Showing posts with label Story. Show all posts
Showing posts with label Story. Show all posts

Friday, December 15, 2023

ஞானத்தேடல் - Ep119 - நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை - (Gnanathedal)


நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிறந்த கதை


வைணவர்களின் தமிழ் மறை


நான்கு வேதங்களின் சாரம்


12 ஆழ்வார்கள்


24 பிரபந்தங்கள்


நூலாக தொகுத்தவர் நாதமுனிகள் (தனி கதை)


முதலாழ்வார்கள் அயோநிஜர்கள்


பொய்கையாழ்வார் (காஞ்சிபுரம் அருகில் திருவெக்கா) - பாஞ்சஜன்ய அம்சம்


பூதத்தாழ்வார் (கடல்மல்லை - கௌமோதகி கதை அம்சம்)


பேயாழ்வார் (திருமயிலை - நந்தகம் அம்சம்)


பொய்கையாழ்வார்


வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று


ஓரடியும் சாடுதைத்த ஒண்மலர்ச் சேவடியும்,

ஈரடியும் காணலா மென்னெஞ்சே - ஓரடியில்

தாயவனைக் கேசவனைத் தண்டுழாய் மாலைசேர்,

மாயவனை யேமனத்து வை


பூதத்தாழ்வார்


அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியா - நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்


மாலே. நெடியானே. கண்ணனே, விண்ணவர்க்கு

மேலா. வியந்துழாய்க் கண்ணியனே - மேலால்

விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்

அளவன்றால் யானுடைய அன்பு


பேயாழ்வார்


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,

என்னாழி வண்ணன்பால் இன்று


சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்

தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த

வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,

தேனமரும் பூமேல் திரு



ஈரத்தமிழ்


மொழியால் பக்தி பக்தியால் மொழி வளர்ந்தது


ஆழ்வார்கள் திருவடிகள் சரணம்

Tuesday, November 14, 2023

ஞானத்தேடல் - Ep114 - கம்பரின் சமயோசிதம் - (Gnanathedal)


 கம்பரின் சமயோசிதம்


கரைக்கு வடக்கிருக்கும் காளிகாள் அம்மைக்கு

அரைத்து வழிசாந்தைத் தொட்டப்பேய் உரைத்தும்

மறைக்க வறியாத வன்பேயைக்

குறைக்குமாம் கூர்ங்கத்தி கொண்டு.


இட்டடி நோவ எடுத்தடிகொப்பளிக்க

வட்டில் சுமந்து மருங்கசையக்-கொட்டிக்

கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் நாவில்

வழங்கோசை வையம் பெறும்.


உருகி உடல்உருகி உள்ளீரல் பற்றி

எரிவ தவியாதென் செய்வேன்- வரியரவ

நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்

நெஞ்சிலே யிட்ட நெருப்பு.

Saturday, October 14, 2023

ஞானத்தேடல் - Ep 110 - நரி விருத்தம் (Gnanathedal)


 திருத்தக்க தேவர் அருளிய நரி விருத்தம்


அரிய யற்கரி யானை யயர்த்துபோய்

நரிவி ருத்தம தாகுவர் நாடரே

- அப்பர் தேவாரம் (5.100.7)


கூட்டினார்கிளி யின்விருத்த முரைத்ததோரெலி யின்றொழிற்

பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு மெக்கர்தங்களைப் பல்லறம்

- சம்பந்தர்தம் தேவாரம் ஆலவாய் பதிகம்(3.39.5)


'கிளிவிருத்தம்' 'எலிவிருத்தம்' என்பன சமணசமய நூற்கள் என குறிக்கின்றது.


'வீரசோழியத்தின்' உரை ஆசியர் 'பெருந்தேவனார்' இம்மூன்று விருத்தங்களுடன் 'குண்டலகேசி விருத்தம்' என்பன 'விருத்தங்கள்' என குறித்துள்ளார். 


இ·து ஓர் நீதிக்கதைகளை புகல் நூல் மட்டும் அல்லாது நீதி உரைக்கும் நூலாகவும் காண்கின்றது.


கரியொரு திங்க ளாறு கானவன் மூன்று நாளாம்

இருதலைப் புற்றி னாக மின்றுணு மிரையா மென்று

விரிதலை வேடன் கையில் விற்குதை நரம்பைக் கவ்வி

நரியினார் பட்ட பாடு நாளைநாம் படுவோ மன்றே

- விவேக சிந்தாமணி


முதல் 9 பாடல்களில் (2-10) காணும் ஓர் நரிபற்றிய கதை வருமாறு.


ஓர் வேடன் தன் புலத்தினை விளைவை மேய வந்த யானையைக் கொல்லுவதற்கு பாம்பு வாழும் ஓர் புற்றின் மேலிருந்து கைவில் கொண்டு கணை எய்ய, பாம்பு அவனைத் தீண்ட, அவன் கீழே வீழ்ந்த உடன், தன் கை வாளால் பாம்பினைத் துணிக்க, அப்பக்கம் வந்த நரி ஒன்று இறந்து பட்ட 3 உடல்களைக் கண்டு, மகிழ்ந்து, இவை 6 திங்கள் 7 நாட்கள் 1 நாள் என இரை ஆகும் எனக் கணக்கிட்டுக் கொண்டே, இப்பெரு தொகுதியாலும் ஆசை அறாமல், விடமேறி இறந்த வேடன் கையில் பூட்டி இருந்தபடியே உள்ள வில்/கணையிலிருக்கும் ஒன்றினுக்கு ஆசைப்பட்டு, அதனைக் கவ்வ, கணை தெறித்து தொண்டையில் அகப்பட்டு அதுவும் இறந்தது. ஆக 'பேராசை கொள்ளல்' எனும் கருத்து பஞ்சதந்திரக்கதைபோல் காண்கின்றது.


குடற்படு முடையைக் கண்டு குறுநரி தின்று மான்தேர்

கடற்படை யியக்கங் கண்டே கள்ளத்தாற் கிடப்ப யாரும்

திடற்பகை இன்மையாலே செவிகொய்வான் வால்கொய்வானாய்

உடல்புறம் போர்த்த புன்தோல் உரித்திட்டங் கொருவன் கொன்றான்  (11)


அஞ்சு மின்னதி லோபமில் லோர்களுஞ்

செஞ்சு டர்நெடு வேற்றிரி யோதனன்

பஞ்ச வர்க்குமண் பாகங் கொடாமலே

துஞ்சி னான்கிளை தன்னொடு மென்பவே (22)


குட்ட நீர்த்துறைப் போம்வழிக் கூனியை

ஒட்ட லன்புன லுய்த்தவக் காகுத்தன்

திட்டை வேண்டிய தேர்ச்சியில் வாணிகன்

பட்ட தெய்துவ பற்றுளத் தார்களே (23)

Tuesday, September 19, 2023

ஞானத்தேடல் - Ep106 - மானம் காத்த மைந்தர் - (Gnanathedal)


 திகடச்சக்கரம் - திகழ் தச கரம் - கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரியார் - காஞ்சிபுரம்


திகட சக்கரச் செம்முக மைந்துளான்

     சகட சக்கரத் தாமரை நாயகன்

          அகட சக்கர வின்மணி யாவுறை

               விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.


வேம்பத்தூராருள்‌ ஒருவராகிய பெருமாளையர்


நெல்லைவருக்கக்கோவை என்னும்‌. பிரபந்தத்தை இயற்றி முடித்தார்‌. மொழிக்கு முதலாகும்‌ உயிரெழுத்துக்களிலும்‌ உயிர்‌

மெய்யெழுத்துக்களிலும்‌ ஒவ்வொன்று ஒவ்வொரு பாட்டின்‌ முதலில்‌ முறையே வரும்படி. அகப்‌பொருட்டுறைகளைாக  அமைத்துப்பாடுவது வருக்கக்‌கோவையாகும்‌. பாம்பலங்காரர்‌ வருக்கக்கோவை, மாறன்‌ வருக்கக்கோவை


தேரோடும்‌ வீதியேலாஞ்‌ செங்கயலுஞ்‌ சங்கினமும்‌

நீரோ டூலாவிவரும்‌ நெல்லையே - காரோடும்‌

கந்தரத்த ரந்தரத்தர்‌ கந்தரத்த ரந்தரத்தர்‌

கந்தரத்த ரந்தரத்தர்‌ காப்பு


இச்‌ செய்யுளின்‌ பிற்பகுதியின்‌ பொருள்‌ வருமாறு :--


காரரோடும்‌-கருநிறம்‌ பரவிய, ,

கந்தரத்தர்‌- திருக்கழுத்தை யுடையவரும்‌

அந்தரத்தர்‌- ஞானாகாயத்தையே இருமேனியாகச்‌கொண்டவரும்‌

கந்து அரத்தர்‌ - பற்றுக்கோடாசிய செம்மைநிறமுடையவரும்‌,

அம்‌ தரத்தர்‌ - திருமுடியில்‌ நீரைத்‌ தாங்கியவரும்‌,

கந்தர்‌ அத்தர்‌ - முருகக்கடவுளின்‌ தந்தையாரும்‌,

அம்‌ தரத்தர்‌- அழகிய தகுதியையுடையவருமாகிய சிவபெருமான்‌

காப்பு- காவல்‌ புரிந்து வீற்றிருக்கும்‌ இடம்‌

அந்தரம்‌-ஆகாயம்‌

கந்து - பற்றுக்கோடு

அரத்தம்‌- சிவப்பு;,

அம்‌- நீர்‌, அழகு;

தரம்‌- தகுதி.


Saturday, September 09, 2023

ஞானத்தேடல் - Ep105 - கம்பர் கட்டிய சுவர் - (Gnanathedal)

 

கம்பர் கட்டிய சுவர்


சோழன்: பார்க்கும் அனைத்தும், நீர் உட்பட எனக்கு அடக்கம்


கம்பர்: அனைத்தும் உனக்கு அடக்கம், ஆயினும் நீ எனக்கு அடக்கம்


“தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை”


தாய் + சீ + பொன்னிக்கு கம்பன் அடிமை


போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்

தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை

மாற்றினும் மாற்றுவர் வன்க ணாளர்கள்

கூற்றினும் பாவலர் கொடிய ராவரே.


மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ

உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்-என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?


"இவ்வுலகில் மன்னவனாக இருப்பவள் நீ ஒருவன் தானோ வளமான நாடாக இருப்பதும் நின் சோணாடு மட்டுந்தானோ. உன்னை அறிந்ததன் பின்போ யாள் தமிழினைக் கற்றுணர்ந்தேன. குரங்கு தாவினால் அதனைத் தாங்காது போகும் மரக்கொய் யாதும் உண்டோ? இல்லையன்றே! அங்ஙனமே, யான் இங்கிருந்தும் அகன்றால், என்னை விரைந்து ஏற்றுக்கொள்ளாத வேந்தனும் உண்டாமோ?" என்பது பாடலின் பொருள்.


"அங்ஙனம் எவன்தான் ஆதரிக்கிறான் என்று பார்க்கலாம என்று குலோத்துங்கன் சீறினான். கம்பரின் சீற்றமும் அதனால் மிகுதியாயிற்று. தாம் இருப்பது சோழனின் அவை என்பதையும் அவர் மறந்தனர். அவன் ஆதரவில் தாம் இருந்ததையும் மறந்தனர். தம்மை அவமதித்த சோழனின் செயலே அவர்முன் நின்றது. கவியுள்ளம் பொங்கியது. தமிழால் நிறைந்த கம்பரின் நெஞ்ச திலே தணல் மூண்டது. இனிமை சேர்த்துப் பிறரை மகிழ்விக்கும கவிதையிலே சினத்தீ சொல்லுக்குச் சொல் வெளிப்பட்டது. கம்பரின் குரலும் அதற்கேற்ப உயர்ந்தது. அதன் கடுமையும் அவையினரைத் திகைப்படையச் செய்தது.


மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ

உன்னையறிந் தோதமிழை ஓதினேன்-என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ!

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?


என மீண்டும் பாடினார்.


குரங்குகள் கிளைகளிலே ஆளந்தமாகத் தாவிச் செல்லும் இந்தக கொம்புதான் குரங்கைத் தாங்கும். இது தாங்காது என்பதில்லை. தம்மை அடைந்த குரங்குகளை எல்லாக் கொம்புகளுமே தாங்கத்தான் செய்யும். ஆகவே, குரங்கு ஒன்றுக்கு இந்தக் கொம்பை விட்டுப் போகி றோமே? இனித் தாங்குவது எதுவோ? என்ற கவலையே கிடையாது. காடெல்லாம் மரங்கள். அந்த மரங்களின் கிளைகளுள் எதுவுமே அதனைத் தாங்கும்.


வேந்தரும் பிறகும் தன்னைப் போற்றி வழிபட்டு நிற்கப் பெரும் நதியோடு திகழும் தள்ளைக், கம்பர், பாடிப் பரிசில் பெற்றே நிலையினர் பழித்ததைக் கேடக நேர்ந்தது பற்றி அவன் எழுதினாள். என்றும், அவனுடைய எதிரேயே அங்கனம் எதிர்ப் இச்சுப் பேசினார் எவரும் அல்லர் என்பதனை நினைந்தபோது, ஆத்திரம் மேலும் பெரிதாயிற்று.


திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப முதலியாரின் நினைவு கூனுக்கு அப்போது வந்தது."


'கம்பரே! என்னை விட்டால் சடையப்பரின் ஆதரவு இருக்கிறதென்ற செருக்குத்தானே உம்மை இப்படிப் பேச வைத்தது. சடையப்பர் என் ஆணைக்கு உடபடடவர். அவர்க்கு இப்போதே தகவல் தெரிவித்து விடுகின்றேன். அவரிடமிருந்து சிறு உதவியும் இனிக் கிடையாதபடி செய்து விடுகின்றேன்" என்றான்.


சோழவின் பேச்சைக் கேட்டதும், கம்பரின் ஆத்திரம் மேலும் அதிகமாயிற்று. வெண்ணெய்ச் சடையப்பரிடத்திலே கம்பருக்கு அளவுகடந்த பெருமதிப்பு உண்டு எனினும், சோழனின் பேச்சு. அவரைச் சிந்திக்கவும் வைத்தது.


காதம் இருபத்துநான் கொழியக் காசினியை

ஒதக் கடல்கொண் டொளித்ததோ-மேதினியில்

கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா நீ முனையில்

இல்லையோ எங்கட்கு இடம்?


மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்து

சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரீங்கிலையே

விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே


Monday, October 03, 2022

ஞானத்தேடல் - Ep 56 - கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - (Gnanathedal)

 

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே


கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற வாக்கிற்கு உதாரணமாக வாழ்ந்தவர் பற்றி ஓர் உண்மை கதையை இந்த  பதிவில் பார்ப்போம்...  


The Noble are always Noble even in adversity


Let's see about an interesting true story where a man who lived up to the old saying "The noble are always noble even in adversity", in this episode


References


அட்டாலும் பால் சுவையிற் குன்றா தளவளாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.


மிதலைப்பட்டி - அது சிவகங்கை ஸம்ஸ்தானத்தைச்‌ சார்ந்தது.


மணிமேகலையை அவள்‌ அணிந்துகொள்ளும்‌ வண்ணம்‌ செப்பஞ்‌ செய்துகொடுத்ததும்‌ மிதிலைப்பட்டிப்‌ பிரதியே!


அழகிய சிற்றம்பலக்‌ கவிராயர்‌  


பல அரிய தமிழ்ச்‌ சுவடிகள்‌ பலநாற்றாண்டுகளாகச்‌ சேகரித்து அவர்‌ வீட்டிலே பாதுகாக்கப்‌ பெற்றிருந்தன


தாரமங்கலம்‌ கோயில்‌  திருப்பணிகள்‌ செய்த கட்டியப்ப முதலியார்‌

வெங்‌களப்ப நாயக்கர் 

இராமநாதபுரம்‌ சேதுபதிகள்  

மருங்காபுரி ஜமீன்‌தார் 

Friday, September 09, 2022

ஞானத்தேடல் - Ep 54 - புலவரை துரத்திய புலி - (Gnanathedal)


புலவரை துரத்திய புலி

புலவரை துரத்திய புலி பற்றிய செய்திகளை இந்த  பதிவில் பார்ப்போம்...  


The Tiger that chased a Poet


Let's see about an interesting story of a tiger that chased a poet in this episode


References


சங்கர சிந்தாமணிப் புலவர்


பையா டரவணி சொக்கேசர் கூடற் பதியைவிட்டு 

வையா புரிக்கு வரும்வழி யேவழி தான்மறித்து 

மெய்யா வறுமைப் புலிதான் மிகவும் வெருட்டுகின்ற 

தையாமென் போடை யதிபா புலவர்க் கருணிதியே


- பங்காரு திருமலை நாயக்கர் (1840-1862)

- திருமலை போடைய காமராச பாண்டியர் (1862 - 1888)