Wednesday, September 14, 2022

ஞானத்தேடல் - Ep 55 - சித்திர கவி - கோமூத்திரி பந்தம் - (Gnanathedal)


 சித்திர கவி - கோமூத்திரி பந்தம்


சித்திர கவி வகைகளுள் ஒன்றான கோமூத்திரி பந்தம் பற்றிய செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...  


Chithira Kavi - Komoothri Bandham


Let's see about an interesting form of poetry called Komoothri Bandham that comes under the category of Chithirakavi in this episode


References


தண்டியலங்காரம் - Thandialangaaram


பருவ மாகவி தோகன மாலையே

பொருவி லாவுழை மேவன கானமே

மருவு மாசைவி டாகன மாலையே

வெருவி லாயிழை பூவணி காலமே


தலைவியே ! தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம்

இதுதான். எல்லாத் திசைகளிலும் மேகங்கள் காணப் பெறுகின்றன.

மாலைப் பொழுதில் இம்மேகங்கள் தொடர்ந்து மழையைத் தந்து

கொண்டே இருக்கப் போகின்றன. காட்டிலே மான்கள்

இக்காலத்தின் வருகையால் மகிழ்ந்து விளையாடுகின்றன. உயர்ந்த

அணிகலன்களை அணிந்தவளே ! தலைவன் மலர்களால்

உன்னை அழகு செய்ய வரப்போகிறான் கலங்காதே” எனத்

தோழி கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைகிறது.


Komoothri Bandham image - https://i.imgur.com/hBBuHcw.png


Also see - https://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html

Friday, September 09, 2022

ஞானத்தேடல் - Ep 54 - புலவரை துரத்திய புலி - (Gnanathedal)


புலவரை துரத்திய புலி

புலவரை துரத்திய புலி பற்றிய செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...  


The Tiger that chased a Poet


Let's see about an interesting story of a tiger that chased a poet in this episode


References


சங்கர சிந்தாமணிப் புலவர்


பையா டரவணி சொக்கேசர் கூடற் பதியைவிட்டு 

வையா புரிக்கு வரும்வழி யேவழி தான்மறித்து 

மெய்யா வறுமைப் புலிதான் மிகவும் வெருட்டுகின்ற 

தையாமென் போடை யதிபா புலவர்க் கருணிதியே


- பங்காரு திருமலை நாயக்கர் (1840-1862)

- திருமலை போடைய காமராச பாண்டியர் (1862 - 1888)


Thursday, September 01, 2022

ஞானத்தேடல் - Ep 53 - குமரேச சதகம் - (Gnanathedal)

 


குமரேச சதகம் குமரமலை, குமரேச சதகம் பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்... Kumaresa Sadhagam Let's explore about Kumara Malai and Kumaresa Sadhagam in this episode References குமரேச சதகம் முருகன் திருவிளையாடல் பூமிக்கொ ராறுதலை யாய்வந்து சரவணப் பொய்கைதனில் விளையாடியும், புனிதற்கு மந்த்ரவுப தேசமொழி சொல்லியும் பாதனைச் சிறையில் வைத்தும், தேமிக்க அரியரப் பிரமாதி கட்கும் செகுக்கமுடி யாஅசுரனைத் தேகம் கிழித்துவடி வேலினால் இருகூறு செய்தமரர் சிறைதவிர்த்தும், நேமிக்குள் அன்பரிடர் உற்றசம யந்தனில் நினைக்குமுன் வந்துதவியும், நிதமுமெய்த் துணையாய் விளங்கலால் உலகில்உனை நிகரான தெய்வமுண்டோ மாமிக்க தேன்பருகு பூங்கடம் பணியும்மணி மார்பனே! வள்ளிகணவா! மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே (1) பலர்க்கும் பயன்படுவன கொண்டல்பொழி மாரியும், உதாரசற் குணமுடைய கோவுமூ ருணியின் நீரும் கூட்டமிடும் அம்பலத்து றுதருவின் நீழலும், குடியாளர் விவசாயமும், கண்டவர்கள் எல்லாம் வரும்பெருஞ் சந்தியிற் கனிபல பழுத்தமரமும், கருணையுட னேவைத் திடுந்தணீர்ப் பந்தலும் காவேரி போலூற்றமும், விண்டலத்துறைசந்தி ராதித்த கிரணமும், வீசும்மா ருதசீதமும், விவேகியெனும் நல்லோ ரிடத்திலுறு செல்வமும் வெகுசனர்க்கு பகாரமாம், வண்டிமிர் கடப்பமலர் மாலையணி செங்களப மார்பனே வடிவேலவா மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே. (16)

Thursday, August 25, 2022

ஞானத்தேடல் - Ep 52 - 18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy) - (Gnanathedal)


18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy)

18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy) பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்...

Awareness of Privacy in the 18th century Tamil Literature Let's explore about the awareness of Privacy in the 18th century Tamil Literature in this episode References அறப்பளீசுர சதகம் சென்மித்த வருடமு முண்டான வத்தமுந் தீதில் கிரகச் சார முந் தின்றுவரு மௌடதமு மேலான தேசிகன் செப்பிய மகா மந்த்ரமும் புன்மையவ மானமுந் தானமும் பைம்பொனணி புனையுமட வார் கலவியும் புகழ்மேவு மானமு மிவையொன்ப துந்தமது புந்திக்கு ளேவைப் பதே தன்மமென் றுரைசெய்யவ ரொன்னார் கருத்தையுந் தன்பிணி யையும் பசியையுந் தான்செய்த பாவமு மிவையெலாம் வேறொருவர் தஞ்செவியில் வைப்ப தியல்பாம் அன்மருவு கண்டனே மூன்றுலகு மீன் றவுமை அன்பனே யருமை மதவே ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள ரறப்பளீ சுர தேவனே. (39) சொல்லக்கூடாதது - பிறந்த வருடம் - செல்வம் - ஜாதகம் - உண்ணும் மருந்து - குரு உபதேசித்த மந்திரமும் - அவமானம் - தானம் - பெண்களிடம் இருக்கும் காதல் நெருக்கம் - புகழ் தரும் மானம் சொல்ல வேண்டியது - எதிரிகள் கருத்து - தன் பிணி பசி - தான் செய்த பாவம்

Thursday, August 18, 2022

ஞானத்தேடல் - Ep 51 - பதார்த்த குண சிந்தாமணி - (Gnanathedal)

 


பதார்த்த குண சிந்தாமணி

தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் தேரையர் இயற்றிய பதார்த்த குண சிந்தாமணி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Padhartha Guna Chinthamani Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Theraiyar has written a text call Padhartha Guna Chinthamani. Let's explore it in this episode References சுட்ட நீர் நெஞ்செரிப்பு நெற்றிவவி நீங்காப் புளியேப்பம் வஞ்சமுற வந்த வயிற்றினோய் விஞ்சியே வீழாமக் கட்டோடு வெப்பிருமற் சுட்டநீர் ஆழாக்குட் கொள்ளவறும். கால்கூறு, அரைக்கூறு, காய்ந்த வெந்நீரின் குணம் காற்கூறு காய்நீராற் காரிகையே பித்தம்போ மேற்கூறு பாதிசுட்ட வெந்நீரால் - மேற்கூறும் வாதமொடு பித்தம்போம் வைத்தொருநாட் சென்றுண்கு ரோகம்போ மோடி யொளித்து, முக்காற்கூறு காய்ந்த வெந்நீரின் குணம் முப்பங்கறக் காய்ந்த முத்தவெந்நீ ரால்வாதஞ் செப்புங் குளிர்நடுக்கல் தீச்சுரம்வெங் கைப்பலநோய் வாதபித்த மையமிவை மாறுஞ் சுரிகுழலே பூதலத்து நாளும்புகல் விளாங்கனி எப்போது மெய்க்கிதமா மீளையிருமல்‌ கபமும்‌ வெப்பாகுந்‌ தாகமும்போ மெய்ப்பசியா மிப்புவியி லென்றாகிலும்‌ கனிமே லிச்சைவைத்‌துத்‌ தின்னவெண்ணித்‌ தின்றால்‌ விளாங்கனியை தின்‌. மணத்தக்காளி காய்க்குக் கபந்தீருங் காரிகையே யவ்விலைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறுங்காண் தீக்குள் உணக்கிடு வற்றல் உறுபிணியோர்க் காகும் மணத்தக்கா ளிக்குள்ள வாறு. கிழங்கான் மீன் பத்தியத்திற் கேற்ற பருங்கிழங்கான் மீன்அருந்த உற்ற பிணியனைத்தும் ஒடுங்காண்-மெத்தப் பசியெழும்புஞ் சேர்ந்த பழமலமுஞ் சாறும் முசியா துடல்வளரு முன்


ஞானத்தேடல் - Ep50 - நோய் தீர்க்கும் பாடல்கள் - 1 - (Gnanathedal)

 


நோய் தீர்க்கும் பாடல்கள் - 1

ஒருவர் நோய்வாய்ப் படும்போது இறை நம்பிக்கை தோன்றும். அப்படி பெரியாழ்வார் ஒரு முறை நோய்வாய் பட்டபோது இந்த பாசுரங்களை பாடினார். இதை பாராயணம் செய்யும் பக்தர்கள் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Songs that cure illness - 1 When one gets sick, they turn to God for getting their illness cured. Likewise, Periazhwar got sick and sang 10 Pasurams to get cured. It is believed that those who sing these pasurams get their illness cured. Let's explore about it in this episode References 1. நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும் கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின் மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2) 2. சித்திரகுத்தன் எழுத்தால் தென்புலக்கோன் பொறிஒற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடிஒளித்தார் முத்துத் திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன் பத்தர்க்கு அமுதன்அடியேன் பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 3. வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப் பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 4. மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர் இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின் சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர் பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5. மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர். பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6 உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின் பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர் அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர் பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 7. கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. 8. ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில் பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 9 உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே. அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே. இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள். பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். 10 அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும் அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே.

Sunday, August 07, 2022

ஞானத்தேடல் - Ep 49 - கலிகாலத்தின் கொடுமை - (Gnanathedal)

 


கலிகாலத்தின் கொடுமை கலிகாலத்தின் கொடுமை பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்... Effects of Kaliyugam Let's explore about effects of Kaliyugam in this episode References குமரேச சதகம் தாய்புத்தி சொன்னால் மறுத்திடும் காலம்உயர் தந்தையைச் சீறுகாலம் சற்குருவை நிந்தைசெய் காலம்மெய்க் கடவுளைச் சற்றும்எண் ணாதகாலம் பேய்தெய்வம் என்றுப சரித்திடுங்காலம் புரட்டருக் கேற்றகாலம் பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம்நற் பெரியர்சொல் கேளாதகாலம் தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம்மிகு சிறியவன் பெருகுகாலம் செருவில்விட் டோடினார் வரிசைபெறு காலம்வசை செப்புவோர்க் குதவுகாலம் வாய்மதம் பேசிடும் அநியாய காரர்க்கு வாய்த்தகலி காலம்ஐயா மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே (57)