Wednesday, August 16, 2023

ஞானத்தேடல் - Ep99 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  குரவம், கோங்கம், இலவம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


‌. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,


குரவம்

முருகனுக்கு உகந்த மரம்.

இது குரா, குரவு, குரவம் என்றும் சங்கநூல்களில் அழைக்கப்படுகின்றது. குராமரத்தின் பெயரால் ‘குராப்பள்ளி’ என்றொரு ஊரும் உண்டு (திருவிடைக்கழி)

இது குருந்த மரம் என்றும் கூறப்படும். இதன் நீழலில் இறைவன் குரு வடிவாக அமர்ந்திருந்து தமக்குக் காட்சி கொடுத்தருளினான் என்பர் மாணிக்கவாசகர்.


சோதியே சுடரே சூழொளி விளக்கே

சுரிகுழற் பணைமுலை மடந்தை

பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்

பங்கயத் தயனுமா லறியா

நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்

நிறைமலர்க் குருந்தமே வியசீர்

ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்றரு ளாயே

திருவாசகம்-அருட்பத்து


பழநி தனில் போய் உற்பவ வினைவிள, கள்சேர் வெட்சி,

குரவு பயில் நல்தாள் பற்றுவது ...... ஒருநாளே?


சிறக்கு மாதவ முனிவரர் மகபதி

யிருக்கு வேதனு மிமையவர் பரவிய

திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய ...... பெருமாளே.

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்


“இணைய இவை முன்றும்‌ ஒரு முக்கூட்டு மலர்களாகின்றன (பாலை). இவை போன்று முக்கூட்டான மலர்கள்‌ புன்னையும்‌ தாழையும்‌ ஞாழலும்‌ (நெய்தல்)


34 கோங்கம்

71 இலவம்


குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயில் - ஐங்குறுநூறு 369)

புதுமலர்க் கோங்கம் பொன்எனத் தாது ஊழ்ப்ப - கலித்தொகை, 33:12)"


“எரி பூ இலவத்து ஊழ்கழி பன் மலர்” – ஐங் 368/1 

“எரி உரு உறழ இலவம் மலர” – கலித்தொகை 33/10

இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொருநராற்றுப்படை 27


“முன்பனிக் கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே” (நற்றிணை, 224 : 2-3)

“குரவு மலர்ந்து, அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்” (அகநானூறு, 97 : 16-17)


பாம்பின் பல் போன்று சிறியதாகவும் கூர்மையாகவும் இதன் அரும்புகள் இருக்கும். அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்– அகம் 237/3.


வேனில் கோங்கின் பூம்பொகுட்டு அன்ன குடந்தையம் செவிய கோட்டு எலி


வெள்ளி நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து ஓங்கு சினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப – அகம் 317/8-11


சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர் பவளச் செப்பில் பொன் சொரிந்து ஆங்கு - அகநானூறு 25-10


இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்,

சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர் 10

பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன


“குரவம்‌ பாவை' எனப்‌ பெயர்‌ பெற்றது. பாவை மலர்‌.

‘நறுங் பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை’ என்று ஐங்குறுநூறு (344 : 2-3).


முதிர்கோங்கின் முகையென பெருத்தநின் இளமுலை - கலித்தொகை

முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின் - குறுந்தொகை


தான் தாயா கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப - திணை150:65/1

தான் தாயாக் கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப

ஈன்றாய் நீ பாவை இரும் குரவே ஈன்றாள்

மொழி காட்டாய்ஆயினும் முள் எயிற்றாள் சென்ற

வழி காட்டாய் ஈது என்று வந்து

கோங்கந்தான் தாயாகத் தாழ்ந்து முலை கொடுத்து வளர்ப்ப நீ பாவையினை யீன்ற இத்துணையே யாதலான், இருங்குரவே! யானீன்றாள் நினக்குச் சொல்லிய சொல்லை யெனக்குச் சொல்லா யாயினும் முள்ளெயிற்றாள் போயின வழியையாயினும் சொல்லிக்காட்டாய் வந்து இதுஎன்று.

கோங்கு அரும்பு அன்ன முலையாய் பொருள் வயின்

பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும்

பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் - பரிபாடல்

முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூ - ஐங்குறுநூறு 320


இலை இல மலர்ந்த முகை இல் இலவம்

இலை இல மலர்ந்த இலவமொடு - அகநானூறு


இலையி லஞ்சினை யினவண் டார்ப்ப

முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்

தலையலர்


கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி - தேவா-சம்:318

கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே

முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம் - தேவா-சம்:2781/2


அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க

அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா


அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த

அழக

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்


அரிய தமிழ் தானளித்த மயில்வீரா ... 


ஐங்குறுநூறு - 37. முன்னிலைப் பத்து

No comments: