Sunday, January 28, 2024

ஞானத்தேடல் - Ep 124 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பாலை, முல்லை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  பாலை, முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,


பாலை


சுரமும் சுரம் சார்ந்த நிலமும் பாலை எனப்பெயர் பெற்றன.


முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும் - சிலப்பதிகாரம்


குடசப்பாலை

வெட்பாலை

தீம்பாலை (தித்திப்புப் பாலை தீம்பாலை)

மலைப்பாலை

குளப்பாலை

கொடிப்பாலை

கருடப்பாலை

உலக்கைப்பாலை

ஏழிலைப்பாலை (ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி மற்றும் ஏழிலம்பாலை)


"பாலை நின்ற பாலை நெடுவழி" - சிறுபாணாற்றுப்படை


பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் 

கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை 

- நற்றிணை


திருப்பாலைப்பந்தல் உலா என்னும் நூல் அரங்கேற்றப்பட்டது  ஆசிரியரின் காலிங்கராய எல்லப்ப நயினார்'


இலக்கியமும் கல்வெட்டுக்களும்

திரு. வை. சதாசிவ பண்டாரத்தார்


1. திருப்பாலைப்பந்தல் உலா

2. இறைசைப் புராணம் - திருமலை நயினார் சந்திரசேகரர்

3. ஓங்கு கோயிற் புராணம் - திருவம்பல முடையார் மறைஞானசம்பந்தர் 


திருப்பாலைப்பந்தல் - தென் ஆர்க்காட்டு மாவட்டம், திருக்கோவிலூர்த் தாலுகா. 


திருக்கழிப்பாலை கடலூர் மாவட்டம். 


திருப்பாலைவனம் - திருவள்ளூர் மாவட்டம் -  அமைந்துள்ள அருள்மிகு திருப்பாலீஸ்வரர் சுவாமி திருக்கோயிலாகும். 


திருப்பாலை - மதுரை 


ஏழிலைப் பாலை 


நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை – பரி 21/13


ஏழு சுரங்களை குரல்(சட்ஜம்), துத்தம்(ரிஷபம்), கைக்கிளை(காந்தாரம்) உழை(மத்யமம்), இளி(பஞ்சமம்), விளரி(தைவதம்), தாரம்(நிஷாதம்) என்றனர்.


குரலே துத்தம் கைக்கிளை உழையே

இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே - திவாகர நிகண்டு


வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு

குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்

ஆடும் என்றிவை ஏழிசை ஓசை 

- பிங்கல நிகண்டு


துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், 

உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்

சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,

தகுணிதம் துந்துபி தாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்

தமருகம், குடமுழா, மொந்தை வாசித்

தத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்ப னிடம்திரு ஆலங் காடே.

- காரைக்காலம்மையார் - மூத்த திருப்பதிகம்


ஏழ்பெரும் பாலைகள் -  செம்பாலை, படுமலைப்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, மேற்செம்பாலை


முல்லை - முல்லையாழ்  - செம்பாலை – அரிகாம்போதி

குறிஞ்சி - குறிஞ்சி யாழ் - படுமலைப் பாலை - நடபைரவி

மருதம் - மருதயாழ் - கொடிப்பாலை / கோடிப்பாலை – கரகரப்பிரியா

மேற்செம்பாலை - கல்யாணி

விளரிப்பாலை - நெய்தல் யாழ் – தோடி

செவ்வழிப்பாலை – இருமத்திமதோடி

அரும்பாலை - பாலை யாழ் – சங்கராபரணம்


செவ்வழி யாழ்ப் பாண்மகனே! சீர் ஆர் தேர் கையினால்

இவ் வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன்,-இவ் வழியே

ஆடினான், ஆய் வயல் ஊரன்; மற்று எங்கையர் தோள்

கூடினான், பின் பெரிது கூர்ந்து.

- கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது


விளரி யாழ்ப் பாண்மகனே! வேண்டா; அழையேல்;

முளரி மொழியாது, உளரிக் கிளரி, நீ,

பூங் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன்,

ஆங்கண் அறிய உரை.


பாலை யாழ்ப் பாண் மகனே! பண்டு நின் நாயகற்கு

மாலை யாழ் ஓதி வருடாயோ? காலை யாழ்

செய்யும் இடம் அறியாய்; சேர்ந்தாய்; நின் பொய்ம்மொழிக்கு

நையும் இடம் அறிந்து, நாடு.


ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறுதலைப் பெயர்க்கும் மறுஇன் பாலை

- பொருநராற்றுப்படை


முல்லை


இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ; 

நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,

பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;

ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

- புறநானூறு 242


கார் புறந்தந்த நீருடை வியனுலகம்

பல்ஆ புகுதரூஉம் புல்லென் மாலை

முல்லை! வாழியோ, முல்லை! – நீ நின்

சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை!

நகுவை போலக் காட்டல்

தகுமோ, மற்று – இது தமியோர் மாட்டே?

- குறுந்தொகை 162


முல்லைப் பிராட்டி! நீயுன் 

முறுவல்கள் கொண்டு, எம்மை

அல்லல் விளைவியே லாழிநங்

காய்! உன்ன டைக்கலம்,

கொல்லை யரக்கியை முக்கரிந்

திட்ட குமரனார்

சொல்லும் பொய்யானால், நானும்

பிறத்தமை பொய்யன்றே

Tuesday, January 16, 2024

ஞானத்தேடல் - Ep 123 - எண்ணலங்காரம் - (Gnanathedal)

 

எண்ணலங்காரம்


ஆறுமாறு மாறுமாயொ

      ரைந்துமைந்து மைந்துமாய்,

ஏறுசீரி ரண்டுமூன்று

      மேழுமாறு மெட்டுமாய்,

வேறுவேறு ஞானமாகி

      மெய்யினொடு பொய்யுமாய்,

ஊறொடோ சை யாயவைந்து

      மாய ஆய மாயனே


முதலில் ஆறு தொழில்களைச் சொல்கிறார் - படிப்பது, கற்பது, படிக்க வைப்பது, கற்பிப்பது, கொடுப்பது, பெறுவது


இரண்டாவது ஆறாக, இந்தக் காரியங்கள் செய்வதற் கான ஆறு பருவ காலங்களைச் சொல்கிறார். அவை கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில், என்று ஆவணி முதல் இரண்டு இரண்டு மாதங்களாகக் கணக்கிடப்படும் பருவங்கள். அந்தந்தக் காலத்தில் அந்தந்தக் காரியங்கள் செய்யவேண்டும் என்கிற நியதியைக் குறிப்பிடுகிறார்.


மூன்றாவதாக ஆறு யாகங்களைக் குறிப்பிடுகிறார்: வேதம் ஓதல், ஓமம் வளர்த்தல், பலி கொடுத்தல், தர்ப்பணம் செய்தல், இரப்போர்க்களித்தல் போன்றவற்றை, யாகங்கள் செய்பவர்கள், அனுஷ்டிக்கத் தக்க ஆக்னேயம், அக்னீஷோமியம் போன்ற ஆறு காரியங்கள் உள்ளன அவைதான் ஆழ்வார் குறிப்பிடும் மூன்றாவது ஆறு.


இனி ஐந்துக்களைப் பார்க்கலாம்.


முதல் ஐந்து, ஐந்து யக்ஞங்களாகும். தேவர்களுக்கு, முன்னோர்களுக்கு, இயற்கைக்கு, மனிதர்களுக்கு, பிரம்மாவுக்கு என்று ஐந்து யக்ஞங்கள் சொல்கிறார்.


இரண்டாவது ஐந்து உண்ணும்போது செய்யப்படும் ஐந்து ப்ராண ஆஹூதிகளைச் சொல்கிறாராம். மூன்றா வது, ஐந்து வகை அக்கினி. இவைகளுக்கெல்லாம் உள்ளுறை வடிவமாக இருப்பவன் திருமால்தான்.


இவைகளையெல் லாம் கடைப்பிடிப்பதால் ஏற்படும் சிறப்புக்களான (ஏறு சீர்) அறிவும் வைராக்கியமும் ஆழ்வார் சொல்லும் இரண்டு.

இதனால் ஏற்படும் பயன்கள் மூன்று: செல்வம், கைவல்யம் என்னும் மோட்சம், பகவதப்ராப்தி என்னும் வைகுந்தம்.


ஆழ்வார் சொல்லும் ஏழு. இந்த உபாயங்களின் முதல் படியை அடைய வேண்டுமென்பார் முதலில் பெறவேண்டிய ஏழு சாதனங்களான (1) விவேகம், (2) விமோஹம் (3) அப்யாசம் (4) க்ரியா (5) கல்யாணம் (6) அனவசாதனம் (7) அனுத்தர்ஷம் என்றவற்றையும் கற்ப்பிப்பவன் நீயே.


இவ்வாறு உன்னை அடைபவர்களுக்கு குணாதிசயங்களாக (1) ஞாநம் , (2) பலம், (3) ஐஸ்வர்யம், (4) வீர்யம் (5)சக்தி, (6) தேஜஸ்


அவர் குறிப்பிடும் எட்டு பலன்கள். அவை பாபமற்ற தன்மை, கிழத்தனம் அற்ற தன்மை, மரணமற்ற தன்மை,சோகமற்றிருப்பது, பசியற்றிருப்பது/தாகமற்றிருப்பது, வீண் போகாத இஷ்டம், வைராக்கியம்


"மெய்யினோடு பொய்யுமாய்" என்ற சொற்றொடர் சிந்திக்கத்தக்கது ஆழ்வார் பாடல்களில் இவ்வகையில் எதிர்மறைகள் பல இடங்களில் வரும். "உளன் எனில் உளள் அவன் உருவம் இவ்வருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்" என்று நம்மாழ்வாகும், மெய்யாககே மெய்யனாகும் பொய்யர்க்கே பொய்யனாகும்"என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலையிலும், "மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கெல்லாம்" என்று திருவாய்மொழியிலும் கூறுவதன் உள்ளர்த்தம், மற்ற தெய்வங்களைத் தொழுதாலும் அவைகளினுள்ளும் விரவியிருப்பது, மேலும் அவன் இன்மையும் அவனே என்கிறது புரடசிகரமான கருத்து.


ஆழ்வார் இறுதி அடியில் கூறும் ஐந்து, நாம் முதல் பாட்டில் விரிவாக உரைத்த ஐந்து குணங்களான ஒலி, தொடுகை,உருவம் சாரம், மணம்


திருமழிசை ஆழ்வாரின் ஒரு பாடலில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றன



ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே



ஒரு கோட்டன் இருசெவியன் மும்மதத்தன்

    நால்வாய்ஐங் கரத்தன் ஆறு

தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான்

    தரும் ஒருவா ரணத்தின் தாள்கள்

உருகோட்டன் பொடும்வணங்கி யோவாதே

    இரவுபகல் உணர்வோர் சிந்தைத்

திருகுஒட்டும் அயன் திருமால் செல்வமும்ஒன்

    றோ, என்னச் செய்யும் தேவே!

- சிவஞானசித்தியார்


இன்புற வழிகள் ஏழு


ஒன்றில் இரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால்

வென்று களங்கொண்ட வெல்வேந்தே – சென்றுலாம்

ஆழ்கடல்சூழ் வையத்துள் ஐந்துவென்(று) ஆறகற்றி

ஏழ்கடிந்(து) இன்புற்(று) இரு.

- புறப்பொருள் வெண்பாமாலை


காளமேகப் புலவர் பாடல்


ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறு ஏழெட்டு

ஒன்பது பத்துப் பதினொன்று பன்னி

ரண்டுபதின் மூன்றுபதி நான்குபதி னைந்துபதி

னாறுபதி னேழுபதி னெட்டு.


ஒன்று கொலாம் என்று தொடங்கும் அப்பர் பிரானின் பதிகம் (4.18), விடம் தீர்த்த பதிகம் என்று அழைக்கப்படும் பதிகம், பாம்பு கடித்து இறந்த அப்பூதி அடிகளின் மூத்த மகனை உயிருடன் எழச் செய்த பதிகம், மிகவும் பிரபலமானது. அந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் ஒன்று, இரண்டு என்று பத்து வரை உள்ள எண்களை உணர்த்தும் சொற்களை முதற்சொல்லாக நான்கு அடிகளும் உள்ளவாறு அமைக்கப் பட்டுள்ளன. அதே வகையில் அமைந்த பதிகம் தான், ஒன்று வெண்பிறை என்று தொடங்கும் இந்த திருக்குறுந்தொகை (5.89) பதிகமும்.


திருவெழு கூற்றிருக்கை

ஓருருவாயினை என்று தொடங்கும் திருஞானசம்பந்தரின் திருவெழு கூற்றிருக்கை பதிகம் (1.128) தேரின் அமைப்பினை உணர்த்தும் எண்ணலங்கார பதிகமாக உள்ளது.

ஞானத்தேடல் - Ep 122 - கலித்தொகை கூறும் வாழ்வியல் - (Gnanathedal)


 கலித்தொகை கூறும் வாழ்வியல்


மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்

கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல்,

சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த

நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்

பூ மலர்ந்தவை போல, புள் அல்கும் துறைவ! கேள்:   5


ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்  10

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்


ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி   15

நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க!

தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்;

நின்தலை வருந்தியாள் துயரம்

சென்றனை களைமோ; பூண்க, நின் தேரே!


தோழி கூற்று

கலித்தொகை – நெய்தல் கலி

பாடியவர் – நல்லந்துவனார்

திணை - நெய்தல்


கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு


'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;


வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்று எல்லாம்

குறி எதிர்ப்பை நீரது உடைத்து.


பயன் நோக்காது ஆற்றவும் பாத்தறிவு ஒன்றின்றி

இசைநோக்கி ஈகின்றார் ஈகை, - வயமாப்போல்

ஆலித்துப் பாயும் அலைகடல் தண் சேர்ப்ப!

கூலிக்குச் செய்து உண்ணுமாறு. --- பழமொழி நானூறு.


 ஈகைக்கு உரியவர் ஒன்பதின்மர் என்றும், ஈகைக்கு உரியர் அல்லாதார் ஒன்பதின்மர் என்பதும் "காசிகாண்டம்" கூறுகின்றது. அது வருமாறு....


"மாண்பு உடையாளர், கேண்மையர், தத்தம்

வழிமுறை ஒழுக்கினில் அமர்ந்தோர்,

சேண்படு நிரப்பின் எய்தினோர், புரப்போர்

தீர்ந்தவர், தந்தை, தாய், குரவர்,

காண்தகும் உதவி புரிந்துளோர் இனையோர்

ஒன்பதின்மரும் உளம் களிப்ப,

வேண்டுறு நிதியம் அளிப்பின், மற்று ஒன்றே

கோடியாம் என மறை விளம்பும்".


"முகன் எதிர் ஒன்றும், பிரியின் மற்றுஒன்றும்

மொழிபவர், விழைவுறு தூதர்,

அகன்ற கேள்வி இலார், அருமருத்துவர்கள்,

அரும்பொருள் கவருநர், தூர்த்தர்,

புகல்அரும் தீமை புரிபவர், மல்லர்,

செருக்கினார், புன்தொழில் தீயோர்,

இகழ்தரும் இனையோர் ஒன்பது பெயர்க்கும்

ஈந்திடல் பழுது என இசைப்பார்".


'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;


“நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு


ஆற்றாரும் ஆற்றி அடுப, இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்


'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;


பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.


'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை;


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.


'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்


தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.


அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.


நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் - புறநானூறு 3


நிலம்புடை பெயர்வது ஆயினும் கூறிய சொற்புடை பெயர்தலோ இலரே - நற்றிணை289


நிலம்திறம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொல்நீ பொய்ப்பு அறியலையே - பதிற்றுப்பத்து 63


'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை;


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்


நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப


'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;


கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர்


'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்


"அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்த றலை"


நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை

போற்றி யொழுகப் படும்.


இறப்பவே தீய செயினும், தன் நாட்டார்

பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ?-நிறக் கோங்கு

உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட!-

ஒருவர் பொறை இருவர் நட்பு.


அன்னம் அனையாய் குயிலுக்கு ஆனஅழகு இன்னிசையே,

கன்னல் மொழியார்க்கு கற்பாமே, - மன்னுகலை

கற்றோர்க்கு அழகு கருணையே, ஆசைமயக்கு

அற்றோர்க்கு அழகு பொறையாம். --- நீதிவெண்பா.


மண் திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீமுரணிய நீரும் என்றாங்கு,

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,

வலியும் தெறலும் அளியும் உடையோய்.. --- புறநானூறு.


Thursday, January 04, 2024

ஞானத்தேடல் - Ep 121 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தில்லை - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  தில்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்


தில்லை


தில்லை என்பதே ஒருவகை மலர். தில்லைமரம் மிகுயாக இருந்த ஊர் ஆதலால் இந்த ஊருக்கு இந்தப் பெயர் வழங்கலாயிற்று. தில்லை என்பது இக்காலச் சிதம்பரம். 


முற்றாத தில்லையும் வாசமு முள்ளு முனையு மெவர்

சற்றாகிலுஞ் செய்து வைத்த துண்டோ வன்புஞ்சர்க் குணமும்

பெற்றார் பிறவிக் குணங்கா ணதுகண்டு பேதையர்கள்

கற்றால் வராது கண்டாய் கச்சி மாநகர்க் காவலனே. 

- தனிப்பாடல் திரட்டு 


குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி

தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும் – நற்றிணை 195/2,3


தில்லை வேலி இவ்வூர் - ஐங்குறுநூறு 131


கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,

தில்லை அன்ன புல்லென் சடையோடு,

அள்இலைத் தாளி கொய்யு மோனே

இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.


புறநானூறு - 252. அவனே இவன்!


கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து தில்லை அன்ன புல்லென் சடையொடு அள்ளிலைத் தாளி கொய்யுமோனே - புறநானூறு 252


மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்

கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்

சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த

நீமலி கரகம் போல் பழம் தூங்கு முடத்தாழைப்

பூ மலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ! கேள்

- கலித்தொகை 133


நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம்

பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி

மேக சாலமலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப்

போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம்பணை கடந்து புகுந்தார். 1.5.93


வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்

கன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்

துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த

பன் மலர்ப் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான். 1.5.94


திருக்கோவையார்


திருக்கோவையார் தில்லையைப் போற்றும் முறையில் ஆக்கப்பட்டு அகத்துறை சார்ந்த நூலாக  அமைந்துள்ளது. இதனால் இது திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் அழைக்கப்படுகிறது.


இது குறித்து, ‘திருக்கோவையார் இயல்பு’ என்ற நூலின் முகவுரையில் அதன் ஆசிரியர் தை. சி. கனகசபாபதி முதலியார் பின்வருமாறு எழுதுவது சிந்தனைக்குரியது:

‘மணிவாசகர் பாடிய திருக்கோவையார் சங்கநூற்களுள் ஒன்று அன்று. எனினும், அவற்றோடு ஒன்றாக வைத்து எண்ணும் பெருமை இதற்கேயுண்டு. இந்நூலின் உயர்வை உணர்தற்குச் சங்கநூற் பயிற்சி பெரிதும் வேண்டும். செய்யுள் நூல்களில் பெரும் பயிற்சி உடையார்க்கே திருக்கோவைச் செய்யுட்களின் இனிய எளிய தண்ணிய நடையின் செம்மை நனி விளங்கும்’


திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்

குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ

மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந்

துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளர்கின்றதே’.


சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்

உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் டீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ

இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே’.


காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் 

ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்

ஏகத்தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில்

தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத் துன்பங்களே. 71


மழலை யின்னமுந் தெளிகிலா மைந்த கண் மணியொன் 

றுழல்க ருங்கொடி யிருந்திடக் கனியுதிர்ந் தாங்குன்

சுழல்கொள் விஞ்சையி னன்மையான் மன்னனைத் தொடுத்த

தழல வித்தன மென்றுநீ தருக்குறத் தகுமோ.

- திருவிளையாடற் புராணம்


ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின் 

காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்;

ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்;

சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே."