Wednesday, November 17, 2021

ஞானத்தேடல் - Episode 20 - சாபத்தின் வலிமை (Gnanathedal)


சாபத்தின் வலிமை 

பிறர் சாபம் எவ்வளவு வலிமையானது. அதனை இப்பதிவில் பார்ப்போம்...  

The Power of Curse

Let's explore the power of curse in this episode...

References

திருமூலர் திருமந்திரம் - Thirumoolar Thirumandhiram

திருக்குறள் - Thirukkural


ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம்
பாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில்  மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு

No comments: