Sunday, October 16, 2022

ஞானத்தேடல் - Ep 59 - வான சாஸ்திரம் - 2 - (Gnanathedal)

 

வான சாஸ்திரம் - 2


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 2


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


புறநானூறு


பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் (13),


வான்றோய் வன்ன புரிசை விசும்பின்

மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற் (21)


மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல (25)


முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,

செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் (60)


மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்

தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் (117)


வடமீன் புரையுங் கற்பின் மடமொழி (122)


வானம் மீன்பல பூப்பின், ஆனாது (125)


பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் (270)


மாரி வானத்து மீன் நாப்பண் (396)


பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை

பாடியவர்: கூடலூர்கிழார்



ஆடிய லழற்குட்டத்

தாரிரு ளரையிரவின்

முடப்பனையத்து வேர்முதலாக்

கடைக்குளத்துக் கயங்காய்ப்

பங்குனியுய ரழுவத்துத் 


தலைநாண்மீ னிலைதிரிய

நிலைநாண்மீ னதனெதி ரேர்தரத்

தொன்னாண்மீன் றுறைபடியப்

பாசிச் செல்லா தூசி முன்னா

தளக்கர்த்திணை விளக்காகக்


கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி

ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே

அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர்

பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன்

நோயில னாயி னன்றுமற் றில்லென


அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப

அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே

மைந்துடை யானை கைவைத் துறங்கவும்

திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவும்

காவல் வெண்குடை கால்பரிந் துலறவும்


காலியற் கலிமாக் கதியின்றி வைகவும்

மேலோ ருலக மெய்தின னாகலின்

ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித்

தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ

பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க்


களந்து கொடை யறியா வீகை

மணிவரை யன்ன மாஅ யோனே.


No comments: