Sunday, October 16, 2022

ஞானத்தேடல் - Ep 58 - சித்திரக்கவி - காதைகரப்பு - (Gnanathedal)

 

சித்திரக்கவி - காதைகரப்பு


தாயேயா நோவவா வீரு வெமதுநீ

பின்னை  வெருவா வருவதொ ரத்தப

வெம்புகல் வேறிருத்தி  வைத்த சினிச் சைகவர்

தாவா வருங்கலநீ யே


எங்கள் தாயாக இருக்கும் இறைவா. எங்கள் துயர் தீர். நீ எங்கள் சார்பாக பாதுகாவலாக உள்ளாய், இருப்பினும் அச்சமாகவும் தோன்றுகிறாய். அந்த அச்சமும் மறைந்து பின்னர் புகலிடம் அளித்து அமைதி தருவாய். எங்களுக்கு கேடில்லாத பாதுகாப்பு அரனாய் இருக்கிறாய் ஈசனே.  


கருவார் கச்சித்

திருவே கம்பத்

தொருவா வென்நீ 

மருவா நோயே


மனதில் கச்சித் திருவேகம்பத்துறையும் கச்சியப்பரை நினைத்தால் மீண்டும் கருவில் புகுந்து பிறப்பெடுக்கும் நோய் நம்மை சேராது.


No comments: