Showing posts with label Astronomy. Show all posts
Showing posts with label Astronomy. Show all posts

Wednesday, February 08, 2023

ஞானத்தேடல் - Ep 72 - தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) - (Gnanathedal)


 தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) 


தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Tamil and Science - 3


Let's see about the details found in Tamil literature about science in this episode


References

பொய்கையாழ்வார் கூறும் வானயியல்  


வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று


பூமியை அகலாகவும் அதைச் சுற்றியுள்ள கடலே நெய்யாகவும் வெப்பக் கதிர்வீசும் சூரியன் விளக்காகவும் சிவந்த கடர்வீசும் சங்கரத்தை ஏத்திய பெருமானது திருவடிகளில் இப்பாமாலையாகிய பூமாலையைச் சாத்தினேன், எதற்காகவென்றால் பகவத் கைங்கர்யத்திற்கு (இடையூறாக உள்ள) துன்பக்கடல் தீங்குவதற்காக


என்று கடல்கடைந்தது? எவ்வுலகம் நீரேற்றது?

ஒன்றும் அதனை உணரேன்நான் - அன்றது

அடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி இதுநீ

படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்


பகவானே நீ என்று கடலைக் கடைந்தாய். எப்போது இவ்வுலகத்தை நீரால் நிரப்பினாய். இது ஒன்றும் எனக்குத் தெரியாது. அன்றொருநாள் கடலை அடைத்துப் பாலம் அமைக்கிறாய், அதை உடைக்கிறாய், அதிலேயே படுத்துத் தூங்குகிறாய். இந்த உலகத்தைப் படைக்கிறாய், பெயர்த்து எடுக்கிறாய், அதை உண்கிறாய்.


பொய்கையாரின் முக்கியமான பாடல்களில் ஒன்று இது. விசித்திரமான இச்செயல்கள் அனைத்தையும் செய்வது கடவுளே என்பது உட்கருத்து.


தேவர்களுக்காகக் கடலைக் கடைத்தது எந்த நாள்? மாவலி தாரை வார்த்த நீரை ஏற்றுப் பெற்றது எத்த உலகம்? அவற்றை தான் அடியோடு அறியேன். அக்கடலானது இலங்கைக்குச் செல்ல முனைந்தபோது ஸ்ரீராமளால் மலைகளைக் கொண்டு திருஅணை கட்டி தூர்க்கப்பட்டது. இராவணவதம் முடிந்து திரும்பியபோது அவ்வணை உடைக்கப்பட்டது. எப்போதும் பள்ளிகொள்ளும் இடமாகக் கொள்ளப்பட்டது. இவ்வுலக மாளது பெருமானான உன்னால் படைக்கப்பட்டது. வராக அவதார காலத்தில் பெயர்த்து எடுக்கப்பட்டது. பிரளய வெள்ளம் கோத்தபோது. திருவயிற்றில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுப் பிள்பு வெளிப்படுத்தப்பட்டது.


இறைவனிடம் வினா எழுப்பும் முகமாக அமைத்து வினைச்சொல் வழி இறைவன் செயல்களை வெளிப்படுத்துகிறார் பொய்கையாழ்வார். திருப்பாற் கடலைக் கடைந்தது, வாமனனாக உலகை அளந்தது, இராமனாக இலங்கைக்கு அணைகட்டி அடைத்தது, உலகைப் படைத்தது, மண்ணை உண்டது, உமிழ்ந்தது ஆகிய செய்திகளை ஒரே பாசுரத்தில் சொல்லி விடும் திறன் வியப்பிற்குரியது.

Thursday, October 27, 2022

ஞானத்தேடல் - Ep 61 - வானசாஸ்திரம் - 3 - (Gnanathedal)

 

வானசாஸ்திரம் - 3


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 3


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்

சலமிகுதி துன்பந் தருக்கும் நலமில்லை

நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை

பாலுமின்றிச் செயபுவனம் பாழ்


பிலவ ஆண்டில் மழை கொஞ்சமாக பெய்யும் அரசாள்பவர் கோபம் அதிகம் கொள்வர் கொடுமைகள் புரிவர் மக்களுக்கு நலமில்லை. கால்நடைகள் பெருத்த அளவில் மடியும். விவசாயம் பொய்க்கும். பாலும் உணவும் இன்றி உலகம் பாழாகும்


சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்

அவமாம் விலைகுறையு மான்சாம் சுபமாகும்

நாடெங்கு மாரிமிகு நல்லவிளை வுண்டாகுங்

கேடெங்கு மில்லையதிற் கேள்


சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே பொருட்கள் வீணாகி அந்நாடு பாழாகும். மணப்பண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை இவ்வாண்டில்


சோப கிருதுதன்னிற்  றொல்லுலகெல் லாஞ்செழிக்குங்

கோப மகன்று குணம்பெருகுஞ் சோபனங்கள்

உண்டாகு மாரி யொழியாமற் பெய்யும்மெல்லாம்

உண்டாகு மென்றே யுரை


சோபகிருது ஆண்டில் உலகில் எல்லாம் செழிப்பாக இருக்கும். மக்களிடையே கோபகுணம் அகன்று நல்ல எண்ணங்கள் பெருகும். நற்செயல்கள் பெருகும் மழை நன்றாக பெய்யும் எல்லா வித்துக்களும் விளையும் நன்மைகள் உண்டாகும்.


கோரக் குரோதிதனிற் கொல்லைமிகுங் கள்ளரினாற்

பாரிற் சனங்கள் பயமடைவார் கார்மிக்க

அற்ப மழைபெய்யு மஃகம் குறையுமே

சொர்ப்பவிளை உண்டெனவே சொல்


குரோதி வருடம் கோரம் மிகுந்ததாக இருக்கும். கொலைகள் அதிகமாக நடக்கும். திருடர்களினால் மக்கள் மிகுந்த அச்சம் கொள்வர். மழை குறைவாக பெய்யும் யாகங்கள் குறையும். விளைச்சல் குன்றும்


இடைக்காடர் 60 வருட பலன்கள்


https://www.mediafire.com/file/st1eqzeoq45cxf9/Edaikaadar-60-Varuda-Palangal.pdf/file

Sunday, October 16, 2022

ஞானத்தேடல் - Ep 59 - வான சாஸ்திரம் - 2 - (Gnanathedal)

 

வான சாஸ்திரம் - 2


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 2


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


புறநானூறு


பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் (13),


வான்றோய் வன்ன புரிசை விசும்பின்

மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற் (21)


மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல (25)


முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,

செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் (60)


மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்

தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் (117)


வடமீன் புரையுங் கற்பின் மடமொழி (122)


வானம் மீன்பல பூப்பின், ஆனாது (125)


பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் (270)


மாரி வானத்து மீன் நாப்பண் (396)


பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை

பாடியவர்: கூடலூர்கிழார்



ஆடிய லழற்குட்டத்

தாரிரு ளரையிரவின்

முடப்பனையத்து வேர்முதலாக்

கடைக்குளத்துக் கயங்காய்ப்

பங்குனியுய ரழுவத்துத் 


தலைநாண்மீ னிலைதிரிய

நிலைநாண்மீ னதனெதி ரேர்தரத்

தொன்னாண்மீன் றுறைபடியப்

பாசிச் செல்லா தூசி முன்னா

தளக்கர்த்திணை விளக்காகக்


கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி

ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே

அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர்

பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன்

நோயில னாயி னன்றுமற் றில்லென


அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப

அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே

மைந்துடை யானை கைவைத் துறங்கவும்

திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவும்

காவல் வெண்குடை கால்பரிந் துலறவும்


காலியற் கலிமாக் கதியின்றி வைகவும்

மேலோ ருலக மெய்தின னாகலின்

ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித்

தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ

பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க்


களந்து கொடை யறியா வீகை

மணிவரை யன்ன மாஅ யோனே.


Monday, October 03, 2022

ஞானத்தேடல் - Ep 57 - வான சாஸ்திரம் - 1 - (Gnanathedal)

 

வான சாஸ்திரம் - 1


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 1


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


நட்சத்திரங்கள்


- விடிவெள்ளி -Venus

- ஆமைவெள்ளி - Orion's Belt

- கூட்டுவெள்ளி - Pleiades cluster

- கட்டில்கால் - Orion Constellation

- செட்டிக் குடிகெடுத்தான்

- கார்த்திகை நட்சத்திரம் - Pleiades cluster

- திருவாதிரை - Betelgeuse


ஆண்டாள் பாசுரம்


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

      கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

      வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்

      குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன்னாளால்

      கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்