Thursday, January 20, 2022

ஞானத்தேடல் - Ep 29 - விதி பற்றி இலக்கியங்கள் (Gnanathedal)


 

விதி பற்றி இலக்கியங்கள்

விதி/ஊழ் பற்றி நம் தமிழ் இலக்கியங்கள் மற்றும் புலவர்கள் கூறவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Fate - What literature says Fate is what is destined to happen in one's life. Let's explore what Tamil literature has mentioned about that it in this episode... References ஔவையார் மூதுரை - Avvaiyar Moodhurai திருக்குறள் - Thirukkural வில்லிபாரதம் - Villibharatham சிலப்பதிகாரம் - Silappadhikaaram பாரதியார் பாடல்கள் - Bharathiar Paadalgal அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை மாயனாம் திருமாமன்; தனஞ்சயனாம் திருத்தாதை; வானோர்க்கு எல்லாம் நாயனாம் பிதாமகன்; மற்று ஒரு கோடி நராதிபராம் நண்பாய் வந்தோர்; சேயனாம் அபிமனுவாம், செயத்திரதன் கைப்படுவான்! செயற்கை வெவ்வேறு ஆய நாள், அவனிதலத்து, அவ் விதியை வெல்லும் விரகு ஆர் வல்லாரே? நரி வகுத்த வரையினிலே தெரிந்து சிங்கம் தழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும்; வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும்; வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பர் ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழது உஞற்று பவர் (620) ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் (380) வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (377) மாசாத்து வாணிகன் மகனை ஆகி, வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே’

No comments: