Sunday, November 27, 2022

ஞானத்தேடல் - Ep 65 - தமிழும் அறிவியலும் - 1 (ஆண்டாள் மழை வானியல்) - (Gnanathedal)


தமிழும் அறிவியலும் - 1


தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Tamil and Science - 1


Let's see about the details found in Tamil literature about science in this episode


References


ஆண்டாள் பாசுரம்


ஆழி மழைக்கண்ணா ஒன்றும்நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் 

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து 

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் 

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


ஞானத்தேடல் - Ep 64 - சித்திரக்கவி - சதுர்/அஷ்ட நாகபந்தம் - (Gnanathedal)


 சித்திரக்கவி - சதுர்/அஷ்ட நாகபந்தம்


- சதுர் நாகபந்தம் 


தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதாலெங்ங 

னறித லுலகியலை – முன்னுவந்துன்னை யறிக முதல்.


நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையாதீங்குநீ

நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன வுடன்பெறு வாயுய் தலை


ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்தீங்கு

தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்தீங்கினைத் தீப்படுந் தீ


உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்றபொன்னைப்பெண்

மண்ணாசை போக்கலைக் காணாயேலென்னை பயக்குமோ சொல்


மேலா பகவா குகனே வெகுகன 

வேலா வவாவை வெலுகவே - கோலா 

கலாப சுகனேகா வாயே கதிசேர் 

கலாப மயில்வா கனா!


- அஷ்ட நாகபந்தம் 


சீதரா பாற்கரா சீல நிறையாளா 

சேது பதியான சீரைய- போதப் 

பகவனக லாதமா பாங்கினக நேய 

சகல பயனுந்தா தா.


Saturday, November 12, 2022

ஞானத்தேடல் - Ep 63 - சம்பந்தர் பணம் பெற்ற பதிகம் - (Gnanathedal)

 

சம்பந்தர் பணம் பெற்ற பதிகம் திருவாவடுதுறையில் பிள்ளையார் சிலகாலம் தங்கியிருக்கும் போது, அவரது தந்தையார் யாகம் நடத்த பொருள் வேண்டி விண்ணப்பித்தார். தந்தையின் வேள்விக்காகப் பொருள் வேண்டிப் பாசுரம் பாடிய மகனின் பக்தியை மெச்சி இறைவனும் உலவாக்கிழி (குறைவற்ற பொற்கிழி) ஒன்றை அருளினார். அந்தப் பொற்கிழியை நன்றியுடன் பெற்றுக் கொண்ட சிவபாத இருதயர் தமது யாகங்களை இனிதே நடத்தினார். இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. நனவினும் கனவினும் நம்பாஉன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரிஎழ முனிந்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. பேரிடர் பெருகிஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி யிராவணனை ஆரிடர் படவரை அடர்த்தவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனும் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப் புத்தரும் சமணரும் புறன்உரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே. அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த இலைநுனை வேற்படை யெம்இறையை நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார் வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.

ஞானத்தேடல் - Ep 62 - சித்திரக்கவி - துவி/இரட்டை நாகபந்தம் - (Gnanathedal)

 

சித்திரக்கவி - துவி/இரட்டை நாகபந்தம் அருளின் றிருவுருவே யம்பலதா யும்பர் தெருளின் மருவாசீர்ச் சீரே பொருவிலா வொன்றே யுமையா ளுடனே யுருத்தரு குன்றே தெருள வருள் அறத்தினது அழகிய மேனியாய்! திருச்சிற்றம்பலத்தினை யுடையாய்! தேவர்கள் அறிவிற்கும் எட்டாதாய்! அழகிய புகழை யுடையாய்! குற்றமில்லாத ஏகரூபத்தை யுடையால்! உமையோடு பொருந்தின மலை போல்வாய்! யாங்கள் தெளிய அறிவை அருள் வாயாக. மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு பெருகொளியான் றேயபெருஞ் சோதித் திருநிலா வானஞ் சுருங்கு மிகுசுடரே சித்த மயரு மளவை யொழி அடைந்தவருள்ளத்தே கெடாத விளக்கமாயுள்ளாய்! நஞ்சின்கணுண்டாகிய பெருகிய நிற நிறைந்து பொருந்தின திருமிடற்றையுடைய பெரிய சோதியாயுள்ளாய்! அழகிய மதியை யுடைய ஆகாயமானது சிறுகப் பெருகிய வொளியே திருமேனியா யுள்ளாய். எனதுள்ளம் நினதடியை மறக்கு மெல்லையை யொழிப் பாயாக. மொத்தம் - 118 சுருங்கியது - 96 தலை - 2 வால் - 9 வயிறு - 10 - 5 x 2 மூலைகளில் - 20 - 5 x 4 சந்தி - 22 மீதம் - 33 கலிவிருத்தம் சேயா சேயாதே தேயா சேயாசே மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே வஞ்சித்துறை சேயா சேயாதே தேயா சேயாசே மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே `சேயாசேயா` - சேயவனே சேயவனே `தே` - கடவுளே. `தேய் ஆசு` - (எனது) சிறுமையைக் கெடு, `ஆசு ஏமா` - சிறுமைக்கு நமளாயுள்ளானே `யாமாயா` - (சத்திரூபமாகச் சுருங்கியிருந்து) வியக்திருப மாக விரியும் மாய மாயைக் கதிபதியே, `வா`- வந்தருள்வாயாக. `வாயா மாயாமா` - (உயிர்களோடத்து லிதமாயிருந்துமவைகட்குக்) கிட்டாத மகா சிவ ராத்திரியத்தனே. `வாயா` - உண்மைப்பாடுடையானே, `மாவாயா` - சிறந்த வாக்குடையானே, `மாயா` - மாய வித்தைகளுடையானே `சேமா`- சேமமுடையானே. `சேய்` - இளநலமுடையானே. `ஓயாநேயா` - (அன்பர் மாட்டு) ஒழியா நேயமுடையானே. `ஓயாய் ஏது` - (என் கண்ணதாய) ஏதெனுங் குற்றத்தை யொழித்தருள், `ஆள்` -ஆண்டருள்.