Saturday, January 21, 2023

ஞானத்தேடல் - Ep 69 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 2 - ஆம்பல், குவளை - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - 2 - ஆம்பல், குவளை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் ஆம்பல், குவளை பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Aambal and Kuvalai


References


குறிஞ்சிப் பாட்டு


யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித

ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள

மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்

வடவனம் வாகை வான்பூங் குடச

மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை

பயினி வானி பல்லிணர்க் குரவம்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா       70


விரிமல ராவிரை வேரல் சூரல்

குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி

குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்

போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி

செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்

கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்

தில்லை பாலை கல்லிவர் முல்லை

குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்

வாழை வள்ளி நீணறு நெய்த

றாழை தளவ முட்டாட் டாமரை       80


ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி

சேடல் செம்மல் சிறுசெங் குரலி

கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை

காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்

பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க

மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை

யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை

பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி

வஞ்சி பித்திகம் சிந் துவாரம்

தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி       90


நந்தி நறவ நறும்புன் னாகம்

பாரம் பீரம் பைங்குருக் கத்தி

யாரங் காழ்வை கடியிரும் புன்னை

நரந்த நாக நள்ளிரு ணாறி

மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு

மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன்

மாலங் குடைய மலிவன மறுகி

வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப்

புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின்

வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக்


1. காந்தள்

2. ஆம்பல்

3. அனிச்சம்

4. குவளை

5. குறிஞ்சி

6. வெட்சி

7. செங்கொடுவேரி

8. தேமா (தேமாம்பூ)

9. மணிச்சிகை

10. உந்தூழ்

11. கூவிளம்

12. எறுழ் ( எறுழம்பூ)

13. சுள்ளி

14. கூவிரம்

15. வடவனம்

16. வாகை

17. குடசம்

18. எருவை

19. செருவிளை

20. கருவிளம்

21. பயினி

22. வானி

23. குரவம்

24. பசும்பிடி

25. வகுளம்

26. காயா

27. ஆவிரை

28. வேரல்

29. சூரல்

30. சிறுபூளை

31. குறுநறுங்கண்ணி

32. குருகிலை

33. மருதம்

34.கோங்கம்

35. போங்கம்

36. திலகம்

37. பாதிரி

38. செருந்தி

39. அதிரல்

40. சண்பகம்

41. கரந்தை

42. குளவி

43. மாமரம் (மாம்பூ)

44. தில்லை

45. பாலை

46. முல்லை

47. கஞ்சங்குல்லை

48. பிடவம்

49. செங்கருங்காலி

50. வாழை

51. வள்ளி

52. நெய்தல்

53. தாழை

54. தளவம்

55. தாமரை

56. ஞாழல்

57. மௌவல்

58. கொகுடி

59. சேடல்

60. செம்மல்

61. சிறுசெங்குரலி

62. கோடல்

63. கைதை

64. வழை

65. காஞ்சி

66. கருங்குவளை (மணிக் குலை)

67. பாங்கர்

68. மரவம்

69. தணக்கம்

70. ஈங்கை

71. இலவம்

72. கொன்றை

73. அடும்பு

74. ஆத்தி

75. அவரை

76. பகன்றை

77. பலாசம்

78. பிண்டி

79. வஞ்சி

80. பித்திகம்

81. சிந்துவாரம்

82. தும்பை

83. துழாய்

84. தோன்றி

85. நந்தி

86. நறவம்

87. புன்னாகம்

88. பாரம்

89. பீரம்

90. குருக்கத்தி

91. ஆரம்

92. காழ்வை

93. புன்னை

94. நரந்தம்

95. நாகப்பூ

96. நள்ளிருணாறி

97. குருந்தம்

98. வேங்கை

99. புழகு


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்

செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்


மதிநோக்கி அலர்வீத்த ஆம்பல்வால் மலர் - கலித்தொகை 


நீர் வளர் ஆம்பல் தூம்பு திரள் கால் – நற்றிணை


தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும் - ஐங்குறுநூறு


கோவலர் ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற


அள்ளற் பழனத்து அரக்காம்பல்  வாய்நெகிழ

வெள்ளம் தீப்பட்டதென வெருவி - புள்ளினம்

தன் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும்     

- முத்தொள்ளாயிரம்


ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் 

விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா

பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்

கருமங்கள் வேறு படும்

- நாலடியார் (கூடா நட்பு)


நீர் வளர் ஆம்பல் தூம்பு திரள் கால் – நற்றிணை


நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்

குலத்து அளவே ஆகும் குணம் 


ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே - குறுந்தொகை


கண்ணென மலர்ந்த மாயிதழ்க் குவளை - அகநானூறு

குவளை யுண்கண் இவளும் நம்மொடு  வரூஉம்  - அகநானூறு


காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று (1114)


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

    அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

    எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் ……

- திருவெம்பாவை

No comments: