Showing posts with label Moral. Show all posts
Showing posts with label Moral. Show all posts

Thursday, March 14, 2024

ஞானத்தேடல் - Ep 132 - தவறை உணர்தல் - (Gnanathedal)


 தவறை உணர்தல்


வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்

    பெருந்துயரிடும்பையில் பிறந்து,

கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு

     அவர்த்தரும் கலவியேகருதி,

ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்

    உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்

    நாராயணா வென்னும் நாமம்.


தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,

பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,

கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா.,

அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால்,

என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்,

குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா.,

அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,

நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்,

தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்

ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


தந்தைதாய் மக்களே சுற்றமென்

   றுற்றுவர் பற்றி நின்ற

பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ

   பழியெனக் கருதி னாயேல்

அந்தமா யாதியாய் ஆதிக்கும்

   ஆதியாய் ஆய னாய

மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா

   வல்லையாய் மருவு நெஞ்சே


சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்

நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது

தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்

பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே

- திருமந்திரம்


Tuesday, January 16, 2024

ஞானத்தேடல் - Ep 122 - கலித்தொகை கூறும் வாழ்வியல் - (Gnanathedal)


 கலித்தொகை கூறும் வாழ்வியல்


மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்

கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல்,

சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த

நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்

பூ மலர்ந்தவை போல, புள் அல்கும் துறைவ! கேள்:   5


ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்  10

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்


ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி   15

நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க!

தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்;

நின்தலை வருந்தியாள் துயரம்

சென்றனை களைமோ; பூண்க, நின் தேரே!


தோழி கூற்று

கலித்தொகை – நெய்தல் கலி

பாடியவர் – நல்லந்துவனார்

திணை - நெய்தல்


கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு


'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;


வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்று எல்லாம்

குறி எதிர்ப்பை நீரது உடைத்து.


பயன் நோக்காது ஆற்றவும் பாத்தறிவு ஒன்றின்றி

இசைநோக்கி ஈகின்றார் ஈகை, - வயமாப்போல்

ஆலித்துப் பாயும் அலைகடல் தண் சேர்ப்ப!

கூலிக்குச் செய்து உண்ணுமாறு. --- பழமொழி நானூறு.


 ஈகைக்கு உரியவர் ஒன்பதின்மர் என்றும், ஈகைக்கு உரியர் அல்லாதார் ஒன்பதின்மர் என்பதும் "காசிகாண்டம்" கூறுகின்றது. அது வருமாறு....


"மாண்பு உடையாளர், கேண்மையர், தத்தம்

வழிமுறை ஒழுக்கினில் அமர்ந்தோர்,

சேண்படு நிரப்பின் எய்தினோர், புரப்போர்

தீர்ந்தவர், தந்தை, தாய், குரவர்,

காண்தகும் உதவி புரிந்துளோர் இனையோர்

ஒன்பதின்மரும் உளம் களிப்ப,

வேண்டுறு நிதியம் அளிப்பின், மற்று ஒன்றே

கோடியாம் என மறை விளம்பும்".


"முகன் எதிர் ஒன்றும், பிரியின் மற்றுஒன்றும்

மொழிபவர், விழைவுறு தூதர்,

அகன்ற கேள்வி இலார், அருமருத்துவர்கள்,

அரும்பொருள் கவருநர், தூர்த்தர்,

புகல்அரும் தீமை புரிபவர், மல்லர்,

செருக்கினார், புன்தொழில் தீயோர்,

இகழ்தரும் இனையோர் ஒன்பது பெயர்க்கும்

ஈந்திடல் பழுது என இசைப்பார்".


'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;


“நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு


ஆற்றாரும் ஆற்றி அடுப, இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்


'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;


பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்.


'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை;


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.


'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்


தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.


அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.


நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் - புறநானூறு 3


நிலம்புடை பெயர்வது ஆயினும் கூறிய சொற்புடை பெயர்தலோ இலரே - நற்றிணை289


நிலம்திறம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொல்நீ பொய்ப்பு அறியலையே - பதிற்றுப்பத்து 63


'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை;


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்


நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப


'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;


கொலையில் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர்


'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்


"அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்த றலை"


நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை

போற்றி யொழுகப் படும்.


இறப்பவே தீய செயினும், தன் நாட்டார்

பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ?-நிறக் கோங்கு

உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட!-

ஒருவர் பொறை இருவர் நட்பு.


அன்னம் அனையாய் குயிலுக்கு ஆனஅழகு இன்னிசையே,

கன்னல் மொழியார்க்கு கற்பாமே, - மன்னுகலை

கற்றோர்க்கு அழகு கருணையே, ஆசைமயக்கு

அற்றோர்க்கு அழகு பொறையாம். --- நீதிவெண்பா.


மண் திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீமுரணிய நீரும் என்றாங்கு,

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,

வலியும் தெறலும் அளியும் உடையோய்.. --- புறநானூறு.


Tuesday, November 14, 2023

ஞானத்தேடல் - Ep 111 - உலகநீதி (Gnanathedal)


 உலக நீதி - ஆசிரியர்: உலகநாதர்


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்

வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே. #1


நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்

நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்

அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்

மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #2


மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்

மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்

தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்

தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்

சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்

சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்

வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #3


குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்

கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்

கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்

கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்

கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்

மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #4


வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்

மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்

வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்

தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்

தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #5


வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்

மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்

வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்

சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்

திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே. #6


கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்

கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்

பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்

பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்

இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்

எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்

குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்

குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே. #7


சேராத இடம் தனிலே சேர வேண்டாம்

செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்

ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்

உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்

பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்

வாராரும் குறவருடை வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #8


மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்

மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்

கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்

காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்

புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்

புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #9


மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்

திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்

தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்

குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்

குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே. #10


அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்

அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்

தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி

சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி

வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி

மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி

இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை

ஏதெது செய்வானோ ஏமன்றானே. #11


கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்

கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்

தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்

துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்

வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்

மாறான குறவருடை வள்ளி பங்கன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. #12


ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி

அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி

ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்

உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி

காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்

கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு

போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்

பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே.

Saturday, October 14, 2023

ஞானத்தேடல் - Ep 110 - நரி விருத்தம் (Gnanathedal)


 திருத்தக்க தேவர் அருளிய நரி விருத்தம்


அரிய யற்கரி யானை யயர்த்துபோய்

நரிவி ருத்தம தாகுவர் நாடரே

- அப்பர் தேவாரம் (5.100.7)


கூட்டினார்கிளி யின்விருத்த முரைத்ததோரெலி யின்றொழிற்

பாட்டுமெய் சொலிப் பக்கமேசெலு மெக்கர்தங்களைப் பல்லறம்

- சம்பந்தர்தம் தேவாரம் ஆலவாய் பதிகம்(3.39.5)


'கிளிவிருத்தம்' 'எலிவிருத்தம்' என்பன சமணசமய நூற்கள் என குறிக்கின்றது.


'வீரசோழியத்தின்' உரை ஆசியர் 'பெருந்தேவனார்' இம்மூன்று விருத்தங்களுடன் 'குண்டலகேசி விருத்தம்' என்பன 'விருத்தங்கள்' என குறித்துள்ளார். 


இ·து ஓர் நீதிக்கதைகளை புகல் நூல் மட்டும் அல்லாது நீதி உரைக்கும் நூலாகவும் காண்கின்றது.


கரியொரு திங்க ளாறு கானவன் மூன்று நாளாம்

இருதலைப் புற்றி னாக மின்றுணு மிரையா மென்று

விரிதலை வேடன் கையில் விற்குதை நரம்பைக் கவ்வி

நரியினார் பட்ட பாடு நாளைநாம் படுவோ மன்றே

- விவேக சிந்தாமணி


முதல் 9 பாடல்களில் (2-10) காணும் ஓர் நரிபற்றிய கதை வருமாறு.


ஓர் வேடன் தன் புலத்தினை விளைவை மேய வந்த யானையைக் கொல்லுவதற்கு பாம்பு வாழும் ஓர் புற்றின் மேலிருந்து கைவில் கொண்டு கணை எய்ய, பாம்பு அவனைத் தீண்ட, அவன் கீழே வீழ்ந்த உடன், தன் கை வாளால் பாம்பினைத் துணிக்க, அப்பக்கம் வந்த நரி ஒன்று இறந்து பட்ட 3 உடல்களைக் கண்டு, மகிழ்ந்து, இவை 6 திங்கள் 7 நாட்கள் 1 நாள் என இரை ஆகும் எனக் கணக்கிட்டுக் கொண்டே, இப்பெரு தொகுதியாலும் ஆசை அறாமல், விடமேறி இறந்த வேடன் கையில் பூட்டி இருந்தபடியே உள்ள வில்/கணையிலிருக்கும் ஒன்றினுக்கு ஆசைப்பட்டு, அதனைக் கவ்வ, கணை தெறித்து தொண்டையில் அகப்பட்டு அதுவும் இறந்தது. ஆக 'பேராசை கொள்ளல்' எனும் கருத்து பஞ்சதந்திரக்கதைபோல் காண்கின்றது.


குடற்படு முடையைக் கண்டு குறுநரி தின்று மான்தேர்

கடற்படை யியக்கங் கண்டே கள்ளத்தாற் கிடப்ப யாரும்

திடற்பகை இன்மையாலே செவிகொய்வான் வால்கொய்வானாய்

உடல்புறம் போர்த்த புன்தோல் உரித்திட்டங் கொருவன் கொன்றான்  (11)


அஞ்சு மின்னதி லோபமில் லோர்களுஞ்

செஞ்சு டர்நெடு வேற்றிரி யோதனன்

பஞ்ச வர்க்குமண் பாகங் கொடாமலே

துஞ்சி னான்கிளை தன்னொடு மென்பவே (22)


குட்ட நீர்த்துறைப் போம்வழிக் கூனியை

ஒட்ட லன்புன லுய்த்தவக் காகுத்தன்

திட்டை வேண்டிய தேர்ச்சியில் வாணிகன்

பட்ட தெய்துவ பற்றுளத் தார்களே (23)

ஞானத்தேடல் - Ep 108 - அனுபவ ஞானம் - 7 - (Gnanathedal)

 

அனுபவ ஞானம் 


மங்குல் அம்பதினாயிரம் யோசனை

  மயில்கண்டு நடமாடும்

தங்கும் ஆதவ னூறாயிரம் யோசனை

  தாமரை முகம் விள்ளும்

திங்கள் ஆதவற்கு இரட்டி யோசனையுறச்

  சிறந்திடும் அரக்காம்பல்

எங்கண் ஆயினும் அன்பராய் இருப்பவர்

  இதயம் விட்டு அகலாரே

தூம்பினில் புதைத்த கல்லும் துகள் இன்றிச் சுடர் கொடாது

பாம்புக்கு பால்வார்த் தென்றும் பழகினும் நன்மை தாரா

வேம்புக்கு தேன்வார்த்தாலும் வேப்பிலை கசப்பு மாறா

தாம்பல நூல் கற்றாலும் துர்ச்சனர் தக்கோர் ஆகார்.

தேளது தீயில் வீழ்ந்தால் செத்திடாது எடுத்தபேரை

மீளவே கொடுக்கினாலே வெய்துறக் கொட்டலேபோல்

ஏளனம் பேசித் தீங்குற்று இருப்பதை எதிர்கண்டாலும்

கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்றமாமே.

Wednesday, July 12, 2023

ஞானத்தேடல் - Ep 97 - அனுபவ ஞானம் - 5 - (Gnanathedal)


அனுபவ ஞானம் 


வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழ வேண்டாம்

தாழ்வது வந்ததானால் தளர்வரோ? தக்கோர் மிக்க

ஊழ்வினை வந்ததானால் ஒருவரால் விலக்கப்போமோ?

ஏழையாய் இருந்தோர் பல்லக்கு ஏறுதல் கண்டிலீரோ?

செல்வம் வந்துற்ற போது தெய்வமும்

      சிறிது பேணார்

சொல்வதை அறிந்து சொல்லார்

      சுற்றமும் துணையும் பேணார்

வெல்வதே கருமம் அல்லால் வெம்பகை

      வலிதென்று எண்ணார்

வல்வினை விளைவும் பாரார் மண்ணின்

      மேல் வாழும் மாந்தர்.

ஆசாரம் செய்வார் ஆகில் அறிவொடு புகழும் உண்டாம்

ஆசாரம் நன்மை னால் அவனியில் தேவர் ஆவார்

ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்றுப்

பேசார் போல் பேச்சுமாகிப் பிணியடு நரகில் வீழ்வார்


Saturday, July 01, 2023

ஞானத்தேடல் - Ep 93 - அனுபவ ஞானம் - 4 - (Gnanathedal)


 அனுபவ ஞானம் 


அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ

கரும்பு கோணிடில் கட்டியம் பாகுமாம்

இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்

நரம்பு கோணிடில் நாமதற்கு என் செய்வோம்?

பொன்னொரு மணி உண்டானால் புலைஞனும் கிளைஞன் என்று

தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியி மணமும் செய்வார்

மன்னராய் இருந்த பேர்கள் வகைகெட்டுப் போவார் ஆகில்

பின்னையும் யாரோ என்று பேசுவார் ஏசுவாரே!


திருப்பதி மிதியாப் பாதம் சிவனடி வணங்காச் சென்னி

இரப்பவர்க்கு ஈயாக் கைகள் இனிய சொல் கேளாக் காது

புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாத் தேகம்

இருப்பினும் பயன் என் காட்டில் எரிப்பினும் இல்லை தானே

Monday, June 26, 2023

ஞானத்தேடல் - Ep 92 - இலக்கியத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு - (Gnanathedal)

 

இலக்கியத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு


புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்

தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று

ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்

சோரார் உணர்வுடை யார்.

புல், விளைநிலம், பசுஞ்சாணம், சுடுகாடு, பாதை, நீர்நிலை, கோயில், நிழல் உள்ள இடம், பசுமந்தை நிற்கிற இடம், சாம்பல் ஆகிய பத்து இடத்திலும் எச்சில் உமிழ்தலும் மலஜலம் கழித்தலும் அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

Wednesday, May 31, 2023

ஞானத்தேடல் - Ep 91 - அனுபவ ஞானம் - 3 - (Gnanathedal)


அனுபவ ஞானம் 


கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்

விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்

இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல்

அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா.

நிலமதில் குணவான் தோன்றின் நீள் குடித்தனரும் வாழ்வார்

தல மெலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம்

நலமிலாக் கயவன் தோன்றின் குடித்தனம் தேசம் பாழாம்

குலமெலாம் பழுது செய்யும் கோடரிக் காம்பு நேராம்

சங்கு வெண்தாமரைக்குத் தந்தை இரவி தண்ணீர்

அங்கதைக் கொய்து விட்டால் அழுகச் செய்து அந்நீர் கொல்லும்

துங்கவெண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்

தங்களின் நிலைமை கெட்டால் இப்படித் தயங்குவாரே

Sunday, May 14, 2023

ஞானத்தேடல் - Ep 86 - அனுபவ ஞானம் - 2 - (Gnanathedal)

 

அனுபவ ஞானம் 


நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின்

      நற்றமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ?

பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்

      பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீட தாமோ?

தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்

      சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான்

ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான்

      எழுபிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே


கருதிய நூல் கல்லாதான் மூடனாகும்

     கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்

ஒரு தொழிலும் இல்லாதான் முகடியாகும்

     ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும்

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

     பேசாமல் இருப்பவனே பேயனாகும்

பரிவு சொலித் தழிவினவன் பசப்பனாகும்

     பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே