Friday, December 15, 2023

ஞானத்தேடல் - Ep119 - நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை - (Gnanathedal)


நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை


வைணவர்களின் தமிழ் மறை


நான்கு வேதங்களின் சாரம்


12 ஆழ்வார்கள்


24 பிரபந்தங்கள்


நூலாக தொகுத்தவர் நாதமுனிகள் (தனி கதை)


முதலாழ்வார்கள் அயோநிஜர்கள்


பொய்கையாழ்வார் (காஞ்சிபுரம் அருகில் திருவெக்கா) - பாஞ்சஜன்ய அம்சம்


பூதத்தாழ்வார் (கடல்மல்லை - கௌமோதகி கதை அம்சம்)


பேயாழ்வார் (திருமயிலை - நந்தகம் அம்சம்)


பொய்கையாழ்வார்


வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று


ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,

ஈரடியும் காணலா மென்னெஞ்சே - ஓரடியில்

தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,

மாயவனை யேமனத்து வை


பூதத்தாழ்வார்


அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியா - நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்


மாலே. நெடியானே. கண்ணனே, விண்ணவர்க்கு

மேலா. வியந்துழாய்க் கண்ணியனே - மேலால்

விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்

அளவன்றால் யானுடைய அன்பு


பேயாழ்வார்


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,

என்னாழி வண்ணன்பால் இன்று


சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்

தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த

வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,

தேனமரும் பூமேல் திரு



ஈரத்தமிழ்


மொழியால் பக்தி பக்தியால் மொழி வளர்ந்தது


ஆழ்வார்கள் திருவடிகள் சரணம்

No comments: