Monday, April 22, 2024

ஞானத்தேடல் - Ep 136 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தாழை, தளவம், தாமரை - (Gnanathedal)


குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  தாழை, தளவம், தாமரை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்.  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

தாழை, தளவம், முள் தாள் தாமரை


தாழை


மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம்,

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா, 

கடல் பெரிது, மண் நீரும் ஆகாது அதன் அருகே 

சிறு ஊறல் உண் நீரும் ஆகிவிடும்.


தெங்கின் இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு — புறநானூறு 29

கோள் தெங்கின் குலை வாழை — பொருநராற்றுப்படை 

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த — பெரும்பாணாற்றுப்படை 


தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின் (நன்னூல் 187) 


நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கொல் எனவேண்டா – நின்று

தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்.

மூதுரை, ஔவையார்


வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி

வேய்முற்றி முத்துதிரும் வெற்ப அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழம்.

- பழமொழி நானூறு


தளவம்


பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம் முகை,

ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப,

ஐங்குறுநூறு 447


புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை

நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,

காடே கம்மென்றன்றே; அவல

அகநானூறு 23


பிடவம் மலர, தளவம் நனைய

கார்கவின் கொண்ட கானம் காணின்

ஐங்குறுநூறு 499


தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை

முகைதலைத் திறந்த நாற்றம் புதல்மிசை

பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல

வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று

காரிது பருவம் ஆயின்

வாரா ரோநம் காத லோரே.

- குறுந்தொகை 382


தாமரை


செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி

பாதம் போற்றும் வாதவூர் அன்ப

பா எனப்படுவது உன் பாட்டு

பூ எனப்படுவது பொறிவாழ் பூவே

- நால்வர் நான்மணிமாலை


நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்.

- மூதுரை, ஔவையார்


மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்

இதழகத் தனைய தெருவம் இதழகத்

தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்

தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்

தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர்

பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த

நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப

ஏம வின்றுயில் எழுதல் அல்லதை

வாழிய வஞ்சியும் கோழியும் போலக்

கோழியின் எழாதெம் பேரூர் துயிலே.

- பரிபாடல் திரட்டு 8


பொய்கை. போர்க்களம் புறவிதழ் புலவு வாட்படை புல்லிதழ்

ஐய கொல்களி றகவித ழரச ரல்லிதன் மக்களா

மையில் கொட்டையம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையாற்

பையவுண்டபின் கொட்டைமேற் பவுத்திரத் தும்பி பறந்ததே'

- சீவக சிந்தாமணி


முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக்

கள்கமழ்நெய்தல் ஊதி, எல்படக்

கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்

அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்கும்

- திருமுருகாற்றுப்படை


மன்உயிர் அறியாத் துன்அரும் பொதியில்

சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,

வேனிலானே தண்ணியள்; பனியே,

வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,

அலங்கு வெயிற் பொதிந்த தாமரை

உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே

- குறுந்தொகை 376- (படுமரத்து மோசிக்கொற்றனார்)


Biophysics and Physiology of Temperature Regulation in Thermogenic Flowers

Thermoregulating lotus flowers – Nature 1996


விளக்கின்அன்ன சுடர்விடு தாமரை - நற்றிணை 310

சுடர்ப் பூந்தாமரை - அகநானூறு 6

எரி அகைந்தன்ன தாமரை - அகநானூறு 106


வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்

கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்

- நற்றிணை 290


தண் தாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகரா மண்டூகம்

வண்டோ கானத்திடை இருந்தும் வந்து கமலமது உண்ணும்

பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரைக்

கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே

- விவேகசிந்தாமணி


No comments:

Post a Comment