Sunday, December 10, 2023

ஞானத்தேடல் - Ep118 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கரந்தை, குளவி, கூதளம் - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  கரந்தை, குளவி, கூதளம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்


எண்ணும்‌ எழுத்தும்‌ எழுத்திற்‌ கனிந்த இயலிசையும்‌ 

பண்ணும்‌ பரதமும்‌ பாவகை யாவும்‌ படைத்தளித்தெம்‌ 

கண்ணும்‌ மனமும்‌ கருத்தும்‌ இனிக்கக்‌ கரந்தையினில்‌ 

நண்ணும்‌ மலரடி நாவார வாழ்த்துதும்‌ நற்றமிழே !

- கரந்தைக்‌ கோவை (தமிழ்‌ வாழ்த்து)


கரந்தைத் தமிழ்ச் சங்கம் 

தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியான கருந்தட்டைகுடியில் 1911ல் நிறுவப்பட்டது.

தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணீயம் சுந்தனாரின் நீராரும் கடலுடுத்த பாடலை பாட வேண்டும் என்ற கோரிக்கை 1913 ஆம் ஆண்டு  ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 1914 முதல் கரந்தை தமிழ் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிவந்தனர். அதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு அரசு அப்பாடலை தம்ழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.


வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்


ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்

சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்

தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்

அனைக்கு உரி மரபினது கரந்தை

- தொல்காப்பியம் பொருளதிகாரம் 6


நெற்பயிர் அறுவடைக்கு பிறகு வயல்களிலும் முளைத்து கிடக்கும். நல்ல மணம் கொண்ட சிறு செடியினம்.

காய்த்த கரந்தை மா கொடி விளை வயல் – பதி 40/5

கரந்தை அம் செறுவில் துணை துறந்து களவன் - ஐங் 26

கரந்தை அம் செறுவின் வெண்_குருகு ஓப்பும் - அகம் 226


நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை - புறநானூறு 261


இது கொடிப் பூ மான்மடிக் காம்பு ஆவூர் மூலங்கிழார்

நறும் பூங் கரந்தை” என்றமைந்த தொடர் இதன் மணத்தைச் சொல்லுகின்றது.  . 


அம்பு கொண்டு அறுத்த ஆர்நார் உரிவையின்

செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி

வரிவண்டு ஆர்ப்பச் சூட்டி


செம் பூ கரந்தை புனைந்த கண்ணி – அகம் 269/11


வாந்தி யரோசகத்தை மாற்றும் பசிகொடுக்கும் 

சாய்ந்த விந்து வைக்கட்டுந் தப்பாதே- ஏந்தழகைத்

தண்டா துறச்சோர்க்குஞ் சாந்த பரிமளத்தைத்

தண்டாச் சிவகரந்தை என்று அகத்தியர் இதன் சிறப்பை பாராட்டுகிறார்.


கொட்டைக் கரந்தைதனைக் கூசாம லுண்டவர்க்கு

வெட்டை தனியுமதி மேகம்போந்- திட்டச்

சொறிசிரங்கு வன்கரப்பான் றேற்றாது நாளும்

மறிமலமுந் தானிறங்கு மால்"


குளவி


நாறுஇதழ்க் குளவியொடு கூதளம் குழைய என்று புறப்பாடல் (380:7) சுட்டுகிறது.


கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக்

குளவி மேய்ந்த மந்தி துணையொடு

வரைமிசை உகளும் நாட! நீ வரின்,

கல் அகத்தது எம் ஊரே;

அம்பல் சேரி அலர் ஆங்கட்டே

ஐங்குறுநூறு 279


குல்லை,குளவி, கூதளம், குவளை,        

இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் 

என்ற பாடல் (நற்றிணை, 376:5-6) உணர்த்துகிறது. 


அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு

வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்

என்று திருமுருகாற்றுப்படை (வரிகள்: 191-192) சுட்டுகின்றது.


நீர்இழி மருங்கின் ஆர்இடத்து அமன்ற

குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி

அசையா நாற்றம் அசை வளி பகர

என்று அகம் (272:7- 9) பாடுகிறது.


எருதுப்போர்

இனத்தில் தீர்த்த துளங்குஇமில் நல்லேறு

மலைத்தலை வந்த மரைஆன் கதழ்விடை

மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக்

கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப

வள்இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய

நல்ஏறு பொரூஉம் கல்என் கம்பலை

என்று மலைபடுகடாம் (வரிகள் : 330-335) நயம்படக் காட்டுகிறது.


கூதளம்


கூதளி / வெண்டாளி / தாளிக்கொடி


கார் எதிர் தண் புனம் காணின் கை வளை

நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த

வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர்

ஆர் கழல்பு உகுவ போல

சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/4-8


ஆதாளியை ஒன்று அறியேனை அறத்

தீதாளியை ஆண்டது செப்புமதோ

கூதாள கிராத குலிக்கிறைவா

வேதாள கணம் புகழ் வேலவனே


வாழி! கரந்தைத்‌ தமிழ்ச்சங்கம்‌ வண்ணமுற 

வாழி! அதன்‌ வாய்மைச்‌ சிறப்புரைக்கும்‌ கோவையொடு 

வாழி! தமிழ்நாடு வான்புலவர்‌ வாழ்தமிழர்‌ 

வாழி! தமிழ்‌ பாடும்‌ வாய்‌.


No comments: