Saturday, January 21, 2023

ஞானத்தேடல் - Ep 70 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 3 - அனிச்சம், குறிஞ்சி - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 3 - அனிச்சம், குறிஞ்சி


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70



1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு


அனிச்சம்


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும்விருந்து” (குறள் 90)              

                                                              

முகம் பாதி பண்டம் பாதி 


நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்  (குறள் 1111)                                                         


அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்    (குறள் 1120)                                                           


அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை  (குறள் 1115)                                                           


கலித்தொகை

அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்

புரி நெகிழ் முல்லை, நறவொடு அமைந்த

தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்

பொரு முரண் சீறச் சிதைந்து நெருநையின்

இன்று நன்று, என்னை அணி  - 91 : 1-5


குறிஞ்சி


நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே 

- தேவகுலத்தார் (குறுந்தொகை)


நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி

நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை

மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,

மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்

கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், 

பாவை அன்ன வனப்பினள் இவள்' என,

காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,

யாய் மறப்பு அறியா மடந்தை-

தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே. 

- பாண்டியன் மாறன் வழுதி (நற்றிணை 301)


சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,

மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,

கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,

ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த

நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக் 

காதல் செய்தவும் காதலன்மை

யாதனிற்கொல்லோ?- தோழி!- வினவுகம்,

பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு

மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே. 

வெறி பாடிய காமக்கண்ணியார் (நற்றிணை 268)


குறிஞ்சி பூங்கோதை போலும் குங்கும முலையினாள்

- சீவக சிந்தாமணி


கொய்யாக் குறிஞ்சி பலபாடி - புறப்பொருள் வெண்பாமாலை


No comments: