Sunday, May 14, 2023

ஞானத்தேடல் - Ep88 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு

. . . .. . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்


எறுழம்


பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்

பிரியாய் ஆயினும் நன்றே விரியிணர்க்

கால் எறுழ் ஒள்வி தாஅய

முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே.

- ஐங்குறுநூறு (308)


தெறுழ்வீ


கார்பெயல் தலைஇய காண்பின் காலைக்

களிற்று முகவரியின் தெறுழ்வீ பூப்ப

- புறநா 119


வருமழைக்கு எதிரிய மணிநிற இரும்புதல்

நறைநிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ

தாஅம், தேரலர் கொல்லோ

- நற்றிணை 302 (மதுரை மருதன் இளநாகனார்)


கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந்

தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன

சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று

கூர்ந்த பசலை யவட்கு

- கார் நாற்பது 25 (மதுரைக் கண்ணங்கூத்தனார்)

இம்மலர்கள் வரகரிசியைப் பொரித்த பொரி போன்றவை


அரும்பவிழ்ந், தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன" (கார்நாற்பது, 25)


சுள்ளி


சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை

அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி

இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை

உதணால் கடிந்தான் உளன்.

- திணைமாலை நூற்றைம்பது

சுள்ளி – மராமரப் பூ; ‘சுள்ளி’ என்ற சொல் தாவரங்களைச் சுட்டும் சொல்லாக சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. ‘சுள்ளி’ என்ற சொல்லுக்கு நிகண்டுகள் அனிச்சம், நறவம், மராஅம், நாகம், ஞாழல், ஆச்சா போன்ற பல தாவரங்களைச் சுட்டுகின்றன. இச் சொல்லின் பொருள் மென்மை, கூர்மை, ஈரமற்று காய்ந்தது ஆகியவையாகும், ‘சுள்ளிவேலி’பற்றி இலக்கியமும், கல்வெட்டுகளும் கூறுகின்றன.


“வெண்பூஞ் சுள்ளி”, சுள்ளி வெண் போது சுரும்புணவிரித்து

பெருங்கதை

சுனைய நீலமுஞ் சுள்ளியுஞ் சூழ்மலர்

நனைய நாகமுங் கோங்கமு நாறிணர்ச்

சினைய சண்பகம் வேங்கையோ டேற்றுபு

முனைவன் மேற்றுதி முற்றெடுத் தோதினான்.

‌- சீவக சிந்தாமணி


கூவிரம்


கூவிரம் என்றொரு பூ வந்துள்ளது. இதற்குக் கூவிரப் பூ” என்று நச்சர் பொருள் எழுதியுள்ளார். கூவிளம் போன்று கூ' என்னும் அடைமாழி பெற்றது இது. இலக்கியப் பாடல்களில் வேறெங்கும் இப்பெயர் இல்லை. 'வீரை என்றொரு பூ உண்டு. அஃதொரு பாலை நிலத்து மரப் பூ அதன் இனத்தைச் சேர்ந்த ஒரு மரத்தின் காய் வாள் போன்று பட்டையாக நீண்டது. அதனால் அது "வாள்வீரம்’ எனப்பட்டது. அவரை வகையில் ஒரு கொடி வாள் போன்று


‌வரையன புன்னாகமும்,

கரையன சுரபுன்னையும்,

வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்

மனைமாமரம் வாள்வீரம்,

சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள்,

தாய தோன்றி தீயென மலரா,

ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,

வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்

பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல்

வயவர் அரி மலர்த் துறை என்கோ?

- பரிபாடல்

வடவனம்


வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம்.


வடவனம் என்பது திருநீற்றுப்பச்சை என்பார் சிலர்.


ஆலமரம்

No comments: