Sunday, May 14, 2023

ஞானத்தேடல் - Ep 86 - அனுபவ ஞானம் - 2 - (Gnanathedal)

 

அனுபவ ஞானம் 


நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின்

      நற்றமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ?

பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்

      பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீட தாமோ?

தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்

      சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான்

ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான்

      எழுபிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே


கருதிய நூல் கல்லாதான் மூடனாகும்

     கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்

ஒரு தொழிலும் இல்லாதான் முகடியாகும்

     ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும்

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

     பேசாமல் இருப்பவனே பேயனாகும்

பரிவு சொலித் தழிவினவன் பசப்பனாகும்

     பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே

No comments: