Sunday, March 31, 2024

ஞானத்தேடல் - Ep 134 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - நெய்தல் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  நெய்தல்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

......

காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,


நெய்தல்


வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79 (52)

காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் – குறி 84 (66)


நெய்தல்மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர். குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது. 


1. நீள்நறு நெய்தல் – நீண்ட வாசனையுடைய நெய்தற்பூ. இதன் காம்பு நீண்டது. இது சுனைகளிலும், குளங்களிலும் பூக்கும் (வரி 79). 


2. மணிக்குலைக் கள் கமழ் நெய்தல் – இது குறுகிய காம்பினை உடையது. இது வயல்களில் பூக்கும் (வரி 84).


கவிஞர் இளஞ்சேரன் (இலக்கியம் ஒரு பூக்காடு)


ஆம்பல் – செவ்வாம்பல் / செவ்வல்லி / அரக்காம்பல் ; வெள்ளாம்பல் / அல்லி

குவளை – செங்குவளை ; கருங்குவளை

நெய்தல் – நீலநிறம் / வெளிர் நீலம்

காவி – நீலநிறம் 


நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்

மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய

செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/13-15


மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் - ஐங்குறுநூறு

மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி – பட்டினப்பாலை


வைகறை மலரும் நெய்தல் போல – ஐங் 188/3

நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக – நற் 187/1


“முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக்

கள்கமழ்நெய்தல் ஊதி, எல்படக்

கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்

அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்கும்”

- திருமுருகாற்றுப்படை


பாசடை கலித்த கணை கால் நெய்தல்

விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும் – அகம் 70


அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்

நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401


சிறு பாசடைய நெய்தல் – நற் 27/11,12


பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி

உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது

நெய்தல் பாசடை புரையும் அம் செவி

பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென

அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – நற் 47/1-6


ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்

ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,

புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்

பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,

படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!         

இன்னாது அம்ம, இவ் உலகம்;

இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.

- புறநானூறு 194


ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் 

விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா

பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்

கருமங்கள் வேறு படும்

- நாலடியார் (கூடா நட்பு)


அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவார் உறவு 

- மூதுரை 17


முருகன் தீம்புனல் அலைவாய் – - தொல். களவு.-சூ. 23 ந: பையுண்மாலை.


“வரைவயிறு கிழித்த நிழல்திகழ் நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்' என்பது ஒரு பழம்பாட்டு.


கழனி உழவர் கலி சிறந்து எடுத்த

கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை

அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்

திரு மணி விளக்கின் அலைவாய்ச்   

- அகநானூறு 266


பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.

பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.


நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட

அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;      

அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,

'பிறர்' எனக் குணம் கொல்லாது,

ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும், மூன்றும், 

உடையை ஆகி, இல்லோர் கையற,

நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்

வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்

நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,

கடு வளி தொகுப்ப ஈண்டிய    

வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!

புறநானூறு 55


தாழ்நீர் = ஆழமான நீர். 18. புணரி = அலைகடல்

Friday, March 22, 2024

ஞானத்தேடல் - Ep 133 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வள்ளி - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  வள்ளி 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

..............


வள்ளி


வள்ளி நுண்ணிடை - அகநானூறு 286

வள்ளிமருங்குல் - புறநானூறு 316


ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதல்அரிந் தற்று


பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,

பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்!

வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத

கானம் கடந்து சென்றார்?

ஐந்திணை ஐம்பது

 


உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே

இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே

மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே

நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து

திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே

- புறநானூறு 109



வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை,

வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க;

மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ,

காஞ்சி நீழல், தமர் வளம் பாடி,

ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த

வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்

தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர!

- அகநானூறு 286

 


பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக்

கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா,

ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்

பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி!

- கலித்தொகை 41


கருளுடை வள்ளி இடை தொடுபு இழைத்த உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடக் கமழ் தார் - பரிபாடல் 21



அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி

நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே! - பரிபாடல் 14


எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களின் முதிர்வாய் வள்ளியங்காடு - முல்லைப்பாட்டு 101,

பாசிலை வாடா வள்ளியங்காடு இறந்தோரே – குறுந்தொகை 216

மலர்ந்த வள்ளியங்கானம் கிழவோன் - ஐங்குறுநூறு 250


மாவள்ளிக் கிழங்கு / மாவலிக் கிழங்கு / மாகாளிக்கிழங்கு

நாட்டில் விளைந்தால் நன்னாரி, மலையில் விளைந்தால் மாகாளி

செவ்வள்ளி அல்லது இராசவள்ளி

மரவள்ளி / ஆள்வள்ளி

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

வெற்றிலை வள்ளிக் கிழங்கு

ஆனைவள்ளி / நீர்வள்ளிக் கிழங்கு



கொடிநிலை, கந்தழி, வள்ளி, என்ற

வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே


 

கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து

காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர்


காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து

காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.



வள்ளிமலை – 11 திருப்புகழ்


வள்ளியூர் – 1 திருப்புகழ்


வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ

வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே


வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு

வள்ளிமண வாளப் ...... பெருமாளே.


----


கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப


கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச


அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல்


அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே


சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே


வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே


வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.


- திருப்புகழ்


'வள்ளிச் சன்மார்க்கம்' என்பது யாரொருவர் தன்னை இழந்து ('யான் எனது'

என்பன அற்று) தலைவனை நாடுகிறாரோ அவரை இறைவன் தானே நாடிவந்து


அருள் புரிவார் என்பதாகும். இந்த 'வள்ளிச் சன்மார்க்க' நெறியை முருகன்


சிவபெருமானுக்கு உபதேசித்தார்.

 


யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.


Thursday, March 14, 2024

ஞானத்தேடல் - Ep 132 - தவறை உணர்தல் - (Gnanathedal)


 தவறை உணர்தல்


வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்

    பெருந்துயரிடும்பையில் பிறந்து,

கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு

     அவர்த்தரும் கலவியேகருதி,

ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்

    உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்

    நாராயணா வென்னும் நாமம்.


தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,

பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,

கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா.,

அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால்,

என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்,

குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா.,

அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,

நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்,

தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்

ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


தந்தைதாய் மக்களே சுற்றமென்

   றுற்றுவர் பற்றி நின்ற

பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ

   பழியெனக் கருதி னாயேல்

அந்தமா யாதியாய் ஆதிக்கும்

   ஆதியாய் ஆய னாய

மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா

   வல்லையாய் மருவு நெஞ்சே


சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்

நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது

தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்

பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே

- திருமந்திரம்


Thursday, March 07, 2024

ஞானத்தேடல் - Ep 131 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாழை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  வாழை 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

..............


வாழை


இருகயல் உண்கண் இளையவளை வேந்தன்

தருகென்றால் தன்னையரும் நேரார் - செருவறைந்து

பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால்

வாழைக்காய் உப்புறைத்தல் இல்.

- பழமொழி நானூறு 338


சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய

அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து,

மயங்கு துயர் உற்ற மையல் வேழம்

உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,

ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்

மா மலைநாடன் கேண்மை

காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.

- குறுந்தொகை 308


அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்

கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்

கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,

கடுங் கண் கேழல் உழுத பூழி,

நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்  

உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை

முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்

மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,

மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி

வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,          

சாந்த விறகின் உவித்த புன்கம்

கூதளம் கவினிய குளவி முன்றில்,

செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்

ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,

நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,            

வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!

கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,

பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர், நாளும்  

ஈயா மன்னர் நாண,

வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.

- புறநானூறு 168


மகளிர் கூந்தலின் மயிர்முடிப்பு வாழைப்பூவினது தோற்றம்போலப் பொலிந்து காணப்படுவதை,

வாழைப் பூ எனப் பொலிந்த ஓதி - சிறுபாணாற்றுப்படை


வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல்

மகளிர் ஓதி அன்ன பூவொடு துயல்வரும் - நற்றிணை 225


பரிசிலர்க்கு வரையாது வழங்கிய வெளிமான் இறந்துபட்டான். அவன் பிரிவினை ஆற்றாது அழும் மகளிர்தம் வளைகள் வாழைப்பூப்போலச் சிதறிவிழுந்ததை,

வாழைப் பூவின் வளை முறி சிதற - புறநானூறு 237



புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை

முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்

குலைவாய் தோயும் கொழு மடல் வாழை

அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்

செம் முக மந்தி ஆரும் நாட!

- நற்றிணை 355


படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்

கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை

ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்

மெல் விரல் மோசை போல, காந்தள்

வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப

- நற்றிணை 188


குவி முகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த                                     

ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு – அகம். 134


சிலம்பில் போகிய செம் முக வாழை

அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,

பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்

நல் வரை நாடனொடு அருவி ஆடியும்

அகநானூறு 302


தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம்,    

வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்,    

கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் 

குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம்,   

திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும்,  360

தீம் பல் தாரம் முனையின், சேம்பின்  

முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர். பகற் பெயல்

- பெரும்பாணாற்றுப்படை