Sunday, April 07, 2024

ஞானத்தேடல் - Ep 135 - சித்திரக்கவி - மாலைமாற்று - (Gnanathedal)


 சித்திரக்கவி - மாலைமாற்று

சீகாழி – திருமாலைமாற்று

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

– திருஞானசம்பந்தர்

---------------------------------------------------------

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா (1)

யாம் ஆமா - நீ ஆம் ஆம் - மாயாழீ - காமா- காண் - நாகா
காணாகாமா - காழீயா - மாமாயாநீ - மா - மாயா
---------------------------------------------------------

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா (2)

யாகா - யாழீ - காயா - காதா - யார் ஆர் - ஆ - தாய் ஆயாய் -
ஆயா - தார் - ஆர் ஆயா - தாக ஆயா - காழீயா - கா யா
---------------------------------------------------------

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா (3)

தாவா - மூவா -  தாசா -  காழீநாதா - நீ -  யாமா -  மா
மா - யா நீ - தானாழி - காசா - தா - வா - மூ - வாதா
---------------------------------------------------------

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ (4)

நீவா - வாயா - கா - யாழீ - காவா - வான்நோவாராமே
மேரா - வான் - நோவாவா - காழீயா - காயா - வாவா நீ
---------------------------------------------------------

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா (5)

யா - காலா -  மேயா - காழீ யா -  மேதாவீ - தாய் ஆவி
வீயாதா -  வீதாம் -  மே - யாழீ - யாம் - மேல் - ஆகு - ஆயா
---------------------------------------------------------

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே (6)

மேலேபோகாமே - தேழீ - காலாலே - கால் ஆனாயே
ஏல் - நால் - ஆக - ஆல் - ஏலா - காழீதே - மேகா - போலேமே
---------------------------------------------------------

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ (7)

நீயா - மாநீ - ஏயா - மாதா - ஏழீ - காநீதானே
நே - தாநீ - காழிவேதா - மாயாயேநீ - மாய் - ஆநீ
---------------------------------------------------------

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே (8)

நேணவராவிழயாசைழியே (நே, அணவர், ஆ, விழ, யா, ஆசை, இழியே) - வேகதளேரியளாயுழிகா (வேக(ம்) அதரி ஏரி, அளாய உழி, கா)
காழியு(ள்)ளாய்! - அரிளேதகவே (அரு, இளவு, ஏது, அகவே) - ஏழிசை இராவணனே
---------------------------------------------------------

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

காலே - மேலே - காண்  நீ - காழீ - காலே மாலே - மே பூ
பூ - மேல் ஏ(ய்) - - மாலே - காழீ! காண் - காலே மேலே கா.
---------------------------------------------------------

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

வேரியும் - ஏண் - நவ- காழியொயே - ஏனை -  நீள்நேம் - அடு - அள் - ஓகரது ஏ
தேரகளோடு - அமணே - நினை - ஏய் - ஒழி - காவணமே - உரிவே
---------------------------------------------------------

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

நேர் - அகழ் ஆம் - இதய ஆசு - அழி - தாய் ஏல் நன் நீயே - ஏல் + ந + அன் -ஆய் உழிகா
காழியுளானின் - நினையே - நினையே - தாழ்(வு) - இசையா - தமிழாகரனே

Sunday, March 31, 2024

ஞானத்தேடல் - Ep 134 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - நெய்தல் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  நெய்தல்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

......

காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,


நெய்தல்


வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79 (52)

காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் – குறி 84 (66)


நெய்தல்மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர். குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது. 


1. நீள்நறு நெய்தல் – நீண்ட வாசனையுடைய நெய்தற்பூ. இதன் காம்பு நீண்டது. இது சுனைகளிலும், குளங்களிலும் பூக்கும் (வரி 79). 


2. மணிக்குலைக் கள் கமழ் நெய்தல் – இது குறுகிய காம்பினை உடையது. இது வயல்களில் பூக்கும் (வரி 84).


கவிஞர் இளஞ்சேரன் (இலக்கியம் ஒரு பூக்காடு)


ஆம்பல் – செவ்வாம்பல் / செவ்வல்லி / அரக்காம்பல் ; வெள்ளாம்பல் / அல்லி

குவளை – செங்குவளை ; கருங்குவளை

நெய்தல் – நீலநிறம் / வெளிர் நீலம்

காவி – நீலநிறம் 


நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்

மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய

செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/13-15


மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் - ஐங்குறுநூறு

மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி – பட்டினப்பாலை


வைகறை மலரும் நெய்தல் போல – ஐங் 188/3

நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக – நற் 187/1


“முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக்

கள்கமழ்நெய்தல் ஊதி, எல்படக்

கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்

அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்கும்”

- திருமுருகாற்றுப்படை


பாசடை கலித்த கணை கால் நெய்தல்

விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும் – அகம் 70


அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்

நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401


சிறு பாசடைய நெய்தல் – நற் 27/11,12


பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி

உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது

நெய்தல் பாசடை புரையும் அம் செவி

பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென

அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – நற் 47/1-6


ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்

ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,

புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்

பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,

படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!         

இன்னாது அம்ம, இவ் உலகம்;

இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.

- புறநானூறு 194


ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் 

விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா

பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்

கருமங்கள் வேறு படும்

- நாலடியார் (கூடா நட்பு)


அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவார் உறவு 

- மூதுரை 17


முருகன் தீம்புனல் அலைவாய் – - தொல். களவு.-சூ. 23 ந: பையுண்மாலை.


“வரைவயிறு கிழித்த நிழல்திகழ் நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்' என்பது ஒரு பழம்பாட்டு.


கழனி உழவர் கலி சிறந்து எடுத்த

கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை

அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும்

திரு மணி விளக்கின் அலைவாய்ச்   

- அகநானூறு 266


பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.

பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.


நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட

அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;      

அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,

'பிறர்' எனக் குணம் கொல்லாது,

ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும், மூன்றும், 

உடையை ஆகி, இல்லோர் கையற,

நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்

வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்

நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,

கடு வளி தொகுப்ப ஈண்டிய    

வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!

புறநானூறு 55


தாழ்நீர் = ஆழமான நீர். 18. புணரி = அலைகடல்

Friday, March 22, 2024

ஞானத்தேடல் - Ep 133 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வள்ளி - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  வள்ளி 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

..............


வள்ளி


வள்ளி நுண்ணிடை - அகநானூறு 286

வள்ளிமருங்குல் - புறநானூறு 316


ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதல்அரிந் தற்று


பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,

பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்!

வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத

கானம் கடந்து சென்றார்?

ஐந்திணை ஐம்பது

 


உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே

இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே

மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே

நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து

திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே

- புறநானூறு 109



வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை,

வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க;

மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ,

காஞ்சி நீழல், தமர் வளம் பாடி,

ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த

வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்

தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர!

- அகநானூறு 286

 


பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக்

கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா,

ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்

பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி!

- கலித்தொகை 41


கருளுடை வள்ளி இடை தொடுபு இழைத்த உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடக் கமழ் தார் - பரிபாடல் 21



அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி

நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே! - பரிபாடல் 14


எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களின் முதிர்வாய் வள்ளியங்காடு - முல்லைப்பாட்டு 101,

பாசிலை வாடா வள்ளியங்காடு இறந்தோரே – குறுந்தொகை 216

மலர்ந்த வள்ளியங்கானம் கிழவோன் - ஐங்குறுநூறு 250


மாவள்ளிக் கிழங்கு / மாவலிக் கிழங்கு / மாகாளிக்கிழங்கு

நாட்டில் விளைந்தால் நன்னாரி, மலையில் விளைந்தால் மாகாளி

செவ்வள்ளி அல்லது இராசவள்ளி

மரவள்ளி / ஆள்வள்ளி

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

வெற்றிலை வள்ளிக் கிழங்கு

ஆனைவள்ளி / நீர்வள்ளிக் கிழங்கு



கொடிநிலை, கந்தழி, வள்ளி, என்ற

வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே


 

கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து

காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர்


காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து

காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே.



வள்ளிமலை – 11 திருப்புகழ்


வள்ளியூர் – 1 திருப்புகழ்


வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ

வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே


வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு

வள்ளிமண வாளப் ...... பெருமாளே.


----


கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப


கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச


அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல்


அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே


சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே


வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே


வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.


- திருப்புகழ்


'வள்ளிச் சன்மார்க்கம்' என்பது யாரொருவர் தன்னை இழந்து ('யான் எனது'

என்பன அற்று) தலைவனை நாடுகிறாரோ அவரை இறைவன் தானே நாடிவந்து


அருள் புரிவார் என்பதாகும். இந்த 'வள்ளிச் சன்மார்க்க' நெறியை முருகன்


சிவபெருமானுக்கு உபதேசித்தார்.

 


யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.


Thursday, March 14, 2024

ஞானத்தேடல் - Ep 132 - தவறை உணர்தல் - (Gnanathedal)


 தவறை உணர்தல்


வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்

    பெருந்துயரிடும்பையில் பிறந்து,

கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு

     அவர்த்தரும் கலவியேகருதி,

ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்

    உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்

    நாராயணா வென்னும் நாமம்.


தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,

பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,

கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா.,

அரியே. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன்றிலாமையினால்,

என்றேனுமிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்,

குன்றேய்மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா.,

அன்றேவந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து,

நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்,

தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்

ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே


தந்தைதாய் மக்களே சுற்றமென்

   றுற்றுவர் பற்றி நின்ற

பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ

   பழியெனக் கருதி னாயேல்

அந்தமா யாதியாய் ஆதிக்கும்

   ஆதியாய் ஆய னாய

மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா

   வல்லையாய் மருவு நெஞ்சே


சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்

நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது

தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்

பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே

- திருமந்திரம்


Thursday, March 07, 2024

ஞானத்தேடல் - Ep 131 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாழை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  வாழை 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

..............


வாழை


இருகயல் உண்கண் இளையவளை வேந்தன்

தருகென்றால் தன்னையரும் நேரார் - செருவறைந்து

பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால்

வாழைக்காய் உப்புறைத்தல் இல்.

- பழமொழி நானூறு 338


சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய

அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து,

மயங்கு துயர் உற்ற மையல் வேழம்

உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,

ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்

மா மலைநாடன் கேண்மை

காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.

- குறுந்தொகை 308


அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்

கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்

கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,

கடுங் கண் கேழல் உழுத பூழி,

நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்  

உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை

முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்

மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,

மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி

வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,          

சாந்த விறகின் உவித்த புன்கம்

கூதளம் கவினிய குளவி முன்றில்,

செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்

ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,

நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,            

வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!

கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,

பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர், நாளும்  

ஈயா மன்னர் நாண,

வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.

- புறநானூறு 168


மகளிர் கூந்தலின் மயிர்முடிப்பு வாழைப்பூவினது தோற்றம்போலப் பொலிந்து காணப்படுவதை,

வாழைப் பூ எனப் பொலிந்த ஓதி - சிறுபாணாற்றுப்படை


வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல்

மகளிர் ஓதி அன்ன பூவொடு துயல்வரும் - நற்றிணை 225


பரிசிலர்க்கு வரையாது வழங்கிய வெளிமான் இறந்துபட்டான். அவன் பிரிவினை ஆற்றாது அழும் மகளிர்தம் வளைகள் வாழைப்பூப்போலச் சிதறிவிழுந்ததை,

வாழைப் பூவின் வளை முறி சிதற - புறநானூறு 237



புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை

முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்

குலைவாய் தோயும் கொழு மடல் வாழை

அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்

செம் முக மந்தி ஆரும் நாட!

- நற்றிணை 355


படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்

கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை

ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்

மெல் விரல் மோசை போல, காந்தள்

வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப

- நற்றிணை 188


குவி முகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த                                     

ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு – அகம். 134


சிலம்பில் போகிய செம் முக வாழை

அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,

பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்

நல் வரை நாடனொடு அருவி ஆடியும்

அகநானூறு 302


தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம்,    

வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்,    

கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் 

குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம்,   

திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும்,  360

தீம் பல் தாரம் முனையின், சேம்பின்  

முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர். பகற் பெயல்

- பெரும்பாணாற்றுப்படை

Thursday, February 29, 2024

ஞானத்தேடல் - Ep 130 - இருபா இருபது - (Gnanathedal)


 இருபா இருபது


மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களையும் குறிக்கும். இந்நூல்கள் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவன.


உந்தி களிறு உயர்போதம் சித்தியார்

பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட்

பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு

உண்மைநெறி சங்கற்ப முற்று


சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.


திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்

திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்

சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்

சிவஞான சித்தியார் - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்

இருபா இருபது - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார்

உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்

சிவப்பிரகாசம் - உமாபதி சிவாசாரியார்

திருவருட்பயன் - உமாபதி சிவாசாரியார்

வினாவெண்பா - உமாபதி சிவாசாரியார்

போற்றிப்பஃறொடை - உமாபதி சிவாசாரியார்

கொடிப்பாட்டு - உமாபதி சிவாசாரியார்

நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்

உண்மைநெறி விளக்கம் - உமாபதி சிவாசாரியார்

சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்


கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி

மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் - வெண்ணெய் நல்லூர்

மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை

கைகண்டார் உள்ளத்துக் கண்


இந்நூலின் முதற் செய்யுள் கடவுள் வணக்கமாக அமைந்துள்ளது. கடவுளே குருவாக வந்து அருள்புரிதலினாலும், குரு கடவுளுக்குச் சமமானதாலும், ஆசிரியர் அருள்நந்தி சிவாச்சாரியார், தமது குருவாகின மெய்கண்டதேவரையே கடவுளாகவைத்துப் போற்றித் துதித்துள்ளார்.


'சிவபெருமானே தன்னுடைய நெற்றிக் கண்ணையும். திருநீலகண்டத்தினையும் மறைத்து, திருவெண்ணெய் நல்லூரில் மெய்கண்டதேவர் என்னும் பெயரும் திருவுரு வமும் கொண்டு எழுந்தருளிப் போந்து, உலக மக்களின் மலமாசுகளைப் போக்கியருள்கின்றார். அவரை ஒருமுறை சென்று பொருந்தி நினைத்துத் தொழுபவர்கள், உயிருக்குயிராக உள்ள சிவபெருமானைத் தம்முடைய உள்ளத்தின் கண் தெளிவுறக் கண்டறியும் பேறு பெற்றவர்கள் ஆவர் என்பது இம்முதற்பாடலின் கருத்து. இதனால் சிவபெரு மானே மெய்கண்ட தேவராக எழுந்தருளித் தமக்கு அருள் யூரிந்தனர் என ஆசிரியர் புகழ்ந்து துதிக்கின்றார்


கண் அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என

வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ!

காரா கிரகக் கலி ஆழ்வேனை நின்

பேரா இன்பத்து இருத்திய பெரும!

வினவல் ஆனாது உடையேன் எனது உளம்

நீங்கா நிலை ஊங்கும் உளையால்

அறிவின்மை மலம் பிரிவு இன்மை எனின்

ஓராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல்

திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய்

சுத்தன் அமலன் சோதி நாயகன்

முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா

வேறுநின்று உணர்த்தின் வியாபகம் இன்றாய்ப்

வேறும் இன்றாகும் எமக்கு எம் பெரும!

இருநிலம் தீநீர் இயமானன் கால் எனும்

பெருநிலைத் தாண்டவம் பெருமாற்கு இலாதலின்

வேறோ உடனோ விளம்பல் வேண்டும்

சீறி அருளல் சிறுமை உடைத்தால்.

அறியாது கூறினை அபக்குவ பக்குவக்

குறிபார்த்து அருளினம் குருமுதலாய் எனின்

அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும்

பக்குவம் வேண்டில் பயன் இலை நின்னால்

பக்குவம் அதனால் பயன்நீ வரினே

நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ

தன் ஒப்பார் இலி என்பதும் தகுமே

மும்மலம் சடம் அணு மூப்பு இளமையில் நீ

நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ

உணர்வு எழும் நீக்கத்தை ஓதியது எனினே

இணை இலி ஆயினை என்பதை அறியேன்

யானே நீக்கினும் தானே நீங்கினும்

கோனே வேண்டா கூறல் வேண்டும்

"காண்பார் யார்கொல் காட்டாக்கால்" எனும்

மாண்பு உரை உணர்ந்திலை மன்ற பாண்டியன்

கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞானத்தின்

"ஆட்பால் அவர்க்கு அருள்" என்பதை அறியே


இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி

இயமான னாயெறியுங் காற்று மாகி

அருநிலைய திங்களாய் ஞாயி றாகி

ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்


ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே?

    அடங்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே?

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே?

    உகுகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே?

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே?

    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே?

காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே?

    காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே?


ஆட்பா லவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்

கேட்பான் புகில் அளவில்லை; கிளக்கவேண்டா;

கோட்பா லனவும் விளையும் குறுகாமை எந்தை

தாட்பால்வணங்கித் தலை நின்று இவைகேட்கத் தக்கார்


Monday, February 26, 2024

ஞானத்தேடல் - Ep 129 - சகுனம் - 2 - (Gnanathedal)


 சகுனம் - 2


சகுனம் அல்லது நிமித்தம் தமிழர் வாழ்வில் கலந்த ஒன்று அவற்றை பற்றி இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பது  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  


Sagunam (Signs/Omen) - 2


Watching for signs/omen has been a part of Tamil culture. There are a lot of literary references about these. Let's explore those in this episode


References


சகுனம்

சொல்லரியகருடன்வா னரமரவ மூஞ்சூறு

சூகரங் கீரி கலைமான்

றுய்யபா ரத்வாச மட்டையெலி புன்கூகை

சொற்பெருக மருவு மாந்தை

வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்

விளங்குமிரு நா வுடும்பு

மிகவுரைசெ யிவையெலாம் வலமிருந் திடமாகில்

வெற்றியுண் டதிக நலமாம்

ஒல்லையின் வழிப்பயண மாகுமவர் தலைதாக்க

லொருதுடை யிருத்தல் பற்ற

லொருதும்ம லாணையிட லிருமல்போ கேலென்ன

வுபசுருதி சொல்லியவை யெலாம்

அல்லறரு நல்லவல வென்பர்முதி யோர்பரவு

மமலனே யருமை மதவே

ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள

ரறப்பளீ சுர தேவனே. 62


இதுவுமது


நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை

நாலி சிச்சிலி யோந்திதான்

நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி

நாடரிய சுரபி மறையோர்

வரியுழுவை முயலிவை யனைத்தும்வல மாயிடின்

வழிப்பயண மாகை நன்றா

மற்றுமிவை யன்றியே குதிரையனு மானித்தல்

வாய்ச்சொல் வாவா வென்றிடல்

தருவளை தொனித்திடுதல் கொம்புகிடு முடியரசர்

தப்பட்டை யொலிவல் வேட்டுத்

தணிமணி முழுக்கொழுத லிவையெலா மூர்வழி

தனக்கே நன்மை யென்பர்

அருணகிர ணோதயத் தருணபா னுவையனைய

வண்ணலே யருமை மதவே

ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள

ரறப்பளீ சுர தேவனே. 63


இதுவுமது


தலைவிரித் தெதிர்வருத லொற்றைப் பிராமணன்

றவசி சன்னாசி தட்டான்

றனமிலா வெறுமார்பி மூக்கறைபுல் விறகுதலை

தட்டைமுடி மொட்டைத் தலை

கலன்கழி மடைந்தையர் குசலக்கலஞ் செக்கான்

கதித்ததில் தைல மிவைகள்

காணவெதிர் வரவொணா நீர்க்குட மெருக்கூடை

கனிபுலா லுபய மறையோர்

நலமிகு சுமங்கலை கிழங்கு சூதகமங்கை

நாளும் வண்ணா னழுக்கும்

நசைபெருகு பாற்கலச மணிவளையன் மலரிலைக

னாடியெதிர் வர நன்மையாம்

அலைகொண்ட கங்கைபுனை வேணியாய் பரசணியு

மண்ணலே யருமை மதவே

ளனுதினமு மன தினினை தருசதுர கிரிவள

ரறப்பளீ சுர தேவனே. 64


துடிநூல்


சீருடனே துடிக்கிலுச்சி யிடரேநீங்கும்

     சிறந்தவுச்சிவலந்துடிக்கி லச்சஞ்சொல்லும்

பேருடனேவுச்சியிடம் பெருமையாகும்

    பின்றலையே துடிக்கிற் சத்துருக்களுண்டாம்

சார்புடனேதலையடங்கற் றுடிக்குமாகின்

    றலைவனாற்பெருமை சம்பத்துமுண்டாம்

நேருடனேநெற்றியிடத் துடிக்குமாகின்

    நேர்வார்த்தைசம்பத்து நிறையவாமே


‘நலம் துடிக்கின்றதோ? நான் செய் தீவினைச்

சலம் துடித்து, இன்னமும் தருவது உண்மையோ?-

பொலந் துடி மருங்குலாய்!-புருவம், கண், முதல்

வலம் துடிக்கின்றில; வருவது ஓர்கிலேன்.


‘முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்,

துனி அறு புருவமும், தோளும், நாட்டமும்,

இனியன துடித்தன; ஈண்டும், ஆண்டு என்

நனி துடிக்கின்றன; ஆய்ந்து நல்குவாய்


‘மறந்தனென்; இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்:

அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்,

பிறந்த பார் முழுவதும் தம்பியே பெறத்

துறந்து, கான் புகுந்த நாள், வலம் துடித்ததே


‘நஞ்சு அனையான், வனத்து இழைக்க நண்ணிய

வஞ்சனை நாள், வலம் துடித்த; வாய்மையால்

எஞ்சல; ஈண்டு தாம் இடம் துடிக்குமால்;

“அஞ்சல்” என்று இரங்குவாய்! அடுப்பது யாது?’ என்றாள்


உள்ளகம் நறுந்தா துறைப்பமீ தழிந்து

கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக்

கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்

உண்ணிறை கரந்தகத் தொளித்துநீ ருகுத்தன

எண்ணுமுறை இடத்தினும் வலத்தினுந் துடித்தன

விண்ணவர் கோமான் விழவுநா ளகத்தென் 

- சிலப்பதிகாரம்