Wednesday, March 23, 2022

ஞானத்தேடல் - Ep 38 - ஆணின் பருவங்கள் (Gnanathedal)

 

ஆணின் பருவங்கள்

பூவுக்கு பருவம் வகுத்தது போல மனிதர்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பருவங்கள் வகுத்தது நம் இலக்கியங்கள். மேலும் பலவகையான பாடல்களில் அவற்றை பயன்படுத்தியும் உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Stages of Men In addition to classifying different stages of a flower, Tamil literature has also classified different stages for men and women. Those stages are referred in various types of songs. Let's explore that in this episode... References பன்னிரு பாட்டியல் - Panniru Paatiyal புறநானூறு - Puranaanooru ஐங்குறுநூறு - Ainkurunooru கம்பராமாயணம் - Kambaramayanam பொருநராற்றுப்படை - Porunaraatruppadai பெரும்பாணாற்றுப்படை - Perumpaanaatruppadai திருப்புகழ் - Thiruppugazh பரத சேனாபதீயம் - Bharatha Senapathiyam கந்தர் அந்தாதி - Kandhar Andhaadhi பெரியாழ்வார் திருமொழி - Periyaazhwar Thirumozhi திருப்பாணாழ்வார் பாசுரம் - Thiruppaanazhwar Pasuram பாலன்:  1 முதல் 7 வரை மீளி:  8 முதல் 10 வரை மறவோன்: 11 முதல் 14 வரை  திறவோன்: 15 வயது  காளை: 16 வயது  விடலை: 17 முதல் 30 வரை முதுமகன்: 30 வயதுக்கு மேல் காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே பாலன் யாண்டே ஏழ்என மொழிப மீளி யாண்டே பத்துஇயை காறும் மறவோன் யாண்டே பதினான் காகும் திறவோன் யாண்டே பதினைந்து ஆகும் பதினாறு எல்லை காளைக்கு யாண்டே அத்திறம் இறந்த முப்பதின் காறும் விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன் நீடிய நாற்பத் தெட்டின் அளவும் ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப - பன்னிருப் பாட்டியல் ### பாலன் வாயுள்வையகம்கண்ட மடநல்லார் ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் பாயசீருடைப் பண்புடைப்பாலகன் மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே - பெரியாழ்வார் திருமொழி செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச் செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே - கந்தர் அந்தாதி சே புங்கவ சங்கர பாலக தெய்வ வாவி அம்பு சே புங்கவ சங்கு அரி மருகா என சின்னம் முன்னே செப்பு உங்கு அவசம் பெறுவார் கணும் தெய்வயானைத் (தனச்) செப்பும் கவசம் புனை புயன் பாதம் என் சென்னியதே ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே ஆலமா மரத்தி னிலைமே லொருபாலகனாய், ஞால மேழு முண்டா னரங்கத் தரவி னணையான், கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில் நீல மேனி யையோ நிறை கொண்டதென் நெஞ்சினையே. - திருப்பாணாழ்வார் பாசுரம் உரைதரு பாலன் பருவமு நாளுத் தரமுடனே - பரத சேனாபதீயம் குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும் பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன் குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் ...... சிறுபாலன் - திருப்புகழ் ### மீளி கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட் கடம்பமர் நெடுவே ளன்ன மீளி - பெரும்பாணாற்றுப்படை ஆளி நன்மான் அணங்குடைக் குருளை மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத் தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு - பொருநராற்றுப்படை ### மறவோன் நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் விடுவான், ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் - கம்பராமாயணம் ஏயினன், இருள் உறு தாமதம் எனும் அத் தீவினை தரு படை-தெறு தொழில் மறவோன் - கம்பராமாயணம் ### காளை அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே - புறநானூறு ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - புறநானூறு ### விடலை புதுக்கலத் தன்ன கனிய ஆலம் போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம் தண்ணிய இனிய வாக எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே - ஐங்குறுநூறு களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது பசிதின வருத்தம் பைதறு குன்றத்துச் சுடர்தொடிக் குறுமகள் இனைய எனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே - ஐங்குறுநூறு ###முதுமகன் வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் யாப்புஉடை உள்ளத்து எம்அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன் படிம உண்டியன் மழைவளம் தரூஉம் அழல்ஓம் பாளன் -மணிமேகலை நன் றாய்ந்த நீள் நிமிர்சடை முது முதல்வன் வாய் போகாது, ஒன்று புரிந்த ஈரி ரண்டின், ஆறுணர்ந்த ஒரு முதுநூல் இகல் கண்டோர் மிகல் சாய்மார் - புறநானூறு தொல்குடி மன்னன் மகளே; முன்நாள் கூறி வந்த மாமுது வேந்தர்க்கு - புறநானூறு * உறையூர் முதுகண்ணன் சாத்தனார் * பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி * உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்)

ஞானத்தேடல் - Ep 37 - பெண்ணின் பருவங்கள் (Gnanathedal)


பெண்ணின் பருவங்கள்

பூவுக்கு பருவம் வகுத்தது போல மனிதர்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பருவங்கள் வகுத்தது நம் இலக்கியங்கள். மேலும் பலவகையான பாடல்களில் அவற்றை பயன்படுத்தியும் உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  

Stages of Women

In addition to classifying different stages of a flower, Tamil literature has also classified different stages for men and women. Those stages are referred in various types of songs. Let's explore that in this episode...

References

வெண்பாப் பாட்டியல் - Venba Paatiyal
மஹாபரத சூடாமணி - Mahabharatha Soodamani
பன்னிரு  பாட்டியல் - Panniru Paatiyal
திருக்கைலாய ஞானஉலா - Thirukailaya Gnana Ulaa

உலா இலக்கணம்

திறந்தெரிந்த பேதைமுத லெழுவர் செய்கை
மறந்தயர வந்தான் மறுகென்று - அறைந்தகலி
வெண்பா வுலாவாம்
- வெண்பாப் பாட்டியல்

பேதைவய தேழாம் பெதும்பைபதி னொன்று மங்கை
மாதே பதின்மூன்றா கும்மடந்தை - யோதுபதி
னாறரிவை யாமிருபத் தைந்துமுப்பத் தொன்தெரிவை
பேரிளம்பெண் ணாற்பதெனப் பேசு
- மஹாபரத சூடாமணி

பேதை: 5-7 வயது
பெதும்பை: 8-11 வயது
மங்கை: 12-13 வயது
மடந்தை: 14-19 வயது
அரிவை: 20-25 வயது
தெரிவை:25-31 வயது
பேரிளம்பெண்: 32-40 வயது

ஏழு நிலையு மியம்புங் காலைப்
பேதை பெதும்பை மங்கை மடந்தை
யரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே. 
- பன்னிரு  பாட்டியல் - 220

பேதை          : 1 முதல் 8 வயது வரை
பெதும்பை : 9 முதல் 10 வயது வரை
மங்கை       : 11 முதல் 14 வயது வரை
மடந்தை      : 15 முதல் 18 வயது வரை
அரிவை      : 19 முதல் 24 வயது வரை
தெரிவை     : 25 முதல் 29 வயது வரை
பேரிளம்      : பெண் 30 வயது முதல்

பேதைக் கியாண்டே யைந்துமுத லெட்டே. - 221

பெதும்பைக் கியாண்டே யொன்பதும் பத்தும். - 222

மங்கைக் கியாண்டே பதினொன்று முதலாத்

திரண்ட பதினா லளவும் சாற்றும். - 223

மடந்தைக் கியாண்டே பதினைந்து முதலாத்

திடம்படு மொன்பதிற் றிரட்டி செப்பும். - 224

அரிவைக் கியாண்டே யறுநான் கென்ப. - 225

தெரிவைக் கியாண்டே இருபத் தொன்பது. - 226

ஈரைந் திருநான் கிரட்டி கொண்டது
பேரிளம் பெண்டுக் கியல்புஎன மொழிப. - 227


பேதை தனக்குப் பிராயமும் ஏழு. பெதும்பை ஒன்பது
ஓதிய மங்கைக்குப் பனிரண்டு ஆகும் ஒளிர் மடந்தை
மாதர்க்கு ஈரேழ், அரிவை பதினெண், மகிழ் தெரிவைச்
சாதி மூவேழ் எனும், பேரிளம் நாலெட்டு தையலர்க்கே
- தனிப்பாடல்

திருக்கைலாய ஞானஉலா

பேதை (அறியா வெகுளிப் பருவத்தாள்)

பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள்;

நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்;தன் செவ்வாயின்
வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள்

பெதும்பை

பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள்

மங்கை

மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள்

மடந்தை

தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள்

அரிவை

செங்கேழல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள்

தெரிவை

ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள்

பேரிளம்பெண்

பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள்

Saturday, March 12, 2022

ஞானத்தேடல் - Ep 36 - மலரின் பருவங்கள் (Gnanathedal)


 மலரின் பருவங்கள்

மலர்கள் பற்றி கூறாத இலக்கியங்கள் இல்லை எனலாம். இறையை வணங்கும் போதும், காதல் அறிவிக்கும் போதும், மென்மையை குறிப்பிடும் போதும் மலர்களோடு ஒப்புமை செய்யப்படும். ஆனால் மலர்களுக்கு பருவங்கள் வகுத்து, அந்த பருவங்களுக்கு பெயரும் கொடுத்துள்ளது நம் இலக்கியங்கள் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Stages of a flower Flowers are described in almost all Tamil literature. Flowers are used to worship of the Gods, to express love and to compare with softness. However, our literature has classified different stages of a flower and also named each stage, let's explore that in this episode... References குறுந்தொகை - Kurunthokai அகநானூறு - Aganaanooru திருவாசகம் - Thiruvaasagam திருக்குறள் - Thirukkural ## குறுந்தொகை கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே. நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. ## பூக்கும் பருவத்தின்  முதல் நிலை - அரும்பு மொக்குவிடும் நிலை - மொட்டு  முகிழ்க்கும் நிலை- முகை பூவாகும்  நிலை - மலர் மலர்ந்த இதழ் விரிந்த நிலை - அலர் வாடும் நிலை - வீ வதங்கிக் கிடக்கும் நிலை - செம்மல் அரும்பு ,நனை ,முகை, மொக்குள்,  முகில், மொட்டு,போது, மலர் , பூ  , வீ ,   பொதும்பர் , பொம்மல் ,செம்மல் என்று பதின்மூன்று பெயர்கள். அரும்பு - அரும்பும் நிலை நனை - அரும்பு வெளியில் தலை காட்டும் நிலை  முகை - தலைகாட்டிய நனை முத்தாக மாறும் நில மொக்குள் - பூவுக்குள் பருவமாற்றமான நாற்றம்   அதாவது மணம் பெறும் நிலை. மொக்குள் பருவத்தில்தான் பூவில் மணத்தைக் கொடுக்கும் மாற்றங்கள் நடைபெறும். முகிழ் - மணம் கொண்டு முகிழ்தல் அதாவது விரிந்தும் விரியாமலும் இருக்கும் நிலை முகிழ். போது  - மொட்டு மலரும்போது ஏற்படும் புடைப்பு நிலை மலர் - மலரும்  பூ அதாவது மலர்ந்த நிலை பூ - முழு இதழ்களும் விரிந்த நிலையில் பூத்திருக்கும் மலர் வீ  - உதிரும்  நிலையில் இருக்கும் பூ பொதும்பர் - பூக்கள்  பூத்துக்குலுங்கி நிற்கும் நிலை பொதும்பர்  பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் பூ செம்மல் - உதிர்ந்த பழம் பூ ## அகநானூறு புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச் சுரும்புவாய் திறந்த பொன்புரை நுண்தாது முகைவாய் திறந்த நகைவாய் முல்லை கடிமகள் கதுப்பின் நாறிக் கொடிமிசை சுரிமுகிழ் முசுண்டைப் பொதியவிழ் வான்பூ # திருவாசகம் தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும் முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே ## திருக்குறள் காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய் முகைமொக்குள் உள்ள  நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு

ஞானத்தேடல் - Ep 35 - பஞ்சபூதங்களும் இலக்கியமும் (Gnanathedal)

 


பஞ்சபூதங்களும் இலக்கியமும் உலக இயக்கத்தின் முக்கிய பங்கு பஞ்சபூதங்களுக்கு உண்டு. உலகையும் இயக்கி புலவர்களையும் இயக்கி இலக்கியதில் இடம் பெற்று உலகமக்களாலும் வழிபடப் பெற்று விளங்கும் பஞ்சபூதங்கள் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... The Five Elements of Nature and Tamil Literature The Five elements of nature are important for the functioning of life in this planet. They direct the poets' thoughts and takes a place in the literature and is also worshipped by the people. Let's see about what literature says about the five elements of nature in this episode... References தொல்காப்பியம் - Tholkaappiyam புறநானூறு - Puranaanooru பரிபாடல் - Paripaadal நாலாயிர திவ்ய பிரபந்தம் - Naalayira Dhivya Prabandham (Thirumazhisai Azhwar Thiruchandha Viruththam) அகம் புற ஆராய்ச்சி விளக்கம் - Agam Puram Aaraachi Vilakkam குறள்மூலம் Avvaiyar Kural Moolam திருவாசகம் - Thiruvaasagam - Pottri Thiruagaval அபிராமி அந்தாதி - Abirami Andhadhi திருக்குறள் - Thirukkural நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் -  தொல்காப்பியம் மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும் வலியும், தெறலும், அணியும், உடையோய் - புறநானூறு பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர். பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு, அவையும் நீயே, அடு போர் அண்ணால்! அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே; முந்தியாம் கூறிய ஐந்தனுள்ளும் ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே, இரண்டின் உணரும் வளியும் நீயே, மூன்றின் உணரும் தீயும் நீயே, நான்கின் உணரும் நீரும் நீயே, ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே. அதனால், நின்மருங்கின்று மூவேழ் உலகமும்! - பரிபாடல் நல்லெழுதியார் பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய் தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த கால் இரண்டுமாய் மீநிலாயது ஒன்றுமாகி வேறுவேறு தன்மையாய் நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே? - திருமழிசைப்பிரான் திருச்சந்த விருத்தம் நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே உலவையிரண் டொன்று விண் (5) - ஔவையார் குறள்மூலம் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி - போற்றித் திருஅகவல் திருவாசகம் பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர் விசும்பும், ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே. - அபிராமி அந்தாதி திருக்குறளும் பஞ்சபூதம் சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்  வகைதெரிவான் கட்டே யுலகு (27) - திருக்குறள் அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்