Showing posts with label Flowers. Show all posts
Showing posts with label Flowers. Show all posts

Thursday, May 02, 2024

ஞானத்தேடல் - Ep 139 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல்


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்.  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

தாழை, தளவம், முள் தாள் தாமரை

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங்குரலி

கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை


மௌவல்


பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்,

புன்னகையோ மௌவல் மௌவல்


மனைநடு மௌவலொடு ஊழ் முகை அவிழ - நற்றிணை


மாதரார் முறுவல்போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப - கலித்தொகை 27


மணமௌவல் முகைஅன்ன மாவீழ் வார் நிரைவெண்பல் - கலித்தொகை 14


கொகுடி


நறுந்தண் கொகுடி - என மணத்துடன் குளிர்ச்சி உடையது


தேவார மூவரில் திருஞானசம்பந்தர் மட்டும், “புன்னையே கொகுடி முல்லை”, “கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்” எனப்பாடி யுள்ளார்.


நறும் பாதிரியு நாண்மலர்க் கொகுடியும் - பெருங்கதை

குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி - சூளாமணி


கருப்பறியலூர் / மேலைக்காழி / தலைஞாயிறு 


சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக் 

குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள்

மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்

கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.


நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன் 

கலந்தவர் கருப்பறியன் மேயகட வுள்ளைப்

பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று

வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே.


நீற்றாரு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே 

நிறைந்து தோன்றும்

காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக்

கருப்ப றியலூர்க்

கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையா ளவளோடுங்

கொகுடிக் கோயில்

ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்

கினிய வாறே.


சேடல்

நச்சினார்க்கினியர் - பவழக்கால் மல்லிகை

உ. வே. சா- பவழமல்லிகை பாரிசாதம்


சேடல் நெய்தல் பூளை மருதம்

சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்

- சிலப்பதிகாரம் 


சேடல் என்பதற்கு உச்சிச்செலுந்தில் என்னும்மரம் என அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.


செம்மல்

சேடல் செம்மல் - நச்சர் இதனைச் சாதிப் பூ என்றார். 


கூந்தலில் கிடந்த செம்மல் கோதை மேல் வீழ்ந்த கற்பின் - திருவிளையாடற்புராணம்.


செங்குரலி


ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி,

வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப்

- புறநானூறு 283


கோடல்


காந்தள், தோன்றி, கோடல்


கோடு - மரக்கொம்பு, வளைவு, மலை முகடு, யானைக் கொம்பு (மருப்பு), சங்கு

                     

வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் - அகநானூறு 264


வெஞ் சின அரவின் பை அணந்தன்ன

தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ

அகநானூறு 154


கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர் - அகநானூறு 23


ஊழ் உறு கோடல் போல, எல் வளை உகுபவால்  -  கலித்தொகை 48


களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,

ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும் - கலித்தொகை 101


தண்கமழ்‌ கோடல்‌ துடுப்பு ஈன - திணைமொழி ஐம்பது 21


தண் நறுங் கோடல் துடுப்பு எடுப்ப, கார் எதிரி

விண் உயர் வானத்து உரும் உரற்ற, திண்ணிதின்

புல்லுநர் இல்லார் நடுங்க, சிறு மாலை,

கொல்லுநர் போல, வரும். ஐந்திணை எழுபது 17


கோடல் கண்ணிக் குறவர் பெருமகன் - பரிபாடல்


பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்; 

கூடல் ஆக்கிடும், குன்றின் மணல்கொடு;

கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து

ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே!

- திருநாவுக்கரசர்


கூடலிழைத்தல் :


இது போன்று பத்து பாசுரங்களில் ஆண்டாள் கூடலிழைத்து அரங்கன் தன்னை சேர்வாரா மாட்டாரா என பார்க்கிறார்.


தெள்ளியார்பலர் கைதொழும் தேவனார், 

வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,

பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட,

கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே! 


காட்டில் வேங்கடம் கண்ண புரநகர், 

வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமணன்,

ஒட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னொடும்

கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே! 


ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை

நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்

கூடலைக் குழற்கோதை முன் கூறிய

பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே


Monday, April 22, 2024

ஞானத்தேடல் - Ep 136 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தாழை, தளவம், தாமரை - (Gnanathedal)


குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  தாழை, தளவம், தாமரை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்.  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

தாழை, தளவம், முள் தாள் தாமரை


தாழை


மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம்,

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா, 

கடல் பெரிது, மண் நீரும் ஆகாது அதன் அருகே 

சிறு ஊறல் உண் நீரும் ஆகிவிடும்.


தெங்கின் இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு — புறநானூறு 29

கோள் தெங்கின் குலை வாழை — பொருநராற்றுப்படை 

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த — பெரும்பாணாற்றுப்படை 


தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின் (நன்னூல் 187) 


நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கொல் எனவேண்டா – நின்று

தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்.

மூதுரை, ஔவையார்


வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி

வேய்முற்றி முத்துதிரும் வெற்ப அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழம்.

- பழமொழி நானூறு


தளவம்


பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம் முகை,

ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப,

ஐங்குறுநூறு 447


புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை

நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,

காடே கம்மென்றன்றே; அவல

அகநானூறு 23


பிடவம் மலர, தளவம் நனைய

கார்கவின் கொண்ட கானம் காணின்

ஐங்குறுநூறு 499


தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை

முகைதலைத் திறந்த நாற்றம் புதல்மிசை

பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல

வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று

காரிது பருவம் ஆயின்

வாரா ரோநம் காத லோரே.

- குறுந்தொகை 382


தாமரை


செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி

பாதம் போற்றும் வாதவூர் அன்ப

பா எனப்படுவது உன் பாட்டு

பூ எனப்படுவது பொறிவாழ் பூவே

- நால்வர் நான்மணிமாலை


நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்.

- மூதுரை, ஔவையார்


மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்

இதழகத் தனைய தெருவம் இதழகத்

தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்

தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்

தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர்

பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த

நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப

ஏம வின்றுயில் எழுதல் அல்லதை

வாழிய வஞ்சியும் கோழியும் போலக்

கோழியின் எழாதெம் பேரூர் துயிலே.

- பரிபாடல் திரட்டு 8


பொய்கை. போர்க்களம் புறவிதழ் புலவு வாட்படை புல்லிதழ்

ஐய கொல்களி றகவித ழரச ரல்லிதன் மக்களா

மையில் கொட்டையம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையாற்

பையவுண்டபின் கொட்டைமேற் பவுத்திரத் தும்பி பறந்ததே'

- சீவக சிந்தாமணி


முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக்

கள்கமழ்நெய்தல் ஊதி, எல்படக்

கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்

அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்கும்

- திருமுருகாற்றுப்படை


மன்உயிர் அறியாத் துன்அரும் பொதியில்

சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,

வேனிலானே தண்ணியள்; பனியே,

வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,

அலங்கு வெயிற் பொதிந்த தாமரை

உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே

- குறுந்தொகை 376- (படுமரத்து மோசிக்கொற்றனார்)


Biophysics and Physiology of Temperature Regulation in Thermogenic Flowers

Thermoregulating lotus flowers – Nature 1996


விளக்கின்அன்ன சுடர்விடு தாமரை - நற்றிணை 310

சுடர்ப் பூந்தாமரை - அகநானூறு 6

எரி அகைந்தன்ன தாமரை - அகநானூறு 106


வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்

கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்

- நற்றிணை 290


தண் தாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகரா மண்டூகம்

வண்டோ கானத்திடை இருந்தும் வந்து கமலமது உண்ணும்

பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரைக்

கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே

- விவேகசிந்தாமணி


Sunday, March 31, 2024

ஞானத்தேடல் - Ep 134 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - நெய்தல் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  நெய்தல்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

......

காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,


நெய்தல்


வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79 (52)

காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் – குறி 84 (66)


நெய்தல்மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர். குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது. 


1. நீள்நறு நெய்தல் – நீண்ட வாசனையுடைய நெய்தற்பூ. இதன் காம்பு நீண்டது. இது சுனைகளிலும், குளங்களிலும் பூக்கும் (வரி 79). 


2. மணிக்குலைக் கள் கமழ் நெய்தல் – இது குறுகிய காம்பினை உடையது. இது வயல்களில் பூக்கும் (வரி 84).


கவிஞர் இளஞ்சேரன் (இலக்கியம் ஒரு பூக்காடு)


ஆம்பல் – செவ்வாம்பல் / செவ்வல்லி / அரக்காம்பல் ; வெள்ளாம்பல் / அல்லி

குவளை – செங்குவளை ; கருங்குவளை

நெய்தல் – நீலநிறம் / வெளிர் நீலம்

காவி – நீலநிறம் 


நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்

மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய

செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/13-15


மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் - ஐங்குறுநூறு

மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி – பட்டினப்பாலை


வைகறை மலரும் நெய்தல் போல – ஐங் 188/3

நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக – நற் 187/1


“முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக்

கள்கமழ்நெய்தல் ஊதி, எல்படக்

கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்

அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்கும்”

- திருமுருகாற்றுப்படை


பாசடை கலித்த கணை கால் நெய்தல்

விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும் – அகம் 70


அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்

நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401


சிறு பாசடைய நெய்தல் – நற் 27/11,12


பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி

உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது

நெய்தல் பாசடை புரையும் அம் செவி

பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென

அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – நற் 47/1-6


ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்

ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,

புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்

பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,

படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!         

இன்னாது அம்ம, இவ் உலகம்;

இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.

- புறநானூறு 194


ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் 

விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா

பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்

கருமங்கள் வேறு படும்

- நாலடியார் (கூடா நட்பு)


அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவார் உறவு 

- மூதுரை 17


முருகன் தீம்புனல் அலைவாய் – - தொல். களவு.-சூ. 23 ந: பையுண்மாலை.


“வரைவயிறு கிழித்த நிழல்திகழ் நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்' என்பது ஒரு பழம்பாட்டு.


கழனி உழவர் கலி சிறந்து எடுத்த

கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை

அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்

திரு மணி விளக்கின் அலைவாய்ச்   

- அகநானூறு 266


பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.

பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.


நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட

அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;      

அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,

'பிறர்' எனக் குணம் கொல்லாது,

ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும், மூன்றும், 

உடையை ஆகி, இல்லோர் கையற,

நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்

வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்

நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,

கடு வளி தொகுப்ப ஈண்டிய    

வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!

புறநானூறு 55


தாழ்நீர் = ஆழமான நீர். 18. புணரி = அலைகடல்

Friday, March 22, 2024

ஞானத்தேடல் - Ep 133 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வள்ளி - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  வள்ளி 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

..............


வள்ளி


வள்ளி நுண்ணிடை - அகநானூறு 286

வள்ளிமருங்குல் - புறநானூறு 316


ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதல்அரிந் தற்று


பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,

பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்!

வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத

கானம் கடந்து சென்றார்?

ஐந்திணை ஐம்பது

 


உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே

இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே

மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே

நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து

திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே

- புறநானூறு 109



வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை,

வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க;

மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ,

காஞ்சி நீழல், தமர் வளம் பாடி,

ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த

வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்

தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர!

- அகநானூறு 286

 


பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக்

கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா,

ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்

பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி!

- கலித்தொகை 41


கருளுடை வள்ளி இடை தொடுபு இழைத்த உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடக் கமழ் தார் - பரிபாடல் 21



அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி

நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே! - பரிபாடல் 14


எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களின் முதிர்வாய் வள்ளியங்காடு - முல்லைப்பாட்டு 101,

பாசிலை வாடா வள்ளியங்காடு இறந்தோரே – குறுந்தொகை 216

மலர்ந்த வள்ளியங்கானம் கிழவோன் - ஐங்குறுநூறு 250


மாவள்ளிக் கிழங்கு / மாவலிக் கிழங்கு / மாகாளிக்கிழங்கு

நாட்டில் விளைந்தால் நன்னாரி, மலையில் விளைந்தால் மாகாளி

செவ்வள்ளி அல்லது இராசவள்ளி

மரவள்ளி / ஆள்வள்ளி

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

வெற்றிலை வள்ளிக் கிழங்கு

ஆனைவள்ளி / நீர்வள்ளிக் கிழங்கு



கொடிநிலை, கந்தழி, வள்ளி, என்ற

வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே


 

கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து

காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர்


காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து

காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.



வள்ளிமலை – 11 திருப்புகழ்


வள்ளியூர் – 1 திருப்புகழ்


வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ

வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே


வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு

வள்ளிமண வாளப் ...... பெருமாளே.


----


கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப


கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச


அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல்


அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே


சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே


வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே


வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.


- திருப்புகழ்


'வள்ளிச் சன்மார்க்கம்' என்பது யாரொருவர் தன்னை இழந்து ('யான் எனது'

என்பன அற்று) தலைவனை நாடுகிறாரோ அவரை இறைவன் தானே நாடிவந்து


அருள் புரிவார் என்பதாகும். இந்த 'வள்ளிச் சன்மார்க்க' நெறியை முருகன்


சிவபெருமானுக்கு உபதேசித்தார்.

 


யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.


Thursday, March 07, 2024

ஞானத்தேடல் - Ep 131 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாழை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  வாழை 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

..............


வாழை


இருகயல் உண்கண் இளையவளை வேந்தன்

தருகென்றால் தன்னையரும் நேரார் - செருவறைந்து

பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால்

வாழைக்காய் உப்புறைத்தல் இல்.

- பழமொழி நானூறு 338


சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய

அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து,

மயங்கு துயர் உற்ற மையல் வேழம்

உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,

ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்

மா மலைநாடன் கேண்மை

காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.

- குறுந்தொகை 308


அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்

கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்

கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,

கடுங் கண் கேழல் உழுத பூழி,

நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்  

உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை

முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்

மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,

மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி

வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,          

சாந்த விறகின் உவித்த புன்கம்

கூதளம் கவினிய குளவி முன்றில்,

செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்

ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,

நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,            

வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!

கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,

பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர், நாளும்  

ஈயா மன்னர் நாண,

வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.

- புறநானூறு 168


மகளிர் கூந்தலின் மயிர்முடிப்பு வாழைப்பூவினது தோற்றம்போலப் பொலிந்து காணப்படுவதை,

வாழைப் பூ எனப் பொலிந்த ஓதி - சிறுபாணாற்றுப்படை


வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல்

மகளிர் ஓதி அன்ன பூவொடு துயல்வரும் - நற்றிணை 225


பரிசிலர்க்கு வரையாது வழங்கிய வெளிமான் இறந்துபட்டான். அவன் பிரிவினை ஆற்றாது அழும் மகளிர்தம் வளைகள் வாழைப்பூப்போலச் சிதறிவிழுந்ததை,

வாழைப் பூவின் வளை முறி சிதற - புறநானூறு 237



புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை

முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்

குலைவாய் தோயும் கொழு மடல் வாழை

அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்

செம் முக மந்தி ஆரும் நாட!

- நற்றிணை 355


படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்

கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை

ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்

மெல் விரல் மோசை போல, காந்தள்

வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப

- நற்றிணை 188


குவி முகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த                                     

ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு – அகம். 134


சிலம்பில் போகிய செம் முக வாழை

அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,

பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்

நல் வரை நாடனொடு அருவி ஆடியும்

அகநானூறு 302


தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம்,    

வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்,    

கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் 

குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம்,   

திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும்,  360

தீம் பல் தாரம் முனையின், சேம்பின்  

முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர். பகற் பெயல்

- பெரும்பாணாற்றுப்படை

Thursday, February 15, 2024

ஞானத்தேடல் - Ep 128 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குல்லை, பிடவம், சிறுமாரோடம் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்


குல்லை


கஞ்சங்குல்லைப்பூ, கஞ்சாங்கோரை, மலைப்பச்சை, புனத்துளசி, நாய்த்துளசி, திருநீற்றுப்பச்சை


குல்லைக்கண்ணி வடுகர் முனையது

வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,

வழிபடல் சூழ்ந்திசின், அவருடைய நாட்டே!

- மாமூலனார்


குல்லை குளவி கூதளம் குவளை 

இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் - நற்றிணை


முடித்த குல்லை இலை உடை நறும் பூ - திரு 201


மெல் இணர்க் கொன்றையும், மென்மலர்க் காயாவும்,

புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,

குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்

கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்

பல்லான் பொதுவர் கதழ்விடை கோட்காண்பார்

முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன

பல்லர், பெருமழைக்கண்ணர், மடம் சேர்ந்த

சொல்லர், சுடரும் கனங்குழைக் காதினர்,

நல்லவர் கொண்டார் மிசை,

- கலித்தொகை 103


இச்செடிகள் மலிந்த காடாக வளர்ந்து இருக்கும் என்பதைப் "குல்லையம்புறவு என்றார் நத்தத்தனார்

குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த - சிறுபானாற்றுப்படை 29


குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் – பொருநராற்றுப்படை 234


பிடவம்


அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன

செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்

நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்

பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்

வள மலை நாடன் நெருநல் நம்மொடு     

கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ,

சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது

அல்லல் அன்று அது காதல் அம் தோழி!

தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா

வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி    10

கண்டும், கழல் தொடி வலித்த என்

பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!           

- நற்றிணை 25


இலை இல பிடவம் 


இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,

புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,

பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்

பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,

கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து

- நற்றிணை 242


‘பிடா’ என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரம், சங்க இலக்கியத்தில் பிடவு மற்றும் பிடவம் என்று வேறு சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


வள மழை பொழிந்த வால் நிறக் களரி,

உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்

தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,

வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்

கை மாண் தோணி கடுப்ப, பையென,  

மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்

- அகநானூறு 344


பிடவூர் என்பது சங்க கால ஊர்களில் ஒன்று. 


தித்தன்

செல்லா நல் இசை உறந்தைக் குணாது,

நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர்     

அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், 

புறநானூறு 395


அம்மானே ஆகமச் சீலர்க்கு அருள் நல்கும்

பெம்மானே பேரருளாளன் பிடவூரன்

தம்மானே தண்டமிழ் நூல் புலவாணர்க்கு ஓர்

அம்மானை பரவையுண் மண்டலி அம்மானே

சுந்தரர் தேவாரம் 


சிறுமாரோடம்


இதனைச் செங்கருங்காலிப் பூ என நச்சினார்க்கினியர் உரை கூறுவார். இது நறு மோரோடம், பசுமோரோடம், சிறுமாரோடம் என்ற பெயர்களால் வழங்கப்படும். 


உலகம் படைத்த காலை தலைவ!

மறந்தனர் கொல்லோ சிறந்திசி னோரே

முதிரா வேனில் எதிரிய அதிரல்

பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்

நறுமோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய

செப்பிடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்

அணிநிறங் கொண்ட மணிமருள் ஐம்பால்

தாழ் நறுங்கதுப்பில் பையென முழங்கும்

அரும்பெறற் பெரும் பயம் கொள்ளாது

பிரிந்துறை மரபின் பொருள் படைத்தோரே-நற். 337


எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தென,

பசுமோரோடமோடு ஆம்பல் ஒல்லா                             

என்ற ஐங்குறுநூற்றுப் பாடலும் குறிப்பிடுகின்றன.


கோடம்பாக்கம் புரசவாக்கம், பனம்பாக்கம், அரசம்பாக்கம்


கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி 

சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்

காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது

ஈரிரவும் தூங்காது என் கண்

Saturday, February 10, 2024

ஞானத்தேடல் - Ep 127 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - முல்லை - 2 - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,


முல்லை


புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

வால் இழை மகளிர் நால்வர் கூடி,

கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி  

பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்,

- அகநானூறு 86


யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப, நெல்லொடு,

நாழி கொண்ட, நறுவீ முல்லை

அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,                          

பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப 

- முல்லைப்பாட்டு

 

அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை

நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த

மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர்

கோலங் கொடியிடையார் தாங்கொள்ள மேலோர்நாள்

- சிலப்பதிகாரம்


செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து,                                                 

அவ்இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,

இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,

நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது,

- நெடுநல்வாடை

 

தருமணல் தாழப் பெய்து இல்பூவ லூட்டி 

எருமைப் பெடையோ டெமரீங் கயரும்

பெருமணம். (கலி: 114 : 12-14)


கற்பு முல்லை 


முல்லை சான்ற கற்பின்

மெல்லியல் குறுமகள் உறைவுஇன் ஊரே.

- அகநா


நறுமணம்  மிக்க முல்லை மலர் ஒத்த, கற்பில் சிறந்த, மென்மைத்தன்மை வாய்ந்த என் தலைவி இருக்கும் இனிய ஊர் இதுவே. – தலைவன்.


குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்

மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்

- சிறுபாண்


கற்பு என்பது தலைவன் தலைவி இருவர்க்கும் கற்பிக்கப்பட்ட நெறி அல்லது ஒழுக்கமாகும். இதனால் அன்பின் ஐந்திணைகளுள் முல்லைத் திணை யைச் சார்ந்த பாடல்கள் கற்பு என்பதற்கு விளக்கமாக அமையக் கூடியவையே ஆகும்.


அதற்கு 'கல்வி' என்ற பொருளைப் பழங்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழங்கினர்.


கற்பெனப்படுவது சொல் திறம்பாமை

நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

- கொன்றை வேந்தன்


இயல்பு வெற்றி


போட்டியிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாட்டையும் வெற்றி எனலாம். இவ்வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். 


அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை இப்பகுதியிலுள்ள துறைகள் காட்டுகின்றன. அரச முல்லை, பார்ப்பன முல்லை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, ஏறுஆண் முல்லை, வல்லஆண் முல்லை, காவல் முல்லை, பேர்ஆண் முல்லை, மற முல்லை, குடை முல்லை ஆகிய துறைகள் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.


ஒரு நாட்டு வழக்குப் பாடல். 

'பச்சைத் தண்ணியிலே பல்லைக் கழுவு; முல்லைக் காற்றிலே முகத்தைக் கழுவு' - இந்த நாட்டு வழக்கு, முகத்தை முல்லை மணம் கமழும் தென்றலாலே கழுவிக் கொள்ளச் சொல்கின்றது. காற்றாலே கழுவுவதாம்.


திருமுல்லை வாயில், முல்லையூர், முல்லைக்காடு, முல்லைப்பாடி.


முல்லைப்பாட்டு நூல் எழுந்தது போன்று முல்லைப் பெயர் கொண்ட புலவர் பட்டியலும் உண்டு;


அள்ளூர் நன்முல்லையார்

காவல் முல்லைப் பூதனார்


தவளம் – வெண்ணிறமுல்லை

தளவம் – செம்முல்லை


முல்லை - முனைவர் வி.சி. சசிவல்லி (தமிழ்நாட்டில் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி வி.சி.சசிவல்லி).


Tuesday, February 06, 2024

ஞானத்தேடல் - Ep 125 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - முல்லை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,


முல்லை


கல் இவர் = கல்லில் படரும்

கல்லில் படரும் முல்லை


முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே – தொல்காப்பியம்


முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும் – சிலப்பதிகாரம்


‘முல்லை பெரிதுகமழ் அலரி” (நற்:361:1)


'தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர,

நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு,

கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்

புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்

முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! 

கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்

வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,

அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,

அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ;

அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யா , 

நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,

நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என்

சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த

பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,

பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா! 

ஈங்கு எவன் அஞ்சுவது;

அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்

அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்

வரைப்பின் மணல் தாழப் பெய்து, திரைப்பில்

வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், 

அல்கலும் சூழ்ந்த வினை.' 

- கலித்தொகை - 115


எல்லா! இஃது ஒன்று கூறு குறும்பு இவர்

புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், 'எம்

கொல் ஏறு கோடல் குறை' என, கோவினத்தார்

பல் ஏறு பெய்தார் தொழூஉ;

தொழுவத்து, 

சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக்

கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய

ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என்

கூழையுள் வீழ்ந்தன்று மன்;

அதனை, கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது 

கெட்டனள், என்பவோ, யாய்;

இஃதொன்று கூறு;

கேட்டால், எவன் செய்ய வேண்டுமோ? மற்று, இகா!

அவன் கண்ணி அன்றோ, அது;

'பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான் 

கை புனை கண்ணி முடித்தாள், என்று, யாய் கேட்பின்,

செய்வது இலாகுமோ மற்று;

எல்லாத் தவறும் அறும்;

ஓஒ! அஃது அறுமாறு;

'ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின், 

நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின்,

நின்னை நோதக்கதோ இல்லைமன்' 'நின் நெஞ்சம்,

அன்னை நெஞ்சு, ஆகப் பெறின்'

அன்னையோ,

ஆயர் மகனையும் காதலை, கைம்மிக

ஞாயையும் அஞ்சுதிஆயின், அரிதுஅரோ 

நீ உற்ற நோய்க்கு மருந்து;

மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா!

வருந்துவேன் அல்லனோ, யான்;

வருந்தாதி;

மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன் 

கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, 'திண்ணிதா,

தெய்வ மால், காட்டிற்று இவட்கு' என, நின்னை அப்

பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு

ஐயன்மார் எல்லாம் ஒருங்கு. 


கலித்தொகை - 107


குமரனையும் குமரியையும் பிணைத்து மணமகன் மணமகளாக்கும் வாழ்வியற் சின்னமாகும் முல்லைப் பூ.


சீவக சிந்தாமணி

பவழம் கொள் கோடு நாட்டி பைம்பொனால் வேலி கோலி

தவழ் கதிர் முத்தம் பாய்த்தி தன் கையால் தீண்டி நல் நாள்

புகழ் கொடி நங்கை தன் பேர் பொறித்தது ஓர் கன்னி முல்லை

அகழ் கடல் தானை வேந்தே அணி எயிறு ஈன்றது அன்றோ


வம்பு அலர் கோதை சிந்த மயில் என ஒருத்தி ஓடி

கொம்பு அலர் நங்கை பூத்தாள் பொலிக என குனிந்த வில் கீழ்

அம்பு அலர் கண்ணி ஆர நிதி அறைந்து ஒகை போக்கி

கம்பலம் போர்த்த போலும் கடி மலர் காவு புக்காள்


கலித்தொகை 103


கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

புல்லாளே, ஆய மகள்


அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை, 

நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து

நைவாரா ஆய மகள் தோள்


கலித்தொகை 106


ஆங்கு, 

போர் ஏற்று அருந் தலை அஞ்சலும், ஆய்ச்சியர்   40

காரிகைத் தோள் காமுறுதலும், இவ் இரண்டும்

ஓராங்குச் சேறல் இலவோ? எம் கேளே!


'கொல் ஏறு கொண்டான், இவள் கேள்வன்' என்று, ஊரார்

சொல்லும் சொல் கேளா, அளை மாறி யாம் வரும்

செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளே


Sunday, January 28, 2024

ஞானத்தேடல் - Ep 124 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பாலை, முல்லை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  பாலை, முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,


பாலை


சுரமும் சுரம் சார்ந்த நிலமும் பாலை எனப்பெயர் பெற்றன.


முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும் - சிலப்பதிகாரம்


குடசப்பாலை

வெட்பாலை

தீம்பாலை (தித்திப்புப் பாலை தீம்பாலை)

மலைப்பாலை

குளப்பாலை

கொடிப்பாலை

கருடப்பாலை

உலக்கைப்பாலை

ஏழிலைப்பாலை (ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி மற்றும் ஏழிலம்பாலை)


"பாலை நின்ற பாலை நெடுவழி" - சிறுபாணாற்றுப்படை


பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் 

கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை 

- நற்றிணை


திருப்பாலைப்பந்தல் உலா என்னும் நூல் அரங்கேற்றப்பட்டது  ஆசிரியரின் காலிங்கராய எல்லப்ப நயினார்'


இலக்கியமும் கல்வெட்டுக்களும்

திரு. வை. சதாசிவ பண்டாரத்தார்


1. திருப்பாலைப்பந்தல் உலா

2. இறைசைப் புராணம் - திருமலை நயினார் சந்திரசேகரர்

3. ஓங்கு கோயிற் புராணம் - திருவம்பல முடையார் மறைஞானசம்பந்தர் 


திருப்பாலைப்பந்தல் - தென் ஆர்க்காட்டு மாவட்டம், திருக்கோவிலூர்த் தாலுகா. 


திருக்கழிப்பாலை கடலூர் மாவட்டம். 


திருப்பாலைவனம் - திருவள்ளூர் மாவட்டம் -  அமைந்துள்ள அருள்மிகு திருப்பாலீஸ்வரர் சுவாமி திருக்கோயிலாகும். 


திருப்பாலை - மதுரை 


ஏழிலைப் பாலை 


நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை – பரி 21/13


ஏழு சுரங்களை குரல்(சட்ஜம்), துத்தம்(ரிஷபம்), கைக்கிளை(காந்தாரம்) உழை(மத்யமம்), இளி(பஞ்சமம்), விளரி(தைவதம்), தாரம்(நிஷாதம்) என்றனர்.


குரலே துத்தம் கைக்கிளை உழையே

இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே - திவாகர நிகண்டு


வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு

குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்

ஆடும் என்றிவை ஏழிசை ஓசை 

- பிங்கல நிகண்டு


துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், 

உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்

சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,

தகுணிதம் துந்துபி தாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்

தமருகம், குடமுழா, மொந்தை வாசித்

தத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்ப னிடம்திரு ஆலங் காடே.

- காரைக்காலம்மையார் - மூத்த திருப்பதிகம்


ஏழ்பெரும் பாலைகள் -  செம்பாலை, படுமலைப்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, மேற்செம்பாலை


முல்லை - முல்லையாழ்  - செம்பாலை – அரிகாம்போதி

குறிஞ்சி - குறிஞ்சி யாழ் - படுமலைப் பாலை - நடபைரவி

மருதம் - மருதயாழ் - கொடிப்பாலை / கோடிப்பாலை – கரகரப்பிரியா

மேற்செம்பாலை - கல்யாணி

விளரிப்பாலை - நெய்தல் யாழ் – தோடி

செவ்வழிப்பாலை – இருமத்திமதோடி

அரும்பாலை - பாலை யாழ் – சங்கராபரணம்


செவ்வழி யாழ்ப் பாண்மகனே! சீர் ஆர் தேர் கையினால்

இவ் வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன்,-இவ் வழியே

ஆடினான், ஆய் வயல் ஊரன்; மற்று எங்கையர் தோள்

கூடினான், பின் பெரிது கூர்ந்து.

- கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது


விளரி யாழ்ப் பாண்மகனே! வேண்டா; அழையேல்;

முளரி மொழியாது, உளரிக் கிளரி, நீ,

பூங் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன்,

ஆங்கண் அறிய உரை.


பாலை யாழ்ப் பாண் மகனே! பண்டு நின் நாயகற்கு

மாலை யாழ் ஓதி வருடாயோ? காலை யாழ்

செய்யும் இடம் அறியாய்; சேர்ந்தாய்; நின் பொய்ம்மொழிக்கு

நையும் இடம் அறிந்து, நாடு.


ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறுதலைப் பெயர்க்கும் மறுஇன் பாலை

- பொருநராற்றுப்படை


முல்லை


இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ; 

நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,

பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;

ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

- புறநானூறு 242


கார் புறந்தந்த நீருடை வியனுலகம்

பல்ஆ புகுதரூஉம் புல்லென் மாலை

முல்லை! வாழியோ, முல்லை! – நீ நின்

சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை!

நகுவை போலக் காட்டல்

தகுமோ, மற்று – இது தமியோர் மாட்டே?

- குறுந்தொகை 162


முல்லைப் பிராட்டி! நீயுன் 

முறுவல்கள் கொண்டு, எம்மை

அல்லல் விளைவியே லாழிநங்

காய்! உன்ன டைக்கலம்,

கொல்லை யரக்கியை முக்கரிந்

திட்ட குமரனார்

சொல்லும் பொய்யானால், நானும்

பிறத்தமை பொய்யன்றே

Thursday, January 04, 2024

ஞானத்தேடல் - Ep 121 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தில்லை - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  தில்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்


தில்லை


தில்லை என்பதே ஒருவகை மலர். தில்லைமரம் மிகுயாக இருந்த ஊர் ஆதலால் இந்த ஊருக்கு இந்தப் பெயர் வழங்கலாயிற்று. தில்லை என்பது இக்காலச் சிதம்பரம். 


முற்றாத தில்லையும் வாசமு முள்ளு முனையு மெவர்

சற்றாகிலுஞ் செய்து வைத்த துண்டோ வன்புஞ்சர்க் குணமும்

பெற்றார் பிறவிக் குணங்கா ணதுகண்டு பேதையர்கள்

கற்றால் வராது கண்டாய் கச்சி மாநகர்க் காவலனே. 

- தனிப்பாடல் திரட்டு 


குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி

தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும் – நற்றிணை 195/2,3


தில்லை வேலி இவ்வூர் - ஐங்குறுநூறு 131


கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,

தில்லை அன்ன புல்லென் சடையோடு,

அள்இலைத் தாளி கொய்யு மோனே

இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.


புறநானூறு - 252. அவனே இவன்!


கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து தில்லை அன்ன புல்லென் சடையொடு அள்ளிலைத் தாளி கொய்யுமோனே - புறநானூறு 252


மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்

கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்

சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த

நீமலி கரகம் போல் பழம் தூங்கு முடத்தாழைப்

பூ மலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ! கேள்

- கலித்தொகை 133


நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம்

பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி

மேக சாலமலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப்

போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம்பணை கடந்து புகுந்தார். 1.5.93


வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்

கன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்

துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த

பன் மலர்ப் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான். 1.5.94


திருக்கோவையார்


திருக்கோவையார் தில்லையைப் போற்றும் முறையில் ஆக்கப்பட்டு அகத்துறை சார்ந்த நூலாக  அமைந்துள்ளது. இதனால் இது திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் அழைக்கப்படுகிறது.


இது குறித்து, ‘திருக்கோவையார் இயல்பு’ என்ற நூலின் முகவுரையில் அதன் ஆசிரியர் தை. சி. கனகசபாபதி முதலியார் பின்வருமாறு எழுதுவது சிந்தனைக்குரியது:

‘மணிவாசகர் பாடிய திருக்கோவையார் சங்கநூற்களுள் ஒன்று அன்று. எனினும், அவற்றோடு ஒன்றாக வைத்து எண்ணும் பெருமை இதற்கேயுண்டு. இந்நூலின் உயர்வை உணர்தற்குச் சங்கநூற் பயிற்சி பெரிதும் வேண்டும். செய்யுள் நூல்களில் பெரும் பயிற்சி உடையார்க்கே திருக்கோவைச் செய்யுட்களின் இனிய எளிய தண்ணிய நடையின் செம்மை நனி விளங்கும்’


திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்

குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ

மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந்

துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளர்கின்றதே’.


சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்

உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் டீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ

இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே’.


காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் 

ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்

ஏகத்தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில்

தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத் துன்பங்களே. 71


மழலை யின்னமுந் தெளிகிலா மைந்த கண் மணியொன் 

றுழல்க ருங்கொடி யிருந்திடக் கனியுதிர்ந் தாங்குன்

சுழல்கொள் விஞ்சையி னன்மையான் மன்னனைத் தொடுத்த

தழல வித்தன மென்றுநீ தருக்குறத் தகுமோ.

- திருவிளையாடற் புராணம்


ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின் 

காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்;

ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்;

சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே."