Saturday, October 14, 2023

ஞானத்தேடல் - Ep109 - நோய் தீர்க்கும் பாடல்கள் - 2 - (Gnanathedal)

 

நோய் தீர்க்கும் பாடல்கள் - 2


ஒருவர் நோய்வாய்ப்  படும்போது இறை நம்பிக்கை தோன்றும். அப்படி அருணகிரிநாதர் பாடிய திருத்தணிகை  திருப்புகழ் . இதை பாராயணம் செய்யும் பக்தர்கள் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை அதைப்பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Songs that cure illness - 1


When one gets sick, they turn to God for getting their illness cured. Likewise, Arunagirinathar sang Thiruppugazh praising Lord Murugan of Thiruthanigai malai. It is believed that those who sing this get their illness cured. Let's explore about  it in this episode


References

திருப்புகழ் 243


தனதன தான தனதன தான

     தனதன தான ...... தனதான


......... பாடல் .........


இருமலு ரோக முயலகன் வாத

     மெரிகுண நாசி ...... விடமேநீ


ரிழிவுவி டாத தலைவலி சோகை

     யெழுகள மாலை ...... யிவையோடே


பெருவயி றீளை யெரிகுலை சூலை

     பெருவலி வேறு ...... முளநோய்கள்


பிறவிகள் தோறு மெனைநலி யாத

     படியுன தாள்கள் ...... அருள்வாயே


வருமொரு கோடி யசுரர்ப தாதி

     மடியஅ நேக ...... இசைபாடி


வருமொரு கால வயிரவ ராட

     வடிசுடர் வேலை ...... விடுவோனே


தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி

     தருதிரு மாதின் ...... மணவாளா


சலமிடை பூவி னடுவினில் வீறு

     தணிமலை மேவு ...... பெருமாளே.

No comments: