Showing posts with label Medicine. Show all posts
Showing posts with label Medicine. Show all posts

Thursday, February 15, 2024

ஞானத்தேடல் - Ep 128 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குல்லை, பிடவம், சிறுமாரோடம் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்


குல்லை


கஞ்சங்குல்லைப்பூ, கஞ்சாங்கோரை, மலைப்பச்சை, புனத்துளசி, நாய்த்துளசி, திருநீற்றுப்பச்சை


குல்லைக்கண்ணி வடுகர் முனையது

வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,

வழிபடல் சூழ்ந்திசின், அவருடைய நாட்டே!

- மாமூலனார்


குல்லை குளவி கூதளம் குவளை 

இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் - நற்றிணை


முடித்த குல்லை இலை உடை நறும் பூ - திரு 201


மெல் இணர்க் கொன்றையும், மென்மலர்க் காயாவும்,

புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,

குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்

கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர்

பல்லான் பொதுவர் கதழ்விடை கோட்காண்பார்

முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன

பல்லர், பெருமழைக்கண்ணர், மடம் சேர்ந்த

சொல்லர், சுடரும் கனங்குழைக் காதினர்,

நல்லவர் கொண்டார் மிசை,

- கலித்தொகை 103


இச்செடிகள் மலிந்த காடாக வளர்ந்து இருக்கும் என்பதைப் "குல்லையம்புறவு என்றார் நத்தத்தனார்

குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த - சிறுபானாற்றுப்படை 29


குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் – பொருநராற்றுப்படை 234


பிடவம்


அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன

செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்

நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்

பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்

வள மலை நாடன் நெருநல் நம்மொடு     

கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ,

சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது

அல்லல் அன்று அது காதல் அம் தோழி!

தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா

வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி    10

கண்டும், கழல் தொடி வலித்த என்

பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!           

- நற்றிணை 25


இலை இல பிடவம் 


இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,

புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,

பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்

பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,

கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து

- நற்றிணை 242


‘பிடா’ என்று தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரம், சங்க இலக்கியத்தில் பிடவு மற்றும் பிடவம் என்று வேறு சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


வள மழை பொழிந்த வால் நிறக் களரி,

உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்

தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,

வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்

கை மாண் தோணி கடுப்ப, பையென,  

மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்

- அகநானூறு 344


பிடவூர் என்பது சங்க கால ஊர்களில் ஒன்று. 


தித்தன்

செல்லா நல் இசை உறந்தைக் குணாது,

நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர்     

அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், 

புறநானூறு 395


அம்மானே ஆகமச் சீலர்க்கு அருள் நல்கும்

பெம்மானே பேரருளாளன் பிடவூரன்

தம்மானே தண்டமிழ் நூல் புலவாணர்க்கு ஓர்

அம்மானை பரவையுண் மண்டலி அம்மானே

சுந்தரர் தேவாரம் 


சிறுமாரோடம்


இதனைச் செங்கருங்காலிப் பூ என நச்சினார்க்கினியர் உரை கூறுவார். இது நறு மோரோடம், பசுமோரோடம், சிறுமாரோடம் என்ற பெயர்களால் வழங்கப்படும். 


உலகம் படைத்த காலை தலைவ!

மறந்தனர் கொல்லோ சிறந்திசி னோரே

முதிரா வேனில் எதிரிய அதிரல்

பராரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்

நறுமோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய

செப்பிடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்

அணிநிறங் கொண்ட மணிமருள் ஐம்பால்

தாழ் நறுங்கதுப்பில் பையென முழங்கும்

அரும்பெறற் பெரும் பயம் கொள்ளாது

பிரிந்துறை மரபின் பொருள் படைத்தோரே-நற். 337


எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தென,

பசுமோரோடமோடு ஆம்பல் ஒல்லா                             

என்ற ஐங்குறுநூற்றுப் பாடலும் குறிப்பிடுகின்றன.


கோடம்பாக்கம் புரசவாக்கம், பனம்பாக்கம், அரசம்பாக்கம்


கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி 

சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்

காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது

ஈரிரவும் தூங்காது என் கண்

Sunday, January 28, 2024

ஞானத்தேடல் - Ep 124 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பாலை, முல்லை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  பாலை, முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,


பாலை


சுரமும் சுரம் சார்ந்த நிலமும் பாலை எனப்பெயர் பெற்றன.


முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும் - சிலப்பதிகாரம்


குடசப்பாலை

வெட்பாலை

தீம்பாலை (தித்திப்புப் பாலை தீம்பாலை)

மலைப்பாலை

குளப்பாலை

கொடிப்பாலை

கருடப்பாலை

உலக்கைப்பாலை

ஏழிலைப்பாலை (ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி மற்றும் ஏழிலம்பாலை)


"பாலை நின்ற பாலை நெடுவழி" - சிறுபாணாற்றுப்படை


பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் 

கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை 

- நற்றிணை


திருப்பாலைப்பந்தல் உலா என்னும் நூல் அரங்கேற்றப்பட்டது  ஆசிரியரின் காலிங்கராய எல்லப்ப நயினார்'


இலக்கியமும் கல்வெட்டுக்களும்

திரு. வை. சதாசிவ பண்டாரத்தார்


1. திருப்பாலைப்பந்தல் உலா

2. இறைசைப் புராணம் - திருமலை நயினார் சந்திரசேகரர்

3. ஓங்கு கோயிற் புராணம் - திருவம்பல முடையார் மறைஞானசம்பந்தர் 


திருப்பாலைப்பந்தல் - தென் ஆர்க்காட்டு மாவட்டம், திருக்கோவிலூர்த் தாலுகா. 


திருக்கழிப்பாலை கடலூர் மாவட்டம். 


திருப்பாலைவனம் - திருவள்ளூர் மாவட்டம் -  அமைந்துள்ள அருள்மிகு திருப்பாலீஸ்வரர் சுவாமி திருக்கோயிலாகும். 


திருப்பாலை - மதுரை 


ஏழிலைப் பாலை 


நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை – பரி 21/13


ஏழு சுரங்களை குரல்(சட்ஜம்), துத்தம்(ரிஷபம்), கைக்கிளை(காந்தாரம்) உழை(மத்யமம்), இளி(பஞ்சமம்), விளரி(தைவதம்), தாரம்(நிஷாதம்) என்றனர்.


குரலே துத்தம் கைக்கிளை உழையே

இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே - திவாகர நிகண்டு


வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு

குதிரையும் யானையும் குயிலும் தேனுவும்

ஆடும் என்றிவை ஏழிசை ஓசை 

- பிங்கல நிகண்டு


துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், 

உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்

சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,

தகுணிதம் துந்துபி தாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்

தமருகம், குடமுழா, மொந்தை வாசித்

தத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்ப னிடம்திரு ஆலங் காடே.

- காரைக்காலம்மையார் - மூத்த திருப்பதிகம்


ஏழ்பெரும் பாலைகள் -  செம்பாலை, படுமலைப்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, மேற்செம்பாலை


முல்லை - முல்லையாழ்  - செம்பாலை – அரிகாம்போதி

குறிஞ்சி - குறிஞ்சி யாழ் - படுமலைப் பாலை - நடபைரவி

மருதம் - மருதயாழ் - கொடிப்பாலை / கோடிப்பாலை – கரகரப்பிரியா

மேற்செம்பாலை - கல்யாணி

விளரிப்பாலை - நெய்தல் யாழ் – தோடி

செவ்வழிப்பாலை – இருமத்திமதோடி

அரும்பாலை - பாலை யாழ் – சங்கராபரணம்


செவ்வழி யாழ்ப் பாண்மகனே! சீர் ஆர் தேர் கையினால்

இவ் வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன்,-இவ் வழியே

ஆடினான், ஆய் வயல் ஊரன்; மற்று எங்கையர் தோள்

கூடினான், பின் பெரிது கூர்ந்து.

- கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது


விளரி யாழ்ப் பாண்மகனே! வேண்டா; அழையேல்;

முளரி மொழியாது, உளரிக் கிளரி, நீ,

பூங் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன்,

ஆங்கண் அறிய உரை.


பாலை யாழ்ப் பாண் மகனே! பண்டு நின் நாயகற்கு

மாலை யாழ் ஓதி வருடாயோ? காலை யாழ்

செய்யும் இடம் அறியாய்; சேர்ந்தாய்; நின் பொய்ம்மொழிக்கு

நையும் இடம் அறிந்து, நாடு.


ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறுதலைப் பெயர்க்கும் மறுஇன் பாலை

- பொருநராற்றுப்படை


முல்லை


இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ; 

நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,

பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;

ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

- புறநானூறு 242


கார் புறந்தந்த நீருடை வியனுலகம்

பல்ஆ புகுதரூஉம் புல்லென் மாலை

முல்லை! வாழியோ, முல்லை! – நீ நின்

சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை!

நகுவை போலக் காட்டல்

தகுமோ, மற்று – இது தமியோர் மாட்டே?

- குறுந்தொகை 162


முல்லைப் பிராட்டி! நீயுன் 

முறுவல்கள் கொண்டு, எம்மை

அல்லல் விளைவியே லாழிநங்

காய்! உன்ன டைக்கலம்,

கொல்லை யரக்கியை முக்கரிந்

திட்ட குமரனார்

சொல்லும் பொய்யானால், நானும்

பிறத்தமை பொய்யன்றே

Thursday, January 04, 2024

ஞானத்தேடல் - Ep 121 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தில்லை - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  தில்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்


தில்லை


தில்லை என்பதே ஒருவகை மலர். தில்லைமரம் மிகுயாக இருந்த ஊர் ஆதலால் இந்த ஊருக்கு இந்தப் பெயர் வழங்கலாயிற்று. தில்லை என்பது இக்காலச் சிதம்பரம். 


முற்றாத தில்லையும் வாசமு முள்ளு முனையு மெவர்

சற்றாகிலுஞ் செய்து வைத்த துண்டோ வன்புஞ்சர்க் குணமும்

பெற்றார் பிறவிக் குணங்கா ணதுகண்டு பேதையர்கள்

கற்றால் வராது கண்டாய் கச்சி மாநகர்க் காவலனே. 

- தனிப்பாடல் திரட்டு 


குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி

தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும் – நற்றிணை 195/2,3


தில்லை வேலி இவ்வூர் - ஐங்குறுநூறு 131


கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து,

தில்லை அன்ன புல்லென் சடையோடு,

அள்இலைத் தாளி கொய்யு மோனே

இல்வழங்கு மடமயில் பிணிக்கும்

சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.


புறநானூறு - 252. அவனே இவன்!


கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து தில்லை அன்ன புல்லென் சடையொடு அள்ளிலைத் தாளி கொய்யுமோனே - புறநானூறு 252


மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்

கானல் அணிந்த உயர்மணல் எக்கர்மேல்

சீர்மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த

நீமலி கரகம் போல் பழம் தூங்கு முடத்தாழைப்

பூ மலர்ந்தவை போல், புள் அல்கும் துறைவ! கேள்

- கலித்தொகை 133


நாக சூத வகுளஞ் சரளஞ் சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம்

பூக ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி

மேக சாலமலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப்

போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம்பணை கடந்து புகுந்தார். 1.5.93


வன்னி கொன்றை வழை சண்பகம் ஆரம் மலர்ப் பலாசொடு செருந்தி மந்தாரம்

கன்னி காரங் குரவங் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கித்

துன்னு சாதி மரு மாலதி மௌவல் துதைந்த நந்திகரம் வீரம் மிடைந்த

பன் மலர்ப் புனித நந்தவனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான். 1.5.94


திருக்கோவையார்


திருக்கோவையார் தில்லையைப் போற்றும் முறையில் ஆக்கப்பட்டு அகத்துறை சார்ந்த நூலாக  அமைந்துள்ளது. இதனால் இது திருச்சிற்றம்பலக் கோவையார் என்றும் அழைக்கப்படுகிறது.


இது குறித்து, ‘திருக்கோவையார் இயல்பு’ என்ற நூலின் முகவுரையில் அதன் ஆசிரியர் தை. சி. கனகசபாபதி முதலியார் பின்வருமாறு எழுதுவது சிந்தனைக்குரியது:

‘மணிவாசகர் பாடிய திருக்கோவையார் சங்கநூற்களுள் ஒன்று அன்று. எனினும், அவற்றோடு ஒன்றாக வைத்து எண்ணும் பெருமை இதற்கேயுண்டு. இந்நூலின் உயர்வை உணர்தற்குச் சங்கநூற் பயிற்சி பெரிதும் வேண்டும். செய்யுள் நூல்களில் பெரும் பயிற்சி உடையார்க்கே திருக்கோவைச் செய்யுட்களின் இனிய எளிய தண்ணிய நடையின் செம்மை நனி விளங்கும்’


திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக்

குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ

மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந்

துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளர்கின்றதே’.


சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்

உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் டீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ

இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே’.


காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் 

ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்

ஏகத்தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில்

தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத் துன்பங்களே. 71


மழலை யின்னமுந் தெளிகிலா மைந்த கண் மணியொன் 

றுழல்க ருங்கொடி யிருந்திடக் கனியுதிர்ந் தாங்குன்

சுழல்கொள் விஞ்சையி னன்மையான் மன்னனைத் தொடுத்த

தழல வித்தன மென்றுநீ தருக்குறத் தகுமோ.

- திருவிளையாடற் புராணம்


ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின் 

காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்;

ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்;

சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே."

Saturday, October 14, 2023

ஞானத்தேடல் - Ep109 - நோய் தீர்க்கும் பாடல்கள் - 2 - (Gnanathedal)

 

நோய் தீர்க்கும் பாடல்கள் - 2


ஒருவர் நோய்வாய்ப்  படும்போது இறை நம்பிக்கை தோன்றும். அப்படி அருணகிரிநாதர் பாடிய திருத்தணிகை  திருப்புகழ் . இதை பாராயணம் செய்யும் பக்தர்கள் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை அதைப்பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Songs that cure illness - 1


When one gets sick, they turn to God for getting their illness cured. Likewise, Arunagirinathar sang Thiruppugazh praising Lord Murugan of Thiruthanigai malai. It is believed that those who sing this get their illness cured. Let's explore about  it in this episode


References

திருப்புகழ் 243


தனதன தான தனதன தான

     தனதன தான ...... தனதான


......... பாடல் .........


இருமலு ரோக முயலகன் வாத

     மெரிகுண நாசி ...... விடமேநீ


ரிழிவுவி டாத தலைவலி சோகை

     யெழுகள மாலை ...... யிவையோடே


பெருவயி றீளை யெரிகுலை சூலை

     பெருவலி வேறு ...... முளநோய்கள்


பிறவிகள் தோறு மெனைநலி யாத

     படியுன தாள்கள் ...... அருள்வாயே


வருமொரு கோடி யசுரர்ப தாதி

     மடியஅ நேக ...... இசைபாடி


வருமொரு கால வயிரவ ராட

     வடிசுடர் வேலை ...... விடுவோனே


தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி

     தருதிரு மாதின் ...... மணவாளா


சலமிடை பூவி னடுவினில் வீறு

     தணிமலை மேவு ...... பெருமாளே.

Monday, July 10, 2023

ஞானத்தேடல் - Ep 96 - பதார்த்த சூடாமணி - (Gnanathedal)

 

பதார்த்த சூடாமணி


தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் யாழ்ப்பாணம் இருபாலைச் செட்டியார் இயற்றிய பதார்த்த சூடாமணி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  


Padhartha Guna Chinthamani


Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Yaazhpaanam Irupaalai Chettiar has written a text call Padhartha Soodamani. Let's explore it in this episode.


References


எள்ளெண்ணெய்


இவ்வெண்ணெய் காந்தி பித்த மிளைப்புநேத் திரத்தின் ரோகம்

கவ்வைசேர் சிரவ லிப்புக் கபாலமுட் டணஞ்சி ரங்கோ

டெவ்வமார் கிருமி போக்கு மெழிலுங்கண் ணொளியு முண்டாம்

செவ்வையாம் பெலனு முண்டா மென்னவே செப்பி னாரே.


அறைக்கீரை, சிறுகீரை


அறைக்கீரை நீர்க்க டுப்போ டருங்கய ரோகக் காய்ச்சல்

சுறுக்கதாய் நீக்குமென்ப சொல்லுபத் தியத்திற் காகும்

வெறுப்பிலா சிறிய கீரை விழிக்கேற்கு மேனி தன்னில்

பொறுக்கலா வெரிவு நீக்கு மாமெனப் புகலு நூலே.


பொன்னாங்காணி


அதிகமாம் பொன்னாங் காணிக் கரோசிநீர்க் கடுப்புப் பித்தம்

முதிர்சல ரோகங் கண்ணோய் மூலம்பி னிசங்க யம்போம்

குதியினில் வாத மோடு கொடியபீ விகையும் போகும்

மதுரமா முண்ணக் காந்தன் மாறிடுங் குளிர்ச்சி யுண்டாம்.


மாம்பிஞ்சு -பழம் - காய் - பூ -வித்து


வாகுள மாவின் பிஞ்சு வாதமை பித்த மாற்றும்

பாகமாங் கனிக ரப்பன் பகர் வாதம் பித்தந் தானும்

ஆகுங்காய் கிரந்தி வாத மாம்பூவித் திற்கு மந்தம்

ஆகமார் கிராணி வாயு வதிசாரஞ் சலரோ கம்போம்.


சிற்றரத்தை


கூறிடுஞ் சிற்ற ரத்தைக் குனரத்தினைச் சொல்வன் கேண்மோ

ஊறுசெய் சன்னி தோஷ் கரமுறு மூன்று தோஷம்

மாறுசெய் தொண்டைக் கட்டுஞ் சேடமும் வரட்சி யோடு

தேறுபீ னிசமு மல்லாற் றீர்ந்திடுங் கரப்பன் றானும்.


திப்பிலி


திப்பிலிக் குணத்தைக் கேண்மின் றிரிதோஷஞ் சுவாச காசம்

சொற்றிடு வாத பித்தஞ் சூலைமார் படைப்புச் சேடம்

குற்றமார் கண்ணு ரோகங் குன்மந்தி மந்தங் காசம்

பொற்பிலாச் சன்னி யாதி போமெனப் புகலு நூலே

Sunday, May 14, 2023

ஞானத்தேடல் - Ep 85 - பதார்த்த குண விளக்கம் - (Gnanathedal)


 பதார்த்த குண விளக்கம் 


தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் வைத்திய வித்வன்மணி சி. கண்ணுசாமிப் பிள்ளை அவர்கள் இயற்றிய பதார்த்த குண விளக்கம்  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  


Padhartha Guna Chinthamani


Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Vaidhiya Vidhvanmani C. Kannusamy Pillai has written a text call Padhartha Guna Chinthamani. Let's explore it in this episode


References


வைத்திய வித்வன்மணி சி.  கண்ணுசாமிப்  பிள்ளை அவர்கள்


- மூல, தாது, ஜீவ வர்க்கம்

- Binomial Nomenclature


பித்தகாரி - Cholagogue

விஷநாசகாரி - Antidote

தாதுக்ஷீணரோதி - Antiseptic

பூதிகந்தநாசினி - Disinfectant

சமனகாரி - Sedative

உற்சாககாரி - Stimulant

பலகாரி - Tonic

மலகாரி - Laxative

நித்திராகாரி - Hypnotic

கபஹரகாரி - Expectorant


- தேகத்தின் உள்ளுறுப்புகளுக்கு பலம் கொடுக்கும் பதார்த்தங்கள்

- விஷமித்த பதார்த்தங்களுக்கு முறிவு


அளத்தல்


60 துளி - 1 தேக்கரண்டி (~3.5ml)

8 தேக்கரண்டி - 1 அவுன்ஸ் (~28ml-30ml)

6 அவுன்ஸ் - 1 ஆழாக்கு (~180ml)

4 ஆழாக்கு - 1 குப்பி (புட்டி) (~700ml)

8 ஆழாக்கு - 1 படி (~1.4L)

சங்கு (பாலடை) - 3/4 1 அவுன்ஸ்


நிறுத்தல்.


4 நெல் எடை - 1 குன்றிமணி

4 குன்றிமணி - 1 பண எடை (1/2 gm)

32 குன்றிமணி - 1 விராகனெடை (4gm)

40 குன்றிமணி - 1 கழஞ்சு (5gm)

10 விராகனெடை - 1 பலம் (40gm)


8 குன்றிமணி - 1 gm


வேறு.


1 ரூபாய் எடை- 1 தோலா (~13-15gm)

3 தோலா - 1 பலம் (40gm)

8 பலம் - 1 சேர் (320gm)

5 சேர் - 1 வீசை (1600gm)

8 வீசை - 1 மணங்கு (12.8kg)

Thursday, August 18, 2022

ஞானத்தேடல் - Ep 51 - பதார்த்த குண சிந்தாமணி - (Gnanathedal)

 


பதார்த்த குண சிந்தாமணி

தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் தேரையர் இயற்றிய பதார்த்த குண சிந்தாமணி பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Padhartha Guna Chinthamani Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Theraiyar has written a text call Padhartha Guna Chinthamani. Let's explore it in this episode References சுட்ட நீர் நெஞ்செரிப்பு நெற்றிவவி நீங்காப் புளியேப்பம் வஞ்சமுற வந்த வயிற்றினோய் விஞ்சியே வீழாமக் கட்டோடு வெப்பிருமற் சுட்டநீர் ஆழாக்குட் கொள்ளவறும். கால்கூறு, அரைக்கூறு, காய்ந்த வெந்நீரின் குணம் காற்கூறு காய்நீராற் காரிகையே பித்தம்போ மேற்கூறு பாதிசுட்ட வெந்நீரால் - மேற்கூறும் வாதமொடு பித்தம்போம் வைத்தொருநாட் சென்றுண்கு ரோகம்போ மோடி யொளித்து, முக்காற்கூறு காய்ந்த வெந்நீரின் குணம் முப்பங்கறக் காய்ந்த முத்தவெந்நீ ரால்வாதஞ் செப்புங் குளிர்நடுக்கல் தீச்சுரம்வெங் கைப்பலநோய் வாதபித்த மையமிவை மாறுஞ் சுரிகுழலே பூதலத்து நாளும்புகல் விளாங்கனி எப்போது மெய்க்கிதமா மீளையிருமல்‌ கபமும்‌ வெப்பாகுந்‌ தாகமும்போ மெய்ப்பசியா மிப்புவியி லென்றாகிலும்‌ கனிமே லிச்சைவைத்‌துத்‌ தின்னவெண்ணித்‌ தின்றால்‌ விளாங்கனியை தின்‌. மணத்தக்காளி காய்க்குக் கபந்தீருங் காரிகையே யவ்விலைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறுங்காண் தீக்குள் உணக்கிடு வற்றல் உறுபிணியோர்க் காகும் மணத்தக்கா ளிக்குள்ள வாறு. கிழங்கான் மீன் பத்தியத்திற் கேற்ற பருங்கிழங்கான் மீன்அருந்த உற்ற பிணியனைத்தும் ஒடுங்காண்-மெத்தப் பசியெழும்புஞ் சேர்ந்த பழமலமுஞ் சாறும் முசியா துடல்வளரு முன்


ஞானத்தேடல் - Ep50 - நோய் தீர்க்கும் பாடல்கள் - 1 - (Gnanathedal)

 


நோய் தீர்க்கும் பாடல்கள் - 1

ஒருவர் நோய்வாய்ப் படும்போது இறை நம்பிக்கை தோன்றும். அப்படி பெரியாழ்வார் ஒரு முறை நோய்வாய் பட்டபோது இந்த பாசுரங்களை பாடினார். இதை பாராயணம் செய்யும் பக்தர்கள் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Songs that cure illness - 1 When one gets sick, they turn to God for getting their illness cured. Likewise, Periazhwar got sick and sang 10 Pasurams to get cured. It is believed that those who sing these pasurams get their illness cured. Let's explore about it in this episode References 1. நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும் கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின் மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2) 2. சித்திரகுத்தன் எழுத்தால் தென்புலக்கோன் பொறிஒற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடிஒளித்தார் முத்துத் திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன் பத்தர்க்கு அமுதன்அடியேன் பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 3. வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப் பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 4. மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர் இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின் சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர் பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5. மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர். பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6 உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின் பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர் அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர் பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 7. கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. 8. ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில் பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 9 உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே. அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே. இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள். பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். 10 அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும் அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே.

Tuesday, June 14, 2022

ஞானத்தேடல் - Ep 44 - மருத்துவம் - 1 - (Gnanathedal)

 


காலையில் இஞ்சி 
கடும்பகல் சுக்கு 
மாலையில் கடுக்காய்
மண்டலம் உண்டிடில் 
விருத்தனும் பாலனாமே 


திருவள்ளுவர் மருந்து அதிகாரம்

For the people

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். 942

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 943

பசித்து புசி 

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 945

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். 947

For the doctors

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. 941

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். 948

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.