Monday, July 10, 2023

ஞானத்தேடல் - Ep 96 - பதார்த்த சூடாமணி - (Gnanathedal)

 

பதார்த்த சூடாமணி


தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் யாழ்ப்பாணம் இருபாலைச் செட்டியார் இயற்றிய பதார்த்த சூடாமணி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  


Padhartha Guna Chinthamani


Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Yaazhpaanam Irupaalai Chettiar has written a text call Padhartha Soodamani. Let's explore it in this episode.


References


எள்ளெண்ணெய்


இவ்வெண்ணெய் காந்தி பித்த மிளைப்புநேத் திரத்தின் ரோகம்

கவ்வைசேர் சிரவ லிப்புக் கபாலமுட் டணஞ்சி ரங்கோ

டெவ்வமார் கிருமி போக்கு மெழிலுங்கண் ணொளியு முண்டாம்

செவ்வையாம் பெலனு முண்டா மென்னவே செப்பி னாரே.


அறைக்கீரை, சிறுகீரை


அறைக்கீரை நீர்க்க டுப்போ டருங்கய ரோகக் காய்ச்சல்

சுறுக்கதாய் நீக்குமென்ப சொல்லுபத் தியத்திற் காகும்

வெறுப்பிலா சிறிய கீரை விழிக்கேற்கு மேனி தன்னில்

பொறுக்கலா வெரிவு நீக்கு மாமெனப் புகலு நூலே.


பொன்னாங்காணி


அதிகமாம் பொன்னாங் காணிக் கரோசிநீர்க் கடுப்புப் பித்தம்

முதிர்சல ரோகங் கண்ணோய் மூலம்பி னிசங்க யம்போம்

குதியினில் வாத மோடு கொடியபீ விகையும் போகும்

மதுரமா முண்ணக் காந்தன் மாறிடுங் குளிர்ச்சி யுண்டாம்.


மாம்பிஞ்சு -பழம் - காய் - பூ -வித்து


வாகுள மாவின் பிஞ்சு வாதமை பித்த மாற்றும்

பாகமாங் கனிக ரப்பன் பகர் வாதம் பித்தந் தானும்

ஆகுங்காய் கிரந்தி வாத மாம்பூவித் திற்கு மந்தம்

ஆகமார் கிராணி வாயு வதிசாரஞ் சலரோ கம்போம்.


சிற்றரத்தை


கூறிடுஞ் சிற்ற ரத்தைக் குனரத்தினைச் சொல்வன் கேண்மோ

ஊறுசெய் சன்னி தோஷ் கரமுறு மூன்று தோஷம்

மாறுசெய் தொண்டைக் கட்டுஞ் சேடமும் வரட்சி யோடு

தேறுபீ னிசமு மல்லாற் றீர்ந்திடுங் கரப்பன் றானும்.


திப்பிலி


திப்பிலிக் குணத்தைக் கேண்மின் றிரிதோஷஞ் சுவாச காசம்

சொற்றிடு வாத பித்தஞ் சூலைமார் படைப்புச் சேடம்

குற்றமார் கண்ணு ரோகங் குன்மந்தி மந்தங் காசம்

பொற்பிலாச் சன்னி யாதி போமெனப் புகலு நூலே

No comments: