Thursday, August 31, 2023

ஞானத்தேடல் - Ep104 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஆவிரை, சூரல், பூளை - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  ஆவிரை, சூரல், பூளை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,


சூரல்


வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின்

சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று,

ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப்       

புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய்

இரும் பிடி இரியும் சோலைப்

பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே - அகநானூறு 228


கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த

வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த- அகநானூறு 357



குரு மயிர்க்கடுவன்

சூரல்அம் சிறுகோல் கொண்டு, வியல் அறை

மாரி மொக்குள் புடைக்கும்”

என்று ஐங்குறுநூறு (275 : 1-3) பாடுகிறது.


சூரல்–பிரம்பு 

சூரையாவது பிரம்பு என்றும் உரை காண்பர்.


தங்கம் எனவே சடத்திற்குக் காந்திதரும்

மங்காத நீரை வறட்சிகளை-அங்கத்தாம்

மாவைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும்

பூவைச்சேர் ஆவாரம் பூ

-அகத்தியர் குணவாகடம்


சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ

ரெல்லா மொழிக்கு மெருவகற்று – மெல்லவச

மாவாரைப் பம்பரம் போல் லாட்டுத் தொழிலணங்கே

யாவாரை மூலியது.

- தேரையர் குண பாடம்


ஆவிரைக் கொன்றை நல்ல 

அழகிய , பூகம் , மத்தம் 

மேவிய மருதின் தோலும் 

விரைந்துடன் ஒக்கக் கூட்டிப் 

பூவினில் சிறந்த மாதே 

புதியதோர் தேனி லுண்ண 

காவிரி நீரும் வற்றிக் 

கடல்களும் , சுவறு , மன்றே . 

- மேகவாகடத்திரட்டு


சிறுபீளை: 


நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை 

பொரடரி ரக்த கணம் போக்குங்காண் வாரிறுக்கும் 

பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை 

யாமிது கற்பேதி யறி"


சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கை 

விக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவே 

கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு

காட்டிற் கழன்றோடுங்காண்"


ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ


ஆவிரை

ஆவாரம்பூ 


பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த

பல்நூல் மாலை பனைபடு கலிமா”

- குறுந்தொகைப் பாடலால் (173)


பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற - கலி 138/18



சிறுபூளை


கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர

 

பூளை அன்ன பொங்குமயிர்ப் பிள்ளை

- அகப்பாடல்கள் (217, 297)  கூறுகின்றன.


நெடுங்குரல் பூளைப் பூவின்அன்ன, குறுந்தாள் வரகின் குறள்அவிழ்ச் சொன்றி 

- பெரும்பாணாற்றுப்படை


செந்நாய் எடுத்தலின், வளிமுனைப் பூளையின் 

ஒய்யென்று அலறிய,கெடுமான் இனநிரை

- அகப்பாடல் (199) சுட்டுகிறது. 


பூளை நீடிய வெருவரு பறந்தலை”⁠-புறநா. 23 : 20 


அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச் 

சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை

பூளை நீடிய வெருவரு பறந்தலை 20

வேளை வெண்பூக் கறிக்கும்

ஆளி லத்த மாகிய காடே.


No comments: