Showing posts with label Science. Show all posts
Showing posts with label Science. Show all posts

Sunday, May 14, 2023

ஞானத்தேடல் - Ep 85 - பதார்த்த குண விளக்கம் - (Gnanathedal)


 பதார்த்த குண விளக்கம் 


தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் வைத்திய வித்வன்மணி சி. கண்ணுசாமிப் பிள்ளை அவர்கள் இயற்றிய பதார்த்த குண விளக்கம்  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  


Padhartha Guna Chinthamani


Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Vaidhiya Vidhvanmani C. Kannusamy Pillai has written a text call Padhartha Guna Chinthamani. Let's explore it in this episode


References


வைத்திய வித்வன்மணி சி.  கண்ணுசாமிப்  பிள்ளை அவர்கள்


- மூல, தாது, ஜீவ வர்க்கம்

- Binomial Nomenclature


பித்தகாரி - Cholagogue

விஷநாசகாரி - Antidote

தாதுக்ஷீணரோதி - Antiseptic

பூதிகந்தநாசினி - Disinfectant

சமனகாரி - Sedative

உற்சாககாரி - Stimulant

பலகாரி - Tonic

மலகாரி - Laxative

நித்திராகாரி - Hypnotic

கபஹரகாரி - Expectorant


- தேகத்தின் உள்ளுறுப்புகளுக்கு பலம் கொடுக்கும் பதார்த்தங்கள்

- விஷமித்த பதார்த்தங்களுக்கு முறிவு


அளத்தல்


60 துளி - 1 தேக்கரண்டி (~3.5ml)

8 தேக்கரண்டி - 1 அவுன்ஸ் (~28ml-30ml)

6 அவுன்ஸ் - 1 ஆழாக்கு (~180ml)

4 ஆழாக்கு - 1 குப்பி (புட்டி) (~700ml)

8 ஆழாக்கு - 1 படி (~1.4L)

சங்கு (பாலடை) - 3/4 1 அவுன்ஸ்


நிறுத்தல்.


4 நெல் எடை - 1 குன்றிமணி

4 குன்றிமணி - 1 பண எடை (1/2 gm)

32 குன்றிமணி - 1 விராகனெடை (4gm)

40 குன்றிமணி - 1 கழஞ்சு (5gm)

10 விராகனெடை - 1 பலம் (40gm)


8 குன்றிமணி - 1 gm


வேறு.


1 ரூபாய் எடை- 1 தோலா (~13-15gm)

3 தோலா - 1 பலம் (40gm)

8 பலம் - 1 சேர் (320gm)

5 சேர் - 1 வீசை (1600gm)

8 வீசை - 1 மணங்கு (12.8kg)

Thursday, May 11, 2023

ஞானத்தேடல் - Ep 83 - தமிழும் அறிவியலும் - 4 (திருமூலர் - அணு) - (Gnanathedal)


 தமிழும் அறிவியலும் - 4

தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  

Tamil and Science - 1

Let's see about the details found in Tamil literature about science in this episode


References

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே.


அணுவுள் அவனும் அவனுள் அணுவும்

கணுவற நின்ற கலப்ப துணரார்

இணையிலி ஈசன் அவன்எங்கு மாகித்

தணிவற நின்றனன் சராசரந் தானே.

Sunday, February 12, 2023

ஞானத்தேடல் - Ep 74 - காலக்கணக்கு - (Gnanathedal)


 காலக்கணக்கு

2 கண்ணிமை கொண்டது - கைந்நொடி 

 2 கைந்நொடி கொண்டது - மாத்திரை

 2 மாத்திரை கொண்டது - குரு 

 2 குரு கொண்டது - உயிர் 

 9 உயிர் கொண்டது - க்ஷணிகம் 

12 க்ஷணிகம் கொண்டது - விநாடி 

60 விநாடி கொண்டது - நாழிகை

 7.5 நாழிகை கொண்டது - சாமம்

 4 சாமம் கொண்டது - பொழுது 

 2 பொழுது கொண்டது - நாள்

30 நாள் கொண்டது - மாதம்

12 மாதம் கொண்டது - வருஷம். 


யுகங்கட்கு ஆண்டு அறிதல்


இருநூற் றொருபதுடன் ஆறா யிரத்தை 

இருநால் இருமூன்றின் நாலில் - நிருமித்த 

பின்னிரண்டு தன்னில் பெருக்கில் திருமாதே 

நண்ணுமொரு நாலுகத்தின் சீர்


உரை: அழகிய திருமகளுக்கு ஒப்பானவளே! கிரேதாயுகம், திரேதாயுகம். துவாபரயுகம், கலியுகம் என்னும் நான்கு யுகங்களுக்கும் ஆண்டுகள் எவ்வளவு எனின். இருநூற்றுப் பதினாறாயிரத்தை (உாகயசுசூ) எட்டிலும் ஆறிலும் நாலிலும் இரண்டிலும் பெருக்க, எட்டில் பெருக்கிய பதினேழு லட்சத்து இருபத்தெண்ணாயிரம் கிரேதாயுகத்து ஆண்டு எனவும். ஆறில் பெருக்க, பன்னிரண்டு இலட்சத்துத் தொண்ணூற்று ஆறாயிரம் திரோதாயுகத்து ஆண்டு எனவும். நான்கில் பெருக்க எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம் துவாபரயுகத்து ஆண்டு எனவும். இரண்டில் பெருக்க நான்கு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் கலியுக ஆண்டு எனவும். இந்த நான்கு யுகமுங்கூடிய ஆண்டு நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம்: இஃதொரு சதுர்யுகம் என்று சொல்லப்படும்.

தேவகாலம் அறிதல்


எண்ணுஞ் சதுர்யுகமீ ராயிரங் கூடில் 

நண்ணுஞ் சதுர்முகத்தோன் நாளாகும் பெண்ணணங்கே

ஐயாறு திங்களே ஆறிரண்டும் ஆனதே 

பொய்யாத நூறும் புகும்.


உரை : திருமகளுக்கு ஒப்பானவளே! மேற்கூறியவாறு நான்குயுகம் இரண்டாயிரம் கொண்டது நான்முகனுக்குப் பேராயுள். இந்தப் பேராயில் நூறு (m) சென்றால் ஆதிநான்முகனுக்கு யுகம் முடிவு.

நான்கு யுகமுங் கூடின ஆண்டு நாற்பத்துமூன்று இலட்சத்து இருபதாயிரம் இது மகாயுகம் என்று சொல்லப்படும். இந்த மகாயுகம் பதினெட்டுச் சென்றால் ஒரு மனுவுக்கு அரசாட்சி: இந்த மனுவுக்கு அரசாட்சி எழுபத்து நான்கு சென்றால் இந்திரனுக்கு அரசாட்சி. இந்திரனுக்கு இந்த அரசாட்சி இருநூற்று எழுபது சென்றால் நான்முகனுக்கு ஒருநாள் இந்நாள் முப்பது சென்றால் ஒரு திங்கள்: இத்திங்கள் பன்னிரண்டு சென்றால் ஓர் ஆண்டு. இந்த ஆண்டு நூறு சென்றால் நான்முகனுக்கு வாணாள் முடிவு. இவ்வாறு முந்நூற்று அறுபது சென்றால் ஆதிநான்முகனுக்குப் பிரளய காலம் பிரளய காலம் நூறு சென்றால் திருமாலுக்கு ஒரு கற்பம் இந்தக் கற்பம் நூறு சென்றால் உரோமச மகா இருடிக்கு உடம்பிலே ஒரு மயிர் உதிரும். இந்த உரோமச மகா இருடிக்குப் பத்துக்கோடி மயிர் உதிர்ந்தால். மீனச மகா இருடிக்கு உடம்பிலே ஒரு செதிள் உதிரும். இவ்வாறு மீனச மகாஇருடிக்கு ஒரு கோடி செதிள் உதிர்ந்தால் பரத்துவாச மகாஇருடிக்கு ஒரு நிமிடம். இந்தப் பரத்துவாச மகாஇருடிக்கு இவ்வாறு முப்பது கோடி சென்றால் மகாசத்தி தலைமயிர் அவிழ்த்து முடிப்பாள். இவ்வாறு எழுநூற்று எண்பதுகோடி சத்திகள் தலைமயிர் அவிழ்த்து முடித்தால். இறைவனுக்கு அண்மையில் இருக்கின்ற உருத்திரமாகாளிக்கு ஒரு நிமிடம் என்று சொல்லப்பெறும்.

Wednesday, February 08, 2023

ஞானத்தேடல் - Ep 72 - தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) - (Gnanathedal)


 தமிழும் அறிவியலும் - 3 (பொய்கையாழ்வார்) 


தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Tamil and Science - 3


Let's see about the details found in Tamil literature about science in this episode


References

பொய்கையாழ்வார் கூறும் வானயியல்  


வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று


பூமியை அகலாகவும் அதைச் சுற்றியுள்ள கடலே நெய்யாகவும் வெப்பக் கதிர்வீசும் சூரியன் விளக்காகவும் சிவந்த கடர்வீசும் சங்கரத்தை ஏத்திய பெருமானது திருவடிகளில் இப்பாமாலையாகிய பூமாலையைச் சாத்தினேன், எதற்காகவென்றால் பகவத் கைங்கர்யத்திற்கு (இடையூறாக உள்ள) துன்பக்கடல் தீங்குவதற்காக


என்று கடல்கடைந்தது? எவ்வுலகம் நீரேற்றது?

ஒன்றும் அதனை உணரேன்நான் - அன்றது

அடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி இதுநீ

படைத்திடந் துண்டுமிழ்ந்த பார்


பகவானே நீ என்று கடலைக் கடைந்தாய். எப்போது இவ்வுலகத்தை நீரால் நிரப்பினாய். இது ஒன்றும் எனக்குத் தெரியாது. அன்றொருநாள் கடலை அடைத்துப் பாலம் அமைக்கிறாய், அதை உடைக்கிறாய், அதிலேயே படுத்துத் தூங்குகிறாய். இந்த உலகத்தைப் படைக்கிறாய், பெயர்த்து எடுக்கிறாய், அதை உண்கிறாய்.


பொய்கையாரின் முக்கியமான பாடல்களில் ஒன்று இது. விசித்திரமான இச்செயல்கள் அனைத்தையும் செய்வது கடவுளே என்பது உட்கருத்து.


தேவர்களுக்காகக் கடலைக் கடைத்தது எந்த நாள்? மாவலி தாரை வார்த்த நீரை ஏற்றுப் பெற்றது எத்த உலகம்? அவற்றை தான் அடியோடு அறியேன். அக்கடலானது இலங்கைக்குச் செல்ல முனைந்தபோது ஸ்ரீராமளால் மலைகளைக் கொண்டு திருஅணை கட்டி தூர்க்கப்பட்டது. இராவணவதம் முடிந்து திரும்பியபோது அவ்வணை உடைக்கப்பட்டது. எப்போதும் பள்ளிகொள்ளும் இடமாகக் கொள்ளப்பட்டது. இவ்வுலக மாளது பெருமானான உன்னால் படைக்கப்பட்டது. வராக அவதார காலத்தில் பெயர்த்து எடுக்கப்பட்டது. பிரளய வெள்ளம் கோத்தபோது. திருவயிற்றில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுப் பிள்பு வெளிப்படுத்தப்பட்டது.


இறைவனிடம் வினா எழுப்பும் முகமாக அமைத்து வினைச்சொல் வழி இறைவன் செயல்களை வெளிப்படுத்துகிறார் பொய்கையாழ்வார். திருப்பாற் கடலைக் கடைந்தது, வாமனனாக உலகை அளந்தது, இராமனாக இலங்கைக்கு அணைகட்டி அடைத்தது, உலகைப் படைத்தது, மண்ணை உண்டது, உமிழ்ந்தது ஆகிய செய்திகளை ஒரே பாசுரத்தில் சொல்லி விடும் திறன் வியப்பிற்குரியது.

Saturday, January 14, 2023

ஞானத்தேடல் - Ep 68 - தமிழும் அறிவியலும் - 2 (திருமூலர்) - (Gnanathedal)

 

தமிழும் அறிவியலும் - 2


தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Tamil and Science - 2


Let's see about the details found in Tamil literature about science in this episode


References


திருமூலர் சொல்லும் செல் அளவு


மேவிய சீவன் வடிவது சொல்லிடில்

கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு

மேவிய கூறது ஆயிர மாயினால்

ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே.


நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி

உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்

பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்

சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே

Sunday, November 27, 2022

ஞானத்தேடல் - Ep 65 - தமிழும் அறிவியலும் - 1 (ஆண்டாள் மழை வானியல்) - (Gnanathedal)


தமிழும் அறிவியலும் - 1


தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Tamil and Science - 1


Let's see about the details found in Tamil literature about science in this episode


References


ஆண்டாள் பாசுரம்


ஆழி மழைக்கண்ணா ஒன்றும்நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி

ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் 

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து 

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல் 

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்


Thursday, October 27, 2022

ஞானத்தேடல் - Ep 61 - வானசாஸ்திரம் - 3 - (Gnanathedal)

 

வானசாஸ்திரம் - 3


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 3


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்

சலமிகுதி துன்பந் தருக்கும் நலமில்லை

நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை

பாலுமின்றிச் செயபுவனம் பாழ்


பிலவ ஆண்டில் மழை கொஞ்சமாக பெய்யும் அரசாள்பவர் கோபம் அதிகம் கொள்வர் கொடுமைகள் புரிவர் மக்களுக்கு நலமில்லை. கால்நடைகள் பெருத்த அளவில் மடியும். விவசாயம் பொய்க்கும். பாலும் உணவும் இன்றி உலகம் பாழாகும்


சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்

அவமாம் விலைகுறையு மான்சாம் சுபமாகும்

நாடெங்கு மாரிமிகு நல்லவிளை வுண்டாகுங்

கேடெங்கு மில்லையதிற் கேள்


சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே பொருட்கள் வீணாகி அந்நாடு பாழாகும். மணப்பண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை இவ்வாண்டில்


சோப கிருதுதன்னிற்  றொல்லுலகெல் லாஞ்செழிக்குங்

கோப மகன்று குணம்பெருகுஞ் சோபனங்கள்

உண்டாகு மாரி யொழியாமற் பெய்யும்மெல்லாம்

உண்டாகு மென்றே யுரை


சோபகிருது ஆண்டில் உலகில் எல்லாம் செழிப்பாக இருக்கும். மக்களிடையே கோபகுணம் அகன்று நல்ல எண்ணங்கள் பெருகும். நற்செயல்கள் பெருகும் மழை நன்றாக பெய்யும் எல்லா வித்துக்களும் விளையும் நன்மைகள் உண்டாகும்.


கோரக் குரோதிதனிற் கொல்லைமிகுங் கள்ளரினாற்

பாரிற் சனங்கள் பயமடைவார் கார்மிக்க

அற்ப மழைபெய்யு மஃகம் குறையுமே

சொர்ப்பவிளை உண்டெனவே சொல்


குரோதி வருடம் கோரம் மிகுந்ததாக இருக்கும். கொலைகள் அதிகமாக நடக்கும். திருடர்களினால் மக்கள் மிகுந்த அச்சம் கொள்வர். மழை குறைவாக பெய்யும் யாகங்கள் குறையும். விளைச்சல் குன்றும்


இடைக்காடர் 60 வருட பலன்கள்


https://www.mediafire.com/file/st1eqzeoq45cxf9/Edaikaadar-60-Varuda-Palangal.pdf/file

Monday, October 03, 2022

ஞானத்தேடல் - Ep 57 - வான சாஸ்திரம் - 1 - (Gnanathedal)

 

வான சாஸ்திரம் - 1


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 1


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


நட்சத்திரங்கள்


- விடிவெள்ளி -Venus

- ஆமைவெள்ளி - Orion's Belt

- கூட்டுவெள்ளி - Pleiades cluster

- கட்டில்கால் - Orion Constellation

- செட்டிக் குடிகெடுத்தான்

- கார்த்திகை நட்சத்திரம் - Pleiades cluster

- திருவாதிரை - Betelgeuse


ஆண்டாள் பாசுரம்


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

      கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

      வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்

      குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன்னாளால்

      கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்