Sunday, November 27, 2022

ஞானத்தேடல் - Ep 64 - சித்திரக்கவி - சதுர்/அஷ்ட நாகபந்தம் - (Gnanathedal)


 சித்திரக்கவி - சதுர்/அஷ்ட நாகபந்தம்


- சதுர் நாகபந்தம் 


தன்னை யறிதல் தலைப்படுத்துங் கல்வியதாலெங்ங 

னறித லுலகியலை – முன்னுவந்துன்னை யறிக முதல்.


நீக்கு வினைநீக்கி நேர்மைவினைக் கின்னலையாதீங்குநீ

நன்மனத்தால் நன்னயங்க ளுன்ன வுடன்பெறு வாயுய் தலை


ஓங்குபனை போலுயர்ந் தென்னே பயனுன்னத்தீங்கு

தனைமனத்து ளெண்ணித்தீ நீக்காதார்தீங்கினைத் தீப்படுந் தீ


உன்னை யறிதற் குனதூழ் தரப்பெற்றபொன்னைப்பெண்

மண்ணாசை போக்கலைக் காணாயேலென்னை பயக்குமோ சொல்


மேலா பகவா குகனே வெகுகன 

வேலா வவாவை வெலுகவே - கோலா 

கலாப சுகனேகா வாயே கதிசேர் 

கலாப மயில்வா கனா!


- அஷ்ட நாகபந்தம் 


சீதரா பாற்கரா சீல நிறையாளா 

சேது பதியான சீரைய- போதப் 

பகவனக லாதமா பாங்கினக நேய 

சகல பயனுந்தா தா.


No comments: