Saturday, November 25, 2023

ஞானத்தேடல் - Ep 116 - நடராஜப் பத்து (Gnanathedal)


 நடராஜப் பத்து - சிறுமணவூர் முனிசாமி முதலியார்


நடராஜப் பத்து.


மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ

மறைநான்கின் அடிமுடியும் நீ

மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ

மண்டலமிரண்டேழு நீ

பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ

பிறவும் நீ யொருவ நீயே

பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ

பெற்றதாய் தந்தை நீயே

பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ

போதிக்க வந்த குரு நீ

புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ

யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ

எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே

என் குறைகள் யார்க்குரைப்பேன்?

ஈசனே சிவகாமி நேசனே!

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (1)


மானாட மழுவாட மதியாட புனலாட

மங்கை சிவகாமி யாட

மாலாட நூலாட மறையாட திறையாட

மறைதந்த பிரமனாட

கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட

குஞ்சர முகத்தனாட

குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட

குழந்தை முருகேசனாட

ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி

அட்ட பாலகருமாட

நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட

நாட்டியப் பெண்களாட

வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை

விரைந்தோடி ஆடி வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (2)


கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு

கனவென்ற வாழ்வை நம்பி

காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே

கட்டுண்டு நித்த நித்தம்

உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி

ஓயாமலிரவு பகலும்

உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது

ஒருபயனுமடைந்திலேனை

தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்

தாவரம் பின்னலிட்டு

தாயென்று சேயென்று நீயென்று நானென்று

தமியேனை இவ்வண்ணமாய்

இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது

இருப்பதுனக்கழகாகுமா?

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (3)


பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம்

தம்பனம் வசியமல்ல

பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச

மதுவல்ல சாலமல்ல

அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல

ஆகாய குளிகையல்ல

அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல

அறியமோகனமுமல்ல

கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி

கொங்கணர் புலிப்பாணியும்

கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம்

கூறிடும் வயித்தியமுமல்ல

என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க

ஏது புகல வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (4)


நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்

நின்செவியில் மந்தமுண்டோ!

நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின்

நோக்காத தந்தையுண்டோ!

சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்

தளராத நெஞ்சமுண்டோ!

தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ

தந்தை நீ மலடுதானோ!

விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே

வினையொன்றும் அறிகிலேனே

வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே

வேடிக்கை இதுவல்லவோ

இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு

இனியுன்னை விடுவதில்லை

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (5)


வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்

வாஞ்சையில்லாத போதிலும்

வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்

வஞ்சமே செய்தபோதிலும்

மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும்

மூர்க்கனே முகடாகினும்

மோசமே செய்யினும் தேசமே தவறினும்

முழு காமியே ஆயினும்

பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ

பார்த்தவர்கள் சொல்லுவார்கள்

பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ

பாலன் எனைக் காக்கொணாதோ

எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ

என் குறைகள் தீர்த்தல் பெரிதோ

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (6)


அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ

அறிவிலாததற்கழுவனோ

அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ

ஆசை மூன்றுக்கழுவனோ

முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ

என் மூட உறவுக்கழுவனோ

முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ

முத்தி வருமென்றுணர்வனோ

தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ

தவமென்ன எனுறழுவனோ

தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ

தரித்திர தசைக்கழுவனோ

இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ

எல்லாமுரைக்க வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (7)


காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ

கன்னியர்கள் பழிகொண்டனோ

கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ

கிளைவழியில் முள்ளிட்டனோ

தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ

தந்தபொருளிலை யென்றனோ

தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ

தவசிகளை ஏசினேனோ

வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ

வாணவரைப் பழித்திட்டனோ

வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ

வந்தபின் என் செய்தனோ

ஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ

எல்லாமும் பொறுத்தருளுவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (8)


தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன

தன்பிறவியுறவு கோடி

தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன

தாரணியையாண்டுமென்ன

சேயர்கள் இருந்தென்ன குருவாய இருந்தென்ன

சீடர்கள் இருந்துமென்ன

சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்

செய்தென்ன நதிகளெல்லாம்

ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை

ஒன்றை கண்டு தடுக்க

உதவுமோ இதுவெல்லாம் சந்தையுறவு என்று தான்

உந்தனிருபாதம் பிடித்தேன்

யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்

கண்பார்வையது போதுமே

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (9)


இன்னமும் சொல்லவோ உன்மனம் கல்லோ

இரும்போ பெரும்பாறையோ

இருசெவியும் மந்தமோ கேளாத அந்தமோ

இது உனக்கழகு தானோ

என்னென்ன மோகமோ இதுஎன்ன கோபமோ

இதுவோ உன்செய்கை தானோ

இருபிள்ளைதாபமோ யார்மீது கோபமோ

ஆனாலும் நான் விடுவனோ

உன்னை விட்டெங்கெங்கு சென்றாலும் விழலாவனே நான்

உனையடுத்துங் கெடுவனோ

ஓஹோவிது உன்குற்றம் என்குற்றம் என்றும் இல்லை

உற்றுபார் மாபெற்ற ஐயா

என் குற்றமாயினும் உன் குற்றமாயினும்

இனியருள் அளிக்க வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (10)


சனி, ரகு, கேது, புதன், சுக்ரன், செவ்வாய்,

குரு, சந்திரன் சூர்யன் இவரை,

சற்று எனகுள்ளக்கி, ராசி பனிரண்டையும்,

சமமாய் நிறுத்தியுடனே,

பணியோத நக்ஷத்ரங்கள் இருபத்தி எழும்

பக்குவ படுத்தி பின்னால்,

பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்

வெட்டி பலரையும் அதட்டி என் முன்,

கனி போலவே பேசி கேடு நினைவு

நினைக்கின்ற கசடர்களையும் கசக்கி,

கத நின் தொண்டராம் தொண்டர்க்கு

தொண்டர்கள் தொழுத நாகி,

இனியவள மருவு சிறு வனவை முனி

சாமி எனை ஆள்வதினி யுன் கடன் காண். (11)

ஞானத்தேடல் - Ep115 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருந்தி, அதிரல், சண்பகம் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  ஆவிரை, சூரல், பூளை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்


செருந்தி


ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,

பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,

மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,

ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,

ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு,

தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப்,

போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற,

– கலித்தொகை


எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ - ஐங்குறுநூறு 


இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம்

கரும்பின் அலமரும் கழனி ஊரன்

பொருந்தும் மலரன்ன என் கண் அழப்

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே - ஐங்குறுநூறு 18



அதிரல்


அதிரல் பரந்த அந்தண் பாதிரி - அகம் 99


உலகம் படைத்த காலை தலைவ!

மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே

முதிரா வேனில் எதிரிய அதிரல்,

பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,

நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய  5

செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,

அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால்

தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்

அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,

பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே.

- நற்றிணை 337


மொட்டின் வடிவம் கூர்மையாகவும் நீட்சியுடையதாகவும் இருக்கும்

இதனைப் `புனலிக்கொடி’ என்று நச்சினாரிக்கினியரும், காட்டுமல்லிகை என்று அரும்பதவுரையாசிரியரும், மோசிமல்லிகை, என்று அடியார்க்கு நல்லாரும் குறிக்கின்றனர்.

புனலிக்கொடி, புனலிப் பூ, புனலி , புனலி (புனல் + இ), மென்கொடி’, ‘பைங்கொடி, மோசி மல்லிகையும்.


முதிரா வேனில் எதிரிய அதிரல் – நற் 337/3


குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் – புறம் 269/1

“பார்வல் வெருகின் கூர்எயிற் றன்ன

 வரிமென் முகைய நுண்கொடி அதிரல்;”⁠-அகநா. 391 : 1-2


.... கோங்கின்

 எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல்

 பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கி

 காண் யானை கவளங் கொள்ளும்

 அஞ்சுவரு நெறியிடைத் தமியர் செல்மார்

 கெஞ்சுண் மொழிப மன்னே-தோழி”⁠-அகநா. 157 


அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் - பரி 20/81


சண்பகம்


செம்போத்து, செம்பகம் அல்லது செங்காகம், குக்கில். குயில் 


பைந் தினை உணங்கல் செம் பூழ் கவரும்

வன்புல நாடன் தரீஇய, வலன் ஏர்பு

அம் கண் இரு விசும்பு அதிர, ஏறொடு

பெயல் தொடங்கின்றே வானம்;

காண்குவம்; வம்மோ, பூங் கணோயே!

ஐங்குறுநூறு 469


கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,

முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி     

பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப,

கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்

சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,

அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,

அகநானூறு 63


தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம்

குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து,

குக்கில் புறத்த; சிரல் வாய - செங் கண் மால்

தப்பியார் அட்ட களத்து - களவழி நாற்பது 5


பெருந்தண் சண்பகம். 

 

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு - திரு 27

பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர் - கலி 150/21

அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த

பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர்

பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் – கலி 150/20-22


தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை 

ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற

சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே

காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.


‘களிப்புறு நறுமணமரம்’


வண்டுணா செண்பகம் ;


வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம் - பரிபாடல் 


பன்னிய பாரம் பார்ம கட் கொழியப்

பாரத மாபெரும் போரில்,

மன்னர்கள் மடிய மணி நெடுந் திண்டேர்

மைத்துனர்க் குய்த்தமா மாயன்,

துன்னுமா தவியும் சுர புனைப் பொழிலும்

சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்,

தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும்

திருக்கண்ணங் குடியுள்நின் றானே.

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி - பாசுரம் 1756


கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்

களித்திசை பாடும் குயிலே”

என்று ஆண்டாள் (நாச்சியார் திருமொழி).

Tuesday, November 14, 2023

ஞானத்தேடல் - Ep114 - கம்பரின் சமயோசிதம் - (Gnanathedal)


 கம்பரின் சமயோசிதம்


கரைக்கு வடக்கிருக்கும் காளிகாள் அம்மைக்கு

அரைத்து வழிசாந்தைத் தொட்டப்பேய் உரைத்தும்

மறைக்க வறியாத வன்பேயைக்

குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு.


இட்டடி நோவ எடுத்தடிகொப்பளிக்க

வட்டில் சுமந்து மருங்கசையக்-கொட்டிக்

கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்

வழங்கோசை வையம் பெறும்.


உருகி உடல்உருகி உள்ளீரல் பற்றி

எரிவ தவியாதென் செய்வேன்- வரியரவ

நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்

நெஞ்சிலே யிட்ட நெருப்பு.

ஞானத்தேடல் - Ep113 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - போங்கம், திலகம், பாதிரி - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  போங்கம், திலகம், பாதிரி


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,


போங்கம்

நிவந்து சேர் போங்கி - பரிபாடல் திரட்டு


திலகம்


மஞ்சாடி மரம் / திலகமரம் 


நிறுத்தல் அளவை - ‘மஞ்சாடி’.  இது மஞ்சாடி மரத்தின் விதை. இரண்டு குன்றி மணி எடை கொண்டது.


நாகம் திலகம் நறும் காழ் ஆரம் - மலை 520


‘மரவமும், நாகமும், திலகமும், மருதமும்’ என்று கூறப்படுகிறது. 


திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - திரு 24

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - நற் 62


நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே

கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண் - பரி 11/99


பாதிரி


“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”   

- நாலடியார் (139)


சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்

சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல

குலாமாலை வேல் கண்ணாய் கூறு உவமை நாடில்

பலா, மாவைப் பாதிரியைப் பார்

- ஔவையார்


“கோசிக ஆடை பூத்தன பாதிரி”  (சீவக சிந்தாமணி, 1650)       


அத்த பாதிரி துய் தலை புது வீ - அகம் 191

கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ - அகம் 261


ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய

துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி

வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி,

புது மலர் தெருவுதொறு நுவலும் 

நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே!

(நற்றிணை 118)


“முதிரா வேனில்எதிரிய அதிரல்

பராஅரைப் பாதிரி குறுமயிர் மாமலர்” (நற்றிணை, 337:3-4)            


“வேனிற் பாதிரி கூன்மலர்ரன்ன

மயிர் ஏர்பு ஒழுகிய அம்கலுழ் மாமை”  (குறுந்தொகை, 147:1-2)              


……………………………….. வேனில்

பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி

வள் இதழ் மா மலர் வயிற்று_இடை வகுத்ததன்

உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை – பெரும் 4-6

பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய 


பாதிரி


பாதிரிமரவேர் 

பாதிரியின் வேர்க்குணந்தான் பார்க்கில்மது மேகம்போம் 

ஒதுகரப் பான்உழலை யோடிவிடும் - மாதேகேள் 

கண்ணெரிவு காதெரிவு கையெரிவு காலெரிவும் 

நிண்ணயமாய்ப் போகு நிசம் 


பாதிரிப்பூ 

பித்த சுரந்தணியும் பெண்வசியம் உண்டாகும் 

முற்றிய தோர் வெட்டை முடியுங்காண் - மெத்தவுமே 

மாதுரியம் நிங்கா வசன மடவனமே 

பாதிரியின் பூவையுண்டு பார் 


பாடலிபுத்திரம் / திருப்பாதிரிப்புலியூர் 


நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ 

ஒன்று தெளிய நசையினம் மொழிமோ

வெண்கோட் டியானை சோணை படியும்

பொன்மலி பாடலி பெறீஇயர்

யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. 

குறுந்தொகை (படுமரத்து மோசிகீரனார்)


பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

சீர் மிகு பாடலிக் குழீஇ கங்கை

நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ


அகநானூறு 265 (மாமூலனார்)


நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்     

தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித்

- அகநானூறு 251 (மாமூலனார்)


பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி 

மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு

வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்

கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார் 


இன்ன தன்மையில் இவர்சிவ 

    நெறியினை யெய்தி

மன்னு பேரருள் பெற்றிடர்

   நீங்கிய வண்ணம்

பன்னு தொன்மையிற் பாடலி

   புத்திர நகரில்

புன்மை யேபுரி அமணர்தாம்

    கேட்டது பொறாராய்


கெடிலக்கரை நாகரிகம்‌ - பேராசிரியர்‌ புலவர்‌ சுந்தர சண்முகனார்‌ 


பாதிரிப்பட்டி (கரூர் மாவட்டம்)


மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு

கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி

நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்

பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் - பெரியாழ்வார் திருமொழி (பூச் சூட்டல்)


அதிரல் பரந்த அந்தண் பாதிரி - அகம் 99

ஞானத்தேடல் - Ep112 - சங்ககால பறவை மனிதன் ஆய்எயினன் - (Gnanathedal)

 

சங்ககால பறவை மனிதன் ஆய்எயினன்


Sálim Moizuddin Abdul Ali (12 November 1896 – 20 June 1987) was an Indian ornithologist and naturalist. Sometimes referred to as the "Birdman of India", Salim Ali was the first Indian to conduct systematic bird surveys across India and wrote several bird books that popularized ornithology in India. Along with Sidney Dillon Ripley he wrote the landmark ten volume Handbook of the Birds of India and Pakistan


வரலாறு எழுதிய முதல் தமிழன் பரணர்.


சங்கத் தமிழ் இலக்கியத்தில் கபிலரும் பரணரும் இரட்டைப் புலவர்கள் போலக் கருதப்படுகிறார்கள்.


பரணர் கூறும் எல்லா செய்திகளும் நற் செய்திகள் என்று கூறமுடியாது, ஆனால் உண்மைச் செய்திகள் என்பதில் ஐயமில்லை. பொய் அடிமை இல்லாத புலவர் வரிசையில் முன்னிலையில் நிற்பவர்.


அன்றும் பாடுநர்க்கு அரியை; இன்றும்

பரணன் பாடினன் மற்கொல், மற்றுநீ

முரண்மிகு கோவலூர் நூறிநின்

அரண்அடு திகிரி ஏந்திய தோளே 

- புறநானூறு - 99


புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்

வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து

ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,

பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய,

- அகநானூறு 142


கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்

நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென,

காணிய செல்லாக் கூகை நாணி,

கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை 10

- அகநானூறு 148


பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது


அரசன் ஆய்எயினன் சிறந்த குதிரைவீரன். தேர்வீரன் ஞிமிலியைத் தாக்கினான். போர்க்களத்திலையே எயினன் மாண்டுபோனான்.


எயினன் பறவைகளைப் பாதுகாத்து வந்தவன்.


அவன் மாண்டுகிடப்பதைப் பிணம் தின்னும் கூகை கண்ணால்கூடக் காண விரும்பவில்லை. எனவே இனி எல்லாப் பகலிலும் வெளியில் வருவதில்லை என்று முடிவு எடுத்துக்கொண்டது.


பார்வைக் கூர்மையான கூகையின் கண்கள் பகலில் கூசும். இரவில் நன்றாகத் தெரியும். அதனால் அது பகலில் வெளிவருவதில்லை. இதனைப் புலவர் இவ்வாறு கூறுகிறார். இதனைத் தற்குறிப்பேற்ற அணி என்பர்


தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.


பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்

இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று

தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்

(தண்டியலங்காரம் 56)


ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை

அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ,

முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,

ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று

ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு

வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு

விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,

பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்

காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,

எக்கர் இட்ட குப்பை வெண் மணல்

வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்

ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,

நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,

ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய

பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்

கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்

மகர நெற்றி வான் தோய் புரிசைச்

சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்

புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்

- அகநானூறு 181



யாம இரவின் நெடுங் கடை நின்று,

தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்

நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு

அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்

வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,

அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,

இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு

நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,

ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, ''புள் ஒருங்கு

அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று

ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,

நிழல் செய்து உழறல் காணேன், யான்''

- அகநானூறு 208


நான்கு பெரிய போர்களைப் பாடலில் வருணிக்கிறார்: வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கூடற் பறந்தலை ,பாழிப் பறந்தலை ஆகிய போர்க் கள நிகழ்ச்சிகளை விரித்துரைக்கிறார்.


ஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் தின்றதற்காக ஒரு பெண்ணுக்கு, நன்னன் என்பவன் மரண தண்டனை விதித்தது


ஆதிமந்தி—ஆட்டநத்தி


அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட் காதல்கதைகளைத் தெரிந்தோருக்கு ஆதிமந்தி-ஆட்டநத்தி காதல் கதை தெரியாது. 


கடையெழு வள்ளல்களில் ஒருவன். மயிலுக்குப் பட்டுப் போர்வை அளித்த சிறப்பால் பாவலர் பாடும் புகழை உடையவன்.


ஆவியர் குடிக்கு மன்னன். ‘வையாவிக்கோப் பெரும்பேகன்’ என்ற பெரும் பெயர் பெற்றவன். அத்தகையவன் ஒழுக்கத்துக்கும், பண்பாட்டுக்கும் முரணான செயலில் இறங்கியிருந்தான்.


“முரணில் பொதியின் முதற் புத்தேள் வாழி! பரண கபிலரும் வாழி ! – நக்கீரர்.


என்று அகத்தியரோடு அவரும் போற்றாப்படுகிறார். தெய்வப் புலவன் பரணன் வாழ்க !

ஞானத்தேடல் - Ep 111 - உலகநீதி (Gnanathedal)


 உலக நீதி - ஆசிரியர்: உலகநாதர்


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்

வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே. #1


நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்

நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்

அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்

மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #2


மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்

மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்

தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்

தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்

சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்

சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்

வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #3


குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்

கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்

கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்

கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்

கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்

மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #4


வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்

மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்

வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்

தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்

தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #5


வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்

மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்

வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்

சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்

திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே. #6


கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்

கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்

பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்

பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்

இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்

எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்

குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்

குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே. #7


சேராத இடம் தனிலே சேர வேண்டாம்

செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்

ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்

உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்

பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்

வாராரும் குறவருடை வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #8


மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்

மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்

கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்

காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்

புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்

புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #9


மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்

திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்

தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்

குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்

குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே. #10


அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்

அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்

தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி

சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி

வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி

மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி

இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை

ஏதெது செய்வானோ ஏமன்றானே. #11


கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்

கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்

தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்

துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்

வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்

மாறான குறவருடை வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #12


ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி

அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி

ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்

உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி

காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்

கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு

போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்

பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே.