Wednesday, November 10, 2021

ஞானத்தேடல் - Episode 19 - தொல்காப்பியத்தில் ஆறு அறிவு (Gnanathedal)


 தொல்காப்பியத்தில் ஆறு அறிவு

மனிதர்களுக்கு ஆறு அறிவு என்பதை தொல்காப்பியர் தனது படைப்பான தொல்காப்பியத்தில் வகுத்து குறிப்பிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு அறிவு உயிரினத்திற்கும் உதாரணங்களோடு  குறிப்பிட்டுள்ளார் என்பது ஆச்சரியமூட்டுவது. அதனை இப்பதிவில் பார்ப்போம்...  

The Six Senses in Tholkappiyam

Humans have six senses and this was described by Tholkaappiyar in detail in his work Tholkaappiyam. He not only describes those senses but also provides examples of species with those number of senses, which is fascinating piece of information. Let's explore that in this episode...

References

தொல்காப்பியம் -  Tholkaappiyam

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.

புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே

நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே

மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

மக்கள்தாமே ஆறு அறிவு உயிரே
பிறவும் உளவே அக் கிளைப் பிறப்பே.

No comments: