ட கங்கைபுனை வேணியாய் பரசணியு

மண்ணலே யருமை மதவே

ளனுதினமு மன தினினை தருசதுர கிரிவள

ரறப்பளீ சுர தேவனே. 64


துடிநூல்


சீருடனே துடிக்கிலுச்சி யிடரேநீங்கும்

     சிறந்தவுச்சிவலந்துடிக்கி லச்சஞ்சொல்லும்

பேருடனேவுச்சியிடம் பெருமையாகும்

    பின்றலையே துடிக்கிற் சத்துருக்களுண்டாம்

சார்புடனேதலையடங்கற் றுடிக்குமாகின்

    றலைவனாற்பெருமை சம்பத்துமுண்டாம்

நேருடனேநெற்றியிடத் துடிக்குமாகின்

    நேர்வார்த்தைசம்பத்து நிறையவாமே


‘நலம் துடிக்கின்றதோ? நான் செய் தீவினைச்

சலம் துடித்து, இன்னமும் தருவது உண்மையோ?-

பொலந் துடி மருங்குலாய்!-புருவம், கண், முதல்

வலம் துடிக்கின்றில; வருவது ஓர்கிலேன்.


‘முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்,

துனி அறு புருவமும், தோளும், நாட்டமும்,

இனியன துடித்தன; ஈண்டும், ஆண்டு என்

நனி துடிக்கின்றன; ஆய்ந்து நல்குவாய்


‘மறந்தனென்; இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்:

அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்,

பிறந்த பார் முழுவதும் தம்பியே பெறத்

துறந்து, கான் புகுந்த நாள், வலம் துடித்ததே


‘நஞ்சு அனையான், வனத்து இழைக்க நண்ணிய

வஞ்சனை நாள், வலம் துடித்த; வாய்மையால்

எஞ்சல; ஈண்டு தாம் இடம் துடிக்குமால்;

“அஞ்சல்” என்று இரங்குவாய்! அடுப்பது யாது?’ என்றாள்


உள்ளகம் நறுந்தா துறைப்பமீ தழிந்து

கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக்

கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்

உண்ணிறை கரந்தகத் தொளித்துநீ ருகுத்தன

எண்ணுமுறை இடத்தினும் வலத்தினுந் துடித்தன

விண்ணவர் கோமான் விழவுநா ளகத்தென் 

- சிலப்பதிகாரம்


Thursday, February 15, 2024

ஞானத்தேடல் - Ep 128 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குல்லை, பிடவம், சிறுமாரோடம் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்


குல்லை


கஞ்சங்குல்லைப்பூ, கஞ்சாங்கோரை, மலைப்பச்சை, புனத்துளசி, நாய்த்துளசி, திருநீற்றுப்பச்சை


குல்லைக்கண்ணி வடுகர் முனையது

வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,

வழிபடல் சூழ்ந்திசின், அவருடைய நாட்டே!

- மாமூலனார்


குல்லை குளவி கூதளம் குவளை 

இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் - நற்றிணை


முடித்த குல்லை இலை உடை நறும் பூ - திரு 201


மெல் இணர்க் கொன்றையும், மென்மலர்க் காயாவும்,

புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,

குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்

கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்

பல்லான் பொதுவர் கதழ்விடை கோட்காண்பார்

முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன

பல்லர், பெருமழைக்கண்ணர், மடம் சேர்ந்த

சொல்லர், சுடரும் கனங்குழைக் காதினர்,

நல்லவர் கொண்டார் மிசை,

- கலித்தொகை 103


இச்செடிகள் மலிந்த காடாக வளர்ந்து இருக்கும் என்பதைப் "குல்லையம்புறவு என்றார் நத்தத்தனார்

குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த - சிறுபானாற்றுப்படை 29


குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் – பொருநராற்றுப்படை 234


பிடவம்


அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன

செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்

நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்

பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்

வள மலை நாடன் நெருநல் நம்மொடு     

கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ,

சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது

அல்லல் அன்று அது காதல் அம் தோழி!

தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா

வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி    10

கண்டும், கழல் தொடி வலித்த என்

பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!           

- நற்றிணை 25


இலை இல பிடவம் 


இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,

புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,

பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்

பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,

கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து

- நற்றிணை 242


‘பிடா’ என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரம், சங்க இலக்கியத்தில் பிடவு மற்றும் பிடவம் என்று வேறு சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


வள மழை பொழிந்த வால் நிறக் களரி,

உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்

தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,

வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்

கை மாண் தோணி கடுப்ப, பையென,  

மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்

- அகநானூறு 344


பிடவூர் என்பது சங்க கால ஊர்களில் ஒன்று. 


தித்தன்

செல்லா நல் இசை உறந்தைக் குணாது,

நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர்     

அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், 

புறநானூறு 395


அம்மானே ஆகமச் சீலர்க்கு அருள் நல்கும்

பெம்மானே பேரருளாளன் பிடவூரன்

தம்மானே தண்டமிழ் நூல் புலவாணர்க்கு ஓர்

அம்மானை பரவையுண் மண்டலி அம்மானே

சுந்தரர் தேவாரம் 


சிறுமாரோடம்


இதனைச் செங்கருங்காலிப் பூ என நச்சினார்க்கினியர் உரை கூறுவார். இது நறு மோரோடம், பசுமோரோடம், சிறுமாரோடம் என்ற பெயர்களால் வழங்கப்படும். 


உலகம் படைத்த காலை தலைவ!

மறந்தனர் கொல்லோ சிறந்திசி னோரே

முதிரா வேனில் எதிரிய அதிரல்

பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்

நறுமோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய

செப்பிடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்

அணிநிறங் கொண்ட மணிமருள் ஐம்பால்

தாழ் நறுங்கதுப்பில் பையென முழங்கும்

அரும்பெறற் பெரும் பயம் கொள்ளாது

பிரிந்துறை மரபின் பொருள் படைத்தோரே-நற். 337


எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தென,

பசுமோரோடமோடு ஆம்பல் ஒல்லா                             

என்ற ஐங்குறுநூற்றுப் பாடலும் குறிப்பிடுகின்றன.


கோடம்பாக்கம் புரசவாக்கம், பனம்பாக்கம், அரசம்பாக்கம்


கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி 

சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்

காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது

ஈரிரவும் தூங்காது என் கண்

Saturday, February 10, 2024

ஞானத்தேடல் - Ep 127 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - முல்லை - 2 - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,


முல்லை


புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

வால் இழை மகளிர் நால்வர் கூடி,

கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி  

பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்,

- அகநானூறு 86


யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப, நெல்லொடு,

நாழி கொண்ட, நறுவீ முல்லை

அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,                          

பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப 

- முல்லைப்பாட்டு

 

அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை

நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த

மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர்

கோலங் கொடியிடையார் தாங்கொள்ள மேலோர்நாள்

- சிலப்பதிகாரம்


செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து,                                                 

அவ்இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,

இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,

நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது,

- நெடுநல்வாடை

 

தருமணல் தாழப் பெய்து இல்பூவ லூட்டி 

எருமைப் பெடையோ டெமரீங் கயரும்

பெருமணம். (கலி: 114 : 12-14)


கற்பு முல்லை 


முல்லை சான்ற கற்பின்

மெல்லியல் குறுமகள் உறைவுஇன் ஊரே.

- அகநா


நறுமணம்  மிக்க முல்லை மலர் ஒத்த, கற்பில் சிறந்த, மென்மைத்தன்மை வாய்ந்த என் தலைவி இருக்கும் இனிய ஊர் இதுவே. – தலைவன்.


குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்

மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்

- சிறுபாண்


கற்பு என்பது தலைவன் தலைவி இருவர்க்கும் கற்பிக்கப்பட்ட நெறி அல்லது ஒழுக்கமாகும். இதனால் அன்பின் ஐந்திணைகளுள் முல்லைத் திணை யைச் சார்ந்த பாடல்கள் கற்பு என்பதற்கு விளக்கமாக அமையக் கூடியவையே ஆகும்.


அதற்கு 'கல்வி' என்ற பொருளைப் பழங்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழங்கினர்.


கற்பெனப்படுவது சொல் திறம்பாமை

நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

- கொன்றை வேந்தன்


இயல்பு வெற்றி


போட்டியிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாட்டையும் வெற்றி எனலாம். இவ்வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். 


அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை இப்பகுதியிலுள்ள துறைகள் காட்டுகின்றன. அரச முல்லை, பார்ப்பன முல்லை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, ஏறுஆண் முல்லை, வல்லஆண் முல்லை, காவல் முல்லை, பேர்ஆண் முல்லை, மற முல்லை, குடை முல்லை ஆகிய துறைகள் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.


ஒரு நாட்டு வழக்குப் பாடல். 

'பச்சைத் தண்ணியிலே பல்லைக் கழுவு; முல்லைக் காற்றிலே முகத்தைக் கழுவு' - இந்த நாட்டு வழக்கு, முகத்தை முல்லை மணம் கமழும் தென்றலாலே கழுவிக் கொள்ளச் சொல்கின்றது. காற்றாலே கழுவுவதாம்.


திருமுல்லை வாயில், முல்லையூர், முல்லைக்காடு, முல்லைப்பாடி.


முல்லைப்பாட்டு நூல் எழுந்தது போன்று முல்லைப் பெயர் கொண்ட புலவர் பட்டியலும் உண்டு;


அள்ளூர் நன்முல்லையார்

காவல் முல்லைப் பூதனார்


தவளம் – வெண்ணிறமுல்லை

தளவம் – செம்முல்லை


முல்லை - முனைவர் வி.சி. சசிவல்லி (தமிழ்நாட்டில் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி வி.சி.சசிவல்லி).