Friday, November 26, 2021

ஞானத்தேடல் - Ep 21 - உடல்நலம் உயிர்நலம் (Gnanathedal)


 உடல்நலம் உயிர்நலம் 

உடல்நலத்தின் முக்கியத்துவம் பற்றி நம் இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்று  இப்பதிவில் பார்ப்போம்...  

Wealth called health 

Let's explore the what Tamil literature talks about health in this episode...

References

திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram

திருக்குறள் - Thirukkural

சித்தர் பாடல்கள் - Siddhar Songs


காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா

காயமே இது மெய்யடா
அதில் கண்ணும் கருத்தும் வையடா

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே


Wednesday, November 17, 2021

ஞானத்தேடல் - Episode 20 - சாபத்தின் வலிமை (Gnanathedal)


சாபத்தின் வலிமை 

பிறர் சாபம் எவ்வளவு வலிமையானது. அதனை இப்பதிவில் பார்ப்போம்...  

The Power of Curse

Let's explore the power of curse in this episode...

References

திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram

திருக்குறள் - Thirukkural


ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம்
பாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில்  மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு

Wednesday, November 10, 2021

ஞானத்தேடல் - Episode 19 - தொல்காப்பியத்தில் ஆறு அறிவு (Gnanathedal)


 தொல்காப்பியத்தில் ஆறு அறிவு

மனிதர்களுக்கு ஆறு அறிவு என்பதை தொல்காப்பியர் தனது படைப்பான தொல்காப்பியத்தில் வகுத்து குறிப்பிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு அறிவு உயிரினத்திற்கும் உதாரணங்களோடு  குறிப்பிட்டுள்ளார் என்பது ஆச்சரியமூட்டுவது. அதனை இப்பதிவில் பார்ப்போம்...  

The Six Senses in Tholkappiyam

Humans have six senses and this was described by Tholkaappiyar in detail in his work Tholkaappiyam. He not only describes those senses but also provides examples of species with those number of senses, which is fascinating piece of information. Let's explore that in this episode...

References

தொல்காப்பியம் -  Tholkaappiyam

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே

நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே

மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

Monday, November 08, 2021

ஞானத்தேடல் - Episode 18 - தங்கப்புதையல் ரகசியம் (Gnanathedal)


தங்கப்புதையல் ரகசியம்

யமாஷீட்டாவின் தங்கப்புதையல் பற்றிய செய்தி  உலகில் மிக பிரபலமாக உலா வந்தது. அதை இன்றும் தேடுவோர் உண்டு. அதுபோல தமிழ் நாட்டில் ஒரு புத்தல் ரகசியம் உண்டு, அதற்கு பின்னால் ஒரு கதையும் உண்டு. அது என்ன? வாருங்கள் அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..

A puzzle about a gold treasure

Yamashita's gold was popular in the news for a very long time. Still people are searching for it. Like Yamashita's gold there is an unsolved riddle that mentions about a gold treasure in Tamil Nadu. There is a story behind that treasure. Let's explore that in this episode...