Tuesday, November 14, 2023

ஞானத்தேடல் - Ep113 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - போங்கம், திலகம், பாதிரி - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  போங்கம், திலகம், பாதிரி


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,


போங்கம்

நிவந்து சேர் போங்கி - பரிபாடல் திரட்டு


திலகம்


மஞ்சாடி மரம் / திலகமரம் 


நிறுத்தல் அளவை - ‘மஞ்சாடி’.  இது மஞ்சாடி மரத்தின் விதை. இரண்டு குன்றி மணி எடை கொண்டது.


நாகம் திலகம் நறும் காழ் ஆரம் - மலை 520


‘மரவமும், நாகமும், திலகமும், மருதமும்’ என்று கூறப்படுகிறது. 


திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - திரு 24

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - நற் 62


நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே

கொற்றவை கோலம் கொண்டு, ஓர் பெண் - பரி 11/99


பாதிரி


“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு”   

- நாலடியார் (139)


சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்

சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல

குலாமாலை வேல் கண்ணாய் கூறு உவமை நாடில்

பலா, மாவைப் பாதிரியைப் பார்

- ஔவையார்


“கோசிக ஆடை பூத்தன பாதிரி”  (சீவக சிந்தாமணி, 1650)       


அத்த பாதிரி துய் தலை புது வீ - அகம் 191

கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ - அகம் 261


ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய

துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி

வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி,

புது மலர் தெருவுதொறு நுவலும் 

நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே!

(நற்றிணை 118)


“முதிரா வேனில்எதிரிய அதிரல்

பராஅரைப் பாதிரி குறுமயிர் மாமலர்” (நற்றிணை, 337:3-4)            


“வேனிற் பாதிரி கூன்மலர்ரன்ன

மயிர் ஏர்பு ஒழுகிய அம்கலுழ் மாமை”  (குறுந்தொகை, 147:1-2)              


……………………………….. வேனில்

பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி

வள் இதழ் மா மலர் வயிற்று_இடை வகுத்ததன்

உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை – பெரும் 4-6

பசிய இலைகளை உதிர்த்த பெருத்த அடிமரத்தையுடைய 


பாதிரி


பாதிரிமரவேர் 

பாதிரியின் வேர்க்குணந்தான் பார்க்கில்மது மேகம்போம் 

ஒதுகரப் பான்உழலை யோடிவிடும் - மாதேகேள் 

கண்ணெரிவு காதெரிவு கையெரிவு காலெரிவும் 

நிண்ணயமாய்ப் போகு நிசம் 


பாதிரிப்பூ 

பித்த சுரந்தணியும் பெண்வசியம் உண்டாகும் 

முற்றிய தோர் வெட்டை முடியுங்காண் - மெத்தவுமே 

மாதுரியம் நிங்கா வசன மடவனமே 

பாதிரியின் பூவையுண்டு பார் 


பாடலிபுத்திரம் / திருப்பாதிரிப்புலியூர் 


நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ 

ஒன்று தெளிய நசையினம் மொழிமோ

வெண்கோட் டியானை சோணை படியும்

பொன்மலி பாடலி பெறீஇயர்

யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. 

குறுந்தொகை (படுமரத்து மோசிகீரனார்)


பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்

சீர் மிகு பாடலிக் குழீஇ கங்கை

நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ


அகநானூறு 265 (மாமூலனார்)


நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்     

தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித்

- அகநானூறு 251 (மாமூலனார்)


பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி 

மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு

வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்

கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார் 


இன்ன தன்மையில் இவர்சிவ 

    நெறியினை யெய்தி

மன்னு பேரருள் பெற்றிடர்

   நீங்கிய வண்ணம்

பன்னு தொன்மையிற் பாடலி

   புத்திர நகரில்

புன்மை யேபுரி அமணர்தாம்

    கேட்டது பொறாராய்


கெடிலக்கரை நாகரிகம்‌ - பேராசிரியர்‌ புலவர்‌ சுந்தர சண்முகனார்‌ 


பாதிரிப்பட்டி (கரூர் மாவட்டம்)


மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம் இடம் புக்கு

கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகில் அவை கீறி

நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேம்கடத்து எந்தாய்

பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய் - பெரியாழ்வார் திருமொழி (பூச் சூட்டல்)


அதிரல் பரந்த அந்தண் பாதிரி - அகம் 99

No comments: