Sunday, December 18, 2022

ஞானத்தேடல் - Ep 66 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 1 - காந்தள் - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 1 - காந்தள்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் காந்தள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Kanthal also known as Flame Lilly


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70


விரிமல ராவிரை வேரல் சூரல்

குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி

குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்

போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி

செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்

கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்

தில்லை பாலை கல்லிவர் முல்லை

குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்

வாழை வள்ளி நீணறு நெய்த

றாழை தளவ முட்டாட் டாமரை       80


ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி

சேடல் செம்மல் சிறுசெங் குரலி

கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை

காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்

பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க

மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை

யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை

பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி

வஞ்சி பித்திகம் சிந் துவாரம்

தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி       90


நந்தி நறவ நறும்புன் னாகம்

பாரம் பீரம் பைங்குருக் கத்தி

யாரங் காழ்வை கடியிரும் புன்னை

நரந்த நாக நள்ளிரு ணாறி

மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு

மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன்

மாலங் குடைய மலிவன மறுகி

வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப்

புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின்

வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக்


1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு


காந்தள் அரும்பகை என்று, கத வேழம் 

ஏந்தல் மருப்பிடைக் கை வைத்து, இனன் நோக்கி,

பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நன்னாடன்

காய்ந்தான்கொல், நம்கண் கலப்பு? 

- நூல்: கைந்நிலை (புலவர்:  புல்லங்காடனார்)


காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது

வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும்

தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட

கடனறி மாக்கள் போல இடன்விட்

டிதழ்தளை யவிழ்ந்த ஏகல் வெற்பன்

நன்னர் நெஞ்சத்தன் தோழி நின்னிலை

யான்றனக் குரைத்தனெ னாகத்

தானா ணினனிஃ தாகா வாறே. 

- நூல்: குறுந்தொகை (புலவர்:  கருவூர்க்கதப் பிள்ளை)


- கைபோல் பூத்த கமழ் குலைக்காந்தள்

- செழுங் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்


மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப் 

பங்கயம் என்றெண்ணிப் படிவண்டைச் செங்கையால் 

காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே 

வேர்த்தளைக் காணென்றான் வேந்து” 

- நூல்: நளவெண்பா (புலவர்:  புகழேந்திப் புலவர்)


சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங்காந்தள் 

பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் 

- நூல்: திருமுருகாற்றுப்படை (புலவர்: நக்கீரனார்)