Saturday, October 14, 2023

ஞானத்தேடல் - Ep 108 - அனுபவ ஞானம் - 7 - (Gnanathedal)

 

அனுபவ ஞானம் 


மங்குல் அம்பதினாயிரம் யோசனை

  மயில்கண்டு நடமாடும்

தங்கும் ஆதவ னூறாயிரம் யோசனை

  தாமரை முகம் விள்ளும்

திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனையுறச்

  சிறந்திடும் அரக்காம்பல்

எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர்

  இதயம் விட்டு அகலாரே

தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது

பாம்புக்கு பால்வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா

வேம்புக்கு தேன்வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா

தாம்பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார்.

தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்தபேரை

மீளவே கொடுக்கினாலே வெய்துறக் கொட்டலேபோல்

ஏளனம் பேசித் தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும்

கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்றமாமே.

No comments: