மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களையும் குறிக்கும். இந்நூல்கள் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவன.
உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட்
பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு
உண்மைநெறி சங்கற்ப முற்று
சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.
இருபா இருபது - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்
உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்
சிவப்பிரகாசம் - உமாபதி சிவாசாரியார்
திருவருட்பயன் - உமாபதி சிவாசாரியார்
வினாவெண்பா - உமாபதி சிவாசாரியார்
போற்றிப்பஃறொடை - உமாபதி சிவாசாரியார்
கொடிப்பாட்டு - உமாபதி சிவாசாரியார்
நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்
உண்மைநெறி விளக்கம் - உமாபதி சிவாசாரியார்
சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்
கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி
மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் - வெண்ணெய் நல்லூர்
மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை
கைகண்டார் உள்ளத்துக் கண்
இந்நூலின் முதற் செய்யுள் கடவுள் வணக்கமாக அமைந்துள்ளது. கடவுளே குருவாக வந்து அருள்புரிதலினாலும், குரு கடவுளுக்குச் சமமானதாலும், ஆசிரியர் அருள்நந்தி சிவாச்சாரியார், தமது குருவாகின மெய்கண்டதேவரையே கடவுளாகவைத்துப் போற்றித் துதித்துள்ளார்.
'சிவபெருமானே தன்னுடைய நெற்றிக் கண்ணையும். திருநீலகண்டத்தினையும் மறைத்து, திருவெண்ணெய் நல்லூரில் மெய்கண்டதேவர் என்னும் பெயரும் திருவுரு வமும் கொண்டு எழுந்தருளிப் போந்து, உலக மக்களின் மலமாசுகளைப் போக்கியருள்கின்றார். அவரை ஒருமுறை சென்று பொருந்தி நினைத்துத் தொழுபவர்கள், உயிருக்குயிராக உள்ள சிவபெருமானைத் தம்முடைய உள்ளத்தின் கண் தெளிவுறக் கண்டறியும் பேறு பெற்றவர்கள் ஆவர் என்பது இம்முதற்பாடலின் கருத்து. இதனால் சிவபெரு மானே மெய்கண்ட தேவராக எழுந்தருளித் தமக்கு அருள் யூரிந்தனர் என ஆசிரியர் புகழ்ந்து துதிக்கின்றார்
நறுமணம் மிக்க முல்லை மலர் ஒத்த, கற்பில் சிறந்த, மென்மைத்தன்மை வாய்ந்த என் தலைவி இருக்கும் இனிய ஊர் இதுவே. – தலைவன்.
குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்
- சிறுபாண்
கற்பு என்பது தலைவன் தலைவி இருவர்க்கும் கற்பிக்கப்பட்ட நெறி அல்லது ஒழுக்கமாகும். இதனால் அன்பின் ஐந்திணைகளுள் முல்லைத் திணை யைச் சார்ந்த பாடல்கள் கற்பு என்பதற்கு விளக்கமாக அமையக் கூடியவையே ஆகும்.
அதற்கு 'கல்வி' என்ற பொருளைப் பழங்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழங்கினர்.
கற்பெனப்படுவது சொல் திறம்பாமை
நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை
- கொன்றை வேந்தன்
இயல்பு வெற்றி
போட்டியிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாட்டையும் வெற்றி எனலாம். இவ்வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர்.
அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை இப்பகுதியிலுள்ள துறைகள் காட்டுகின்றன. அரச முல்லை, பார்ப்பன முல்லை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, ஏறுஆண் முல்லை, வல்லஆண் முல்லை, காவல் முல்லை, பேர்ஆண் முல்லை, மற முல்லை, குடை முல்லை ஆகிய துறைகள் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.
ஒரு நாட்டு வழக்குப் பாடல்.
'பச்சைத் தண்ணியிலே பல்லைக் கழுவு; முல்லைக் காற்றிலே முகத்தைக் கழுவு' - இந்த நாட்டு வழக்கு, முகத்தை முல்லை மணம் கமழும் தென்றலாலே கழுவிக் கொள்ளச் சொல்கின்றது. காற்றாலே கழுவுவதாம்.
வரி எப்படி வசூலிக்க வேண்டும் என்ற முறையை மிக அழகாக அனைவரும் புரியும் வண்ணம் எளிமையாக இந்த பாடலில் விளக்கப்பட்டுள்ளது.
பாடலின் விளக்கம்: விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்.
அறந்துஞ்சும் உறந்தை
அன்னச்சேவலே! குமரித்துறையில் அயிரைமீனை விழுங்கிவிட்டு வடமலைக்குப் பறந்து செல்லும்போது, இடையில் உறையூருக்குச் சென்று, "பிசிராந்தையார் வளர்ப்புப் பறவை நான் (பிசிராந்தை அடியுறை) என்று சொன்னால் அரசன் கோப்பெருஞ்சோழன் உன் பேடைப்பறவை அணிந்துகொள்ள அணிகலன்கள் தருவான்" என்று ஒரு பாடலில் இவர் குறிப்பிட்ட உவமை கோப்பெருஞ்சோழன் மீது இவர் கொண்டிருந்த பற்றியும் நாட்டின் வளத்தையும் அழகாக விளக்குகிறது.
யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிராயின்,
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே
- புறநானூறு (191)
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
இசைமரபு ஆக, நட்புக் கந்தாக,
இனையதோர் காலை ஈங்கு வருதல்;
‘வருவன்’ என்ற கோனது பெருமையும்,
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே;
அதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை இழந்தஇவ் வுலகம்
என்னா வதுகொல்? அளியது தானே!
- புறநானூறு (217)
என்று வியந்து வியந்து பாடி உருகினார்.. தானும் வடகிருந்து உயிர் துறக்க முடிவு செய்தார்.
உடனே மன்னன் தடுத்து, “உமக்கு இன்னும் மகப்பேறு இல்லை. மகப்பேறு இல்லாத மாந்தர்கள் வானவர் தம் உலகு புகப்பெறார். ஆகையால் மகன் பிறந்த பிறகு வந்து அரசனது நடுகல் இடம் கொடுக்க, வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பது வரலாறு.
சங்க கால புலவர்களின் வாழ்க்கை நமக்கு மொழியை மட்டும் புகட்ட வில்லை. மொழியோடு காலத்தால் அழியாத பல உண்மைகளையும் மனிதன் வாழும் நெறிகளையும், உயர்ந்த ஞானத்தையும் நமக்கு வழங்குகின்றன